Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது தெரியுமா? விஞ்ஞானி சொன்ன உறுதியான செய்தி
இன்றைய சூழலில் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசிக்குத்தான்.
இன்றைய சூழலில் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசிக்குத்தான். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் COVID -19 கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

தடுப்பூசியை கண்டறிவதற்கான அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும் அதனை சோதனை செய்வதற்கான போதுமான காலம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். முழுமையாக சோதிக்கப்படாத தடுப்பூசி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சி பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது?
இந்த தடுப்பூசி அமெரிக்காவில் விலங்கு சோதனைக்கு முன்னேறியுள்ளது, அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நாங்கள் உறுதிசெய்தவுடன், அது மனித சோதனைகளாக முன்னேறும் "என்று தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் இருக்கும் பேராசிரியர் பெட்ரோவ்ஸ்கி கூறியுள்ளார். அனைத்து சோதனைகளும் முடியும்வரை எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாமென்று கூறியுள்ளார்.

எப்போது தொடங்கப்பட்டது?
COVID-19 இன் மரபணு வரிசை ஜனவரி மாதத்தில் கிடைத்தவுடன், அவர்கள் உடனடியாக இதைப் பயன்படுத்தினர், SARS கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய அவர்களின் முந்தைய அனுபவத்துடன் இணைந்து, ஸ்பைக் புரதம் எனப்படும் முக்கிய வைரஸ் இணைப்பு மூலக்கூறின் தன்மையைக் கண்டறிந்தனர். வைரஸ் மனித உயிரணுக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடையாளம் காண ஸ்பைக் புரதத்தின் கணினி மாதிரிகள் மற்றும் அதன் மனித ஏற்பியான ACE2 ஐப் பயன்படுத்தினோம், பின்னர் இந்த செயல்முறையைத் தடுக்க ஒரு தடுப்பூசியை வடிவமைக்க முடிந்தது. என்று அவர் கூறியுள்ளார்.

COVID 19 மற்ற கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இது இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. SARS வைரஸுடன் கொரோனா வைரஸ் நெருங்கிய தொடர்புடையது, மேலும் இவை ஒரே மாதிரியாக செயல்படுகிறது. சார்ஸ் வைரஸின் இறப்பு விகிதம் 10% சதவீதமாக இருந்தது. இன்னும் முழுவதும் கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் 1-3% சதவீதமாக உள்ளது. இது இன்னும் அதிக ஆபத்தான வைரஸாக மாறும், ஏனெனில் இது 30 மனிதர்களில் ஒருவரைக் கொல்கிறது.

கொரோனா வைரஸின் தனித்துவம் என்ன?
கொரோனா வைரஸின் தனித்துவம் என்னவெனில்மனிதரிடமிருந்து மனிதனுக்கு விரைவாக பரவுவதற்கான அதன் திறனும், அதைச் சுமக்கும் நபருக்கு அறிகுறிகள் இல்லாதபோதும் பிறருக்கு பரவுவதற்கு திறனும் ஆகும். இந்த பண்புகள் மிகவும் ஆபத்தானவை அதேசமயம் இதனை கட்டுப்படுத்துவது கடினம் ஆகும்.

தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியுமா?
கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் SARS மற்றும் MERS வைரஸ் பற்றி ஏற்கனவே பல நாடுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் SARS வைரஸ் அமைப்புடன் தொடர்புடைய கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறிவது சாத்தியமானதுதான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எவ்வளவு விரைவில் தடுப்பூசியை எதிர்பார்க்கலாம்?
மனிதர்கள் மீதான தடுப்பூசிகளின் சோதனை தொடங்கிவிட்டதா என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் சந்தேகமாகும். மனிதர்களின் மீதான சோதனை அமெரிக்காவில் மற்றொரு மிகவும் சோதனைக்குரிய ஆர்.என்.ஏ அடிப்படையிலான முறையில் தொடங்கியது. விலங்குகளின் செயல்திறன் சோதனையை முழுவதுமாக தவிர்ப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் இதை அடைந்தனர், இது மிகவும் ஆபத்தான படியாகும். நேரடி வைரஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையும் சீனாவில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த மனித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வைரஸை வெல்ல ஒரே வழி மற்றவர்களுடன் நெருங்கிய உடல் தொடர்பு இல்லாதது மற்றும் சமூக தனிமையை கடைபிடிப்பதுதான், மற்றும் சாப்பிடுவதற்கு அல்லது உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன்பு கைகளைக் கழுவுவதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும்.



Click it and Unblock the Notifications











