For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைரஸ் மற்றும் காய்ச்சலில் இருந்து உங்களை பாதுகாக்க வீட்டுல இருக்க இந்த செடி போதுமாம்…!

துளசி செடி வீட்டு வைத்தியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.

|

இயற்கை வைத்தியமான வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்த பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வீட்டு வைத்தியம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியம் நன்றாக உதவக்கூடியது. நிபுணர்களின் கூற்றுப்படி, துளசி செடி வீட்டு வைத்தியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.

ways-to-use-tulsi-to-stay-safe-from-viruses-and-flu

ஆயுர்வேதத்தின் படி, துளசி இலைகள் இயற்கையின் சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள். கதா முதல் மார்பு தைலம் வரையிலான பல இந்திய வீட்டு வைத்தியங்களில் அவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். தினசரி அடிப்படையில் ஒருவர் வெற்று வயிற்றில் இரண்டு முதல் மூன்று துளசி இலைகளுடன் ஒரு நாளைத் தொடங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. பருவகால காய்ச்சல் மற்றும் வைரஸ்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துளசி இலைகளைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகளை இக்கட்டுரையில் தெரிவிக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசியின் பயன்கள்

துளசியின் பயன்கள்

துளசி இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை ஏற்படுத்துவதன் மூலம் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசி இலை பயன்படுகிறது. துளசி இலைக்கு மன அழுத்தம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சிறுநீரக கற்கள் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

MOST READ: காதலர்களே! காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க...!

துளசி இலைகளை மெல்லுதல்

துளசி இலைகளை மெல்லுதல்

புதிய துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலுள்ள "அடாப்டோஜென்" மன அழுத்த எதிர்ப்பு முகவராக இருப்பதால், இது மன அழுத்தத்தை குறைக்கிறது. தினசரி 10-12 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தைத் தடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரத்தத்தை சுத்திகரிக்கிறது மற்றும் பல பொதுவான நோய்களைத் தடுக்க உதவுகிறது.

துளசி அஜ்வைன் சாறு

துளசி அஜ்வைன் சாறு

துளசி அஜ்வைன் சாறு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த மூலிகை சாறில் புதிய துளசி இலைகள், அஜ்வைன், சீரகம், மாங்காய் தூள், உப்பு மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்க்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 10-15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும். பின்னர், வடிகட்டி சூடாக அல்லது அறை வெப்பநிலையில் உட்கொள்ளலாம். இது நீரிழப்பை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.

துளசி தண்ணீர்

துளசி தண்ணீர்

துளசி நீர் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். வீட்டிலும் அடிக்கடி செய்யலாம். மேலும் கோயிலுக்கு சென்றால் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. புதிய துளசி இலைகள், இஞ்சி, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்தது இந்த கலவையாகும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றை தண்ணீரில் ஒன்றாக வேகவைத்து வடிகட்டவும். பின்னர் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த தண்ணீரை தினமும் ¼ கப் குடித்துவந்தால் டெங்கு மற்றும் மலேரியாவிலிருந்து போன்ற நோய்கள் ஏற்படாது.

MOST READ:இந்த இயற்கை பொருட்களை நீங்க பயன்படுத்தினீங்கனா எப்பவும் சந்தோஷமா இருக்கலாமாம்...!

துளசி, தேன், மஞ்சள் கலவை

துளசி, தேன், மஞ்சள் கலவை

துளசி, தேன், மஞ்சள் ஆகியவைகளுக்கு தனித்தனியாக பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், இவை மூன்றும் சேர்ந்த கலவையானது பித்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. துளசி, தேன் மற்றும் மஞ்சள் கலந்த கலவை நீரானது இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். மேலும், இது அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

துளசி தேநீர்

துளசி தேநீர்

துளசி இலைகள், வெல்லம், தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த துளசி தேநீர், ஒரு இனிமையான சுவை மற்றும் செரிமானத்திற்கு நல்லது. இந்த தேநீர் பருவகால காய்ச்சல் மற்றும் காய்ச்சலிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்காலம் மற்றும் மழைகாலங்களில் நீங்கள் அருந்தும் சூடான துளசி தேநீர் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

MOST READ:ஈஸியாக கிடைக்கும் இந்த காய்கறிகள் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்குமாம்...!

துளசி மற்றும் சந்தனம்

துளசி மற்றும் சந்தனம்

சந்தன மரப் பொடியுடன் கலந்த துளசி இலைகளின் புதிய பேஸ்ட்டை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். இது, நெற்றியில் வெப்பம், தலைவலி, மற்றும் பொதுவாக குளிர்ச்சியை உடனடியாக நிவாரணம் பெற பயன்படுத்தலாம்.

துளசி ஜூஸ்

துளசி ஜூஸ்

துளசி சாறு புண் கண்கள் மற்றும் இரவு குருட்டுத்தன்மை போன்ற கண் கோளாறுகளுக்கு ஒரு மந்திர தீர்வாகும். இது பொதுவாக வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது. பயனுள்ள முடிவுகளுக்காக தினமும் ஒரு டம்பளர் துளசி சாறு அருந்துவது நம் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways to use Tulsi to stay safe from viruses and flu

Here are the immunity boosting ways to use tulsi to stay safe from viruses and flu. Read on.
Story first published: Thursday, February 6, 2020, 15:27 [IST]
Desktop Bottom Promotion