Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஆயுர்வேதத்தின் படி உணவை இத்தனை முறை மென்று சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு வாழலாமாம்... இனிமே இப்படி சாப்பிடுங்க...
உணவை நன்கு சாப்பிட வேண்டுமென்று நம் பெற்றோர்கள் சிறுவயது முதலே நம்மிடம் அடிக்கடி சொல்லி நாம் கேளிவிப்பட்டிருப்போம், உண்மையில் விழுங்குவதற்கு முன் உணவை நன்கு மெல்ல வேண்டும். உணவு எவ்வளவு மென்மையாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, உணவை மெல்லாமல் விழுங்குவது நாம் நினைப்பதை விட நம் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும்.
ஆயுர்வேதமும் இதைத்தான் கூறுகிறது, நல்ல ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேத விதிகளின்படி, உங்கள் உணவை உண்ணும் முன் 32 முறை மென்று சாப்பிட வேண்டும். 32 முறை என்பது சற்று அதிகமாகத் தோன்றலாம் ஆனால் ஆயுர்வேத வல்லுனர்கள் இதன் மூலம் கூறுவது என்னவென்றால், மெல்லும் போது 32 வரை எண்ண வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், நீங்கள் போதுமான அளவு மெல்லுகிறீர்கள் என்பதையும், முழு உணவையும் விழுங்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உணவை இப்படி மெல்ல வேண்டுமென்று கூறுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது
நீங்கள் உணவை நன்றாக மெல்லும்போது, அது உங்கள் வாயிலும் மிகச் சிறிய துண்டுகளாக உடைந்து விடும். உங்கள் வாயிலிருந்தே செரிமானம் தொடங்குகிறது, மேலும் சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தைப் பெற, உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நமது உமிழ்நீரில் பல செரிமான நொதிகள் உள்ளன, இது உணவு முறிவையும் அதிகரிக்கிறது. உணவு ஏற்கனவே உடைந்துவிட்டால், உங்கள் உடலும் அதை உடைத்து, அதை சிறப்பாகவும் வேகமாகவும் உறிஞ்சுவது எளிது.
எடையை நிர்வகிக்க உதவுகிறது
நீங்கள் உணவை மெல்லுவது சிறப்பாக இருந்தால், உங்கள் செரிமான செயல்முறை வேகமாக இருக்கும், அதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருக்க உதவும். இது உங்கள் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.
ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது
நீங்கள் முழு உணவையும் விழுங்கினால், உடல் அதை உடைப்பது மிகவும் கடினம், மேலும் இது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து 100 சதவிகிதம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யாது. இருப்பினும், நீங்கள் உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட்டால், அதாவது 32 முறை மென்றால், அது உங்கள் வாயில் இருக்கும் போது உணவு ஏற்கனவே பாதி செரிமானமாக இருப்பதை உறுதி செய்கிறது. உணவு ஏற்கனவே உடைந்துவிட்டது, இதனால், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகமாக இருக்கும் மற்றும் செரிமானம் வேகமாக இருக்கும்.
அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது
உங்கள் உணவை மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடும்போது, நீங்கள் முழுமையாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்கள். இது நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கவும், இதனால் உங்களின் எடையை பராமரிக்கவும் உதவுகிறது, சீரான வளர்சிதை மாற்றம் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் / அதிகப்படியான கலோரி நுகர்வு ஆகியவற்றை தடுக்கிறது.
கவனமாக சாப்பிட வழிவகுக்கிறது
உணவை கவனமாக சாப்பிட வேண்டியது அவசியம், மேலும் இது உங்கள் மூளையை விழிப்புடன் வைத்திருக்கவும், உண்மையில் கவனத்தை அதிகரிக்கிறது. விழிப்புடன் சாப்பிடுவது உங்களை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், நீங்கள் நிரம்பியதாக உணர்ந்தவுடன் உங்கள் மூளையை எச்சரிக்கும், இது உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட உதவும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
