Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உங்களுக்கு பயங்கரமா சளி, இருமல் மற்றும் தொண்டை வலி இருக்கா? அப்ப இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!
அதிமதுரம் தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பல வழிகளில் உட்கொள்ளலாம். தொண்டை வலிக்கு இது ஒரு பழமையான தீர்வாகும்.
இருமல் மற்றும் சளி குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். ஒவ்வொரு வயதினரும் மாறிவரும் வானிலை மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் ஈரப்பதம் காரணமாக இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்கக்கூடிய பல மருந்துகள் இருந்தாலும், ஆயுர்வேத அல்லது வீட்டு வைத்தியங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும். இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. முலேத்தி தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், இருமல் மற்றும் குளிர்ச்சியையும் தடுக்கிறது.

முலேத்தி என்பது அதிமதுரம். இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பண்டைய காலங்களிலிருந்தே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாக அதிமதுரம் இருந்துவருகிறது. இக்கட்டுரையில், உங்கள் தொண்டை வலிக்கு முலேத்தியை பயன்படுத்துவதற்கான வழிகள் பற்றி காணலாம்.

அதிமதுரத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?
அதிமதுரம் தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பல வழிகளில் உட்கொள்ளலாம். தொண்டை வலிக்கு இது ஒரு பழமையான தீர்வாகும் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது. முலேத்தி அல்லது அதிமதுரம் பயன்படுத்தப்படும் பல்வேறு வழிகளை பற்றி இங்கே காணலாம்.

முலேத்தி தண்ணீர்
இருமல் மற்றும் சளி வராமல் தடுக்கும் குணம் முலேத்திக்கு உண்டு. இது உங்கள் உடலை காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் முலேத்திப் பொடியைச் சேர்த்து, தினமும் குடித்துவர, குளிர்காலத்தில் தொண்டைத் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

முலேத்தி தேநீர்
தொண்டை வலிக்கு முலேத்தி தேநீர் அதிசயங்களை செய்யும். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு முலேத்தி வேரைச் சேர்க்கவும். இந்த கொதிக்கும் கலவையில் துருவிய இஞ்சியைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், ஒரு கோப்பையில் கலவையை வடிகட்டி, ஒரு தேநீர் பையைச் சேர்த்து சாப்பிடலாம்.

மெல்லும் முலேத்தி குச்சிகள்
முலேத்தி, எந்த கலவையிலும் உட்கொண்டால், இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பரந்த நன்மைகள் மற்றும் நிவாரணம் கிடைக்கும். முலேத்தி குச்சிகளை எந்த கலவையும் இல்லாமல் உட்கொள்ளலாம். வேரின் ஒரு துண்டை மென்று சாப்பிடுவது இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் தொண்டையை சுத்தப்படுத்துகிறது.

முலேத்தி காதா
நான்கில் ஒரு தேக்கரண்டி முலேத்திப்பொடி, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் சில துளசி இலைகளை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் பயனுள்ள ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications