Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
உங்களுக்கு பயங்கரமா சளி, இருமல் மற்றும் தொண்டை வலி இருக்கா? அப்ப இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!
அதிமதுரம் தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பல வழிகளில் உட்கொள்ளலாம். தொண்டை வலிக்கு இது ஒரு பழமையான தீர்வாகும்.
இருமல் மற்றும் சளி குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். ஒவ்வொரு வயதினரும் மாறிவரும் வானிலை மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் ஈரப்பதம் காரணமாக இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்கக்கூடிய பல மருந்துகள் இருந்தாலும், ஆயுர்வேத அல்லது வீட்டு வைத்தியங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும். இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. முலேத்தி தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், இருமல் மற்றும் குளிர்ச்சியையும் தடுக்கிறது.

முலேத்தி என்பது அதிமதுரம். இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பண்டைய காலங்களிலிருந்தே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாக அதிமதுரம் இருந்துவருகிறது. இக்கட்டுரையில், உங்கள் தொண்டை வலிக்கு முலேத்தியை பயன்படுத்துவதற்கான வழிகள் பற்றி காணலாம்.

அதிமதுரத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?
அதிமதுரம் தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பல வழிகளில் உட்கொள்ளலாம். தொண்டை வலிக்கு இது ஒரு பழமையான தீர்வாகும் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது. முலேத்தி அல்லது அதிமதுரம் பயன்படுத்தப்படும் பல்வேறு வழிகளை பற்றி இங்கே காணலாம்.

முலேத்தி தண்ணீர்
இருமல் மற்றும் சளி வராமல் தடுக்கும் குணம் முலேத்திக்கு உண்டு. இது உங்கள் உடலை காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் முலேத்திப் பொடியைச் சேர்த்து, தினமும் குடித்துவர, குளிர்காலத்தில் தொண்டைத் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

முலேத்தி தேநீர்
தொண்டை வலிக்கு முலேத்தி தேநீர் அதிசயங்களை செய்யும். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு முலேத்தி வேரைச் சேர்க்கவும். இந்த கொதிக்கும் கலவையில் துருவிய இஞ்சியைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், ஒரு கோப்பையில் கலவையை வடிகட்டி, ஒரு தேநீர் பையைச் சேர்த்து சாப்பிடலாம்.

மெல்லும் முலேத்தி குச்சிகள்
முலேத்தி, எந்த கலவையிலும் உட்கொண்டால், இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பரந்த நன்மைகள் மற்றும் நிவாரணம் கிடைக்கும். முலேத்தி குச்சிகளை எந்த கலவையும் இல்லாமல் உட்கொள்ளலாம். வேரின் ஒரு துண்டை மென்று சாப்பிடுவது இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் தொண்டையை சுத்தப்படுத்துகிறது.

முலேத்தி காதா
நான்கில் ஒரு தேக்கரண்டி முலேத்திப்பொடி, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் சில துளசி இலைகளை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் பயனுள்ள ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications











