Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!

1. பிளாஸ்டிக் குடுவை : பெப்சி அல்லது ஸ்பிரைட் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அடிப்புறத்தில் இருந்து 8 செ.மீ அளவில் அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் அந்த முனைகளை சுற்றி, W வடிவத்தில் வருமாறு கத்தரிக்கோலால் 1/2 இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் 1 செ.மீ அளவை, மேலிருந்து அளந்து அதனை வெளிப்புறமாக மடக்கிவிடவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி, பூக்களை வாங்கி அதில் வைத்து, டைனிங் டேபிள், டிவி அல்லது ஷோகேஸ் போன்றவற்றில் வைத்தால் அழகாய் இருக்கும்.
2. பாட்டில் காயின் பர்ஸ் : தேவையான பொருட்கள் : இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், ஜிப், ஊசி, நூல். முதலில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு, அதனை அடிப்பகுதியில் இருந்து 3 செ.மீ நீளத்திற்கு அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் ஊசியை நூலில் கோர்த்து வைத்துக் கொண்டு, அந்த ஜிப்பை இரண்டு பாட்டில்களின் முனைகளிலும் வைத்து தைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் எந்த ஒரு சிறு பொருளையும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
3. பூத்தொட்டி : ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு, அதன் பாதியை வெட்டி, அதில் மண்ணை நிரப்பி செடிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். இல்லையென்றால் பாட்டிலின் நடுபகுதியில் செவ்வக வடிவத்தில் வெட்டி, அதில் மண்ணை போட்டு செடிகளை வைத்து, சுவற்றில் இரண்டு ஆணியை அடித்து, பாட்டிலின் இரு முனைகளிலும் கயிற்றைக் கட்டி, ஆணியில் தொங்க விடலாம். இவ்வாறு செய்தால் வீடு பார்க்க அழகாக இருப்பதோடு, பச்சை பசேலென்று இருக்கும்.
4. புல்வெளித் தெளிப்பான் : தோட்டத்தில் இருக்கும் புல்வெளிக்கு நீரைத் தெளிக்கும் இயந்திரம் போலவும் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஒரு பிளாஸ்டிக் பாட்டில், 10 பேனா கவர் மட்டும் போதும். முதலில் பேனாவை மூன்று இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் பாட்டிலில் ஆங்காங்கு பேனாவை நுழைக்கும் அளவு ஓட்டையை போட வேண்டும். பிறகு அந்த பேனாவை பசையில் தொட்டு அந்த ஓட்டைகளில் நுழைத்து நன்கு காய வைக்க வேண்டும். பிறகு அதனை தோட்டத்தில் இருக்கும் பைப்பில் மாட்டினால் தண்ணீரானது அழகாக செடிகளுக்குத் தெளிக்கும்.
இவ்வாறெல்லாம் செய்தால், வீடு அழகாக இருப்பதோடு, சுற்றுசூழலையும் அழகாக, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications











