Just In
- 11 min ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 47 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 2 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
Don't Miss
- Movies இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாத்?.. வேட்டையன் நிலைமை இதுவா?
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!
1. பிளாஸ்டிக் குடுவை : பெப்சி அல்லது ஸ்பிரைட் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அடிப்புறத்தில் இருந்து 8 செ.மீ அளவில் அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் அந்த முனைகளை சுற்றி, W வடிவத்தில் வருமாறு கத்தரிக்கோலால் 1/2 இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் 1 செ.மீ அளவை, மேலிருந்து அளந்து அதனை வெளிப்புறமாக மடக்கிவிடவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி, பூக்களை வாங்கி அதில் வைத்து, டைனிங் டேபிள், டிவி அல்லது ஷோகேஸ் போன்றவற்றில் வைத்தால் அழகாய் இருக்கும்.
2. பாட்டில் காயின் பர்ஸ் : தேவையான பொருட்கள் : இரண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், ஜிப், ஊசி, நூல். முதலில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு, அதனை அடிப்பகுதியில் இருந்து 3 செ.மீ நீளத்திற்கு அளந்து வெட்டிக் கொள்ளவும். பின் ஊசியை நூலில் கோர்த்து வைத்துக் கொண்டு, அந்த ஜிப்பை இரண்டு பாட்டில்களின் முனைகளிலும் வைத்து தைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் எந்த ஒரு சிறு பொருளையும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
3. பூத்தொட்டி : ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு, அதன் பாதியை வெட்டி, அதில் மண்ணை நிரப்பி செடிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். இல்லையென்றால் பாட்டிலின் நடுபகுதியில் செவ்வக வடிவத்தில் வெட்டி, அதில் மண்ணை போட்டு செடிகளை வைத்து, சுவற்றில் இரண்டு ஆணியை அடித்து, பாட்டிலின் இரு முனைகளிலும் கயிற்றைக் கட்டி, ஆணியில் தொங்க விடலாம். இவ்வாறு செய்தால் வீடு பார்க்க அழகாக இருப்பதோடு, பச்சை பசேலென்று இருக்கும்.
4. புல்வெளித் தெளிப்பான் : தோட்டத்தில் இருக்கும் புல்வெளிக்கு நீரைத் தெளிக்கும் இயந்திரம் போலவும் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஒரு பிளாஸ்டிக் பாட்டில், 10 பேனா கவர் மட்டும் போதும். முதலில் பேனாவை மூன்று இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பின் பாட்டிலில் ஆங்காங்கு பேனாவை நுழைக்கும் அளவு ஓட்டையை போட வேண்டும். பிறகு அந்த பேனாவை பசையில் தொட்டு அந்த ஓட்டைகளில் நுழைத்து நன்கு காய வைக்க வேண்டும். பிறகு அதனை தோட்டத்தில் இருக்கும் பைப்பில் மாட்டினால் தண்ணீரானது அழகாக செடிகளுக்குத் தெளிக்கும்.
இவ்வாறெல்லாம் செய்தால், வீடு அழகாக இருப்பதோடு, சுற்றுசூழலையும் அழகாக, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.