பெண் குழந்தைகளுக்கு அழகா இருக்கும்னு காது குத்துறாங்க... ஆண் குழந்தைகளுக்கு ஏன் காது குத்துறாங்க தெரியுமா?

காது குத்துதல் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஒரு நடைமுறையாகும், குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இது முக்கியமான விழாவாகும். ஆயர்வேதத்தில் இது கர்ண வேதா என்றும் அழைக்கப்படுகிறது.

மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைக் குறிக்கவும், கலாச்சார பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைக் குறிக்கவும் செய்யப்படும் 16 சடங்குகளில் இதுவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் திருமணத்திற்கு முன் மணமக்கள் இருவருமே காது குத்தியிருக்க வேண்டும் என்பது சொல்லப்படாத விதியாகும்.

Why Ear Piercing Is Important in India and Benefits of Ear Piercing in Tamil

காது குத்துவது அழகிற்கு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இந்த பதிவில் குழந்தைகளுக்கு காது குத்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இனப்பெருக்க ஆரோக்கியம்

ஆயுர்வேதத்தின் படி, காது மடல் மையத்தில் ஒரு முக்கியமான புள்ளியைக் கொண்டுள்ளது. இந்த புள்ளி இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். மேலும், காது குத்துவது பெண்களின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க உதவுகிறது.

மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கும்

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்துவது மூளையின் சரியான வளர்ச்சியை உறுதி செய்யும். காது மடல்களில் வலது அரைக்கோளத்தை மூளையின் இடது அரைக்கோளத்துடன் இணைக்கும் மெரிடியன் புள்ளி உள்ளது.

இந்த புள்ளியைத் துளைப்பது மூளையின் இந்த பகுதிகளைச் செயல்படுத்த உதவுகிறது. அக்குபிரஷர் சிகிச்சையின் கோட்பாடுகள் இந்த மெரிடியன் புள்ளிகள் தூண்டப்படும்போது, ​​அது மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறுகின்றன.

ஆற்றலை ஊக்குவிக்கும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதணிகளை அணிந்தால், அவர்களின் உடலில் ஆற்றல் ஓட்டம் பராமரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

கண்பார்வையை ஊக்குவிக்கும்

காதின் மையப் புள்ளியானது பார்வைக்கான மையம் அமைந்துள்ள இடமாகும். இவ்வாறு, இந்த புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பது கண்பார்வையை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

காது ஆரோக்கியம்

ஆயுர்வேதத்தின்படி, காது குத்தப்படும் இடத்தில் இரண்டு முக்கியமான அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன, அவை முதன்மை உணர்திறன் மற்றும் முதன்மை மூளை புள்ளிகள். இந்த இரண்டு புள்ளிகளும் உங்கள் குழந்தையின் செவித்திறனை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்குபிரஷர் நிபுணர்கள், டின்னிடஸ் என்னும் காதுகளில் ஏற்படும் நோயின் அறிகுறிகளைப் போக்க இது ஒரு நல்ல இடம் என்று கூறுகிறார்கள்.

OCD மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்

மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி காது குத்துவது ஹிஸ்டீரியா போன்ற நிலைமைகளைத் தடுக்கிறது. அக்குபிரஷர் நிபுணர்களின் கூற்றுப்படி, மூளையின் செயல்பாட்டை நிர்வகிக்கும் பெருமூளையின் முக்கிய இடமாகவும் இந்தப் பகுதி உள்ளது. இந்த புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பது OCD மற்றும் பதட்டம் போன்ற மன நோய்களைத் தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.

செரிமானத்தை ஊக்குவிக்கும்

காதின் இந்த புள்ளியின் தூண்டுதல் ஒருவரின் செரிமான அமைப்பை பராமரிக்கும் என்று கூறப்படுகிறது. இது பசியின்மைக் குறைக்கும் புள்ளியாகும் மற்றும் அதன் தூண்டுதல் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

விந்தணு உற்பத்தி

ஆண்களுக்கு காது குத்துவது விந்தணு உற்பத்திக்கு உதவும் என்று நம்பப்படுகிறது, அதனால்தான் ஆண்களுக்கு காது குத்துவது அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்க பல்வேறு சமூகங்களில் கட்டாய பாரம்பரியமாக உள்ளது.

எந்த வயதில் காது குத்த வேண்டும்?

பொதுவாக குழந்தை பிறந்த 10, 12 அல்லது 16வது நாளில் காது குத்த வேண்டும் அல்லது 6, 7 அல்லது 8வது மாதத்தில் காது குத்த வேண்டும். இல்லையெனில், குழந்தை பிறந்த ஆண்டிலிருந்து எந்த ஒற்றைப்படை ஆண்டிலும் காது குத்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion