Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தினமும் அதிகாலை 4 மணிக்கு முழிப்பு வருதா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...
கல்லீரல் பிரச்சனையின் நன்கு அறியப்பட்ட அறிகுறி தான் தூக்க கலக்கம். அதிகாலை 1 மணி முதல் 4 மணிக்குள் ஒருவர் தினமும் தூக்கத்தில் இருந்து விழித்தால், அதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனை தான்.
மனித உடலில் கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உறுப்பாகும். இது சுமார் 3 பவுண்டுகள் எடை கொண்டது. இந்த கல்லீரல் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் இது ரப்பர் போன்று இருக்கும். இந்த கல்லீரல் விலா எலும்பு கூட்டால் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான பல வேலைகளை செய்கிறது. அதில் இரத்தத்தை வடிகட்டுவது, நச்சுப் பொருட்களான ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை உடைத்தெறிவது போன்றவை அடங்கும். மேலும் கல்லீரல் பித்தநீரை உற்பத்தி செய்கிறது. இந்த பித்த நீர் கொழுப்புக்களை ஜீரணிக்கவும், கழிவுகளை எடுத்து செல்லவும் உதவுகிறது.

ஆனால் தற்போது கல்லீரலில் நிறைய பேர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் ஒருவரது கல்லீரலினுள் கொழுப்பு செல்கள் தேங்கியிருந்தால், அது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயாகும். இந்த பிரச்சனை இருந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கல்லீரலின் செயல்பாட்டை குறைத்து, உடலில் நச்சுக்களை தேங்க வைக்கும். பெரும்பாலும் இந்த நோய் இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது அவ்வளவு எளிதில் முடியாது. இருப்பினும், கல்லீரல் ஒரு ஆபத்தில் இருந்தால் அது ஒரு முக்கியமான அறிகுறியை தூக்கத்தின் போது வெளிக்காட்டும்.
நேச்சர் அண்ட் சயின்ஸ் ஆஃப் ஸ்லீப்பின் இதழின் படி, கல்லீரல் பிரச்சனையின் நன்கு அறியப்பட்ட அறிகுறி தான் தூக்க கலக்கம். அதிகாலை 1 மணி முதல் 4 மணிக்குள் ஒருவர் தினமும் தூக்கத்தில் இருந்து விழித்தால், அதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனை தான் என்று மருத்துவ நிபுணர் மற்றும் சிரோபிராக்டருமான டாக்டர். பிரையன் லூன் கூறுகிறார்.

தூக்கத்திற்கும் கல்லீரலுக்குமான தொடர்பு என்ன?
நமது உடலின் உள்கடிகாரமான சர்க்காடியன் தாளம் வெளிப்புற கடிகாரத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. நமது உள்ளுறுப்புக்களும் இந்த கடிகாரத்திற்கு ஏற்ப திறம்பட செயல்படுவதை உறுதி செய்கிறது. பொதுவாக நமது உடலில் உள்ள கல்லீரல் உடலை சுத்தம் செய்ய கடினமாக உழைக்கும் நேரம் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை ஆகும். இந்த காலத்தில் தான் தினமும் கல்லீரல் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்த கடினமாக
ஆனால் எப்போது ஒருவரது கல்லீரலில் கொழுப்பு செல்கள் தேங்கியுள்ளதோ, அப்போது அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரையிலான காலத்தில் ஒருவருக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்படுகிறது. ஆய்வுகளானது நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 60 முதல் 80 சதவீத நோயாளிகள் இம்மாதிரியான தூக்க கலக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான காரணங்கள்
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான காரணங்கள் பின்வரும் ஆபத்து காரணிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவை:
* உடல் பருமனாக இருப்பது
* ப்ரீடயாபட்டீஸ் அல்லது டைப்-2 சர்க்கரை நோய் இருப்பது
* இரத்தத்தில் அதிகளவிலான கொழுப்பு செல்கள், குறிப்பாக ட்ரைகிளிசரைடுகள் இருப்பது.

அதிகாலையில் விழிப்பு ஏற்படுவதற்கான பிற காரணங்கள்
வயதான காலத்தில் இரவு நேரத்தில் சரியாக தூக்கம் வராமல் பலர் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வயதிற்கு ஏற்ப உடலின் சர்க்காடியன் தாளத்தில் மாற்றங்கள் ஏற்படுவதால், வயதான காலத்தில் அதிகாலையில் விழிப்பு ஏற்படுகிறது. ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் இரவு நேரத்தில் 3-4 முறை பலர் எழுந்திருக்கிறார்கள். இதற்கு பதட்டம், நோக்டூரியா மற்றும் பிற நிலைமைகள் காரணமாக இருக்கலாம். மேலும் மோசமான வாழ்க்கை முறை நடத்தைகளான சீரற்ற தூக்க பழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது மற்றும் அதிகப்படியான மது அருந்துவது போன்றவையும் ஒருவருக்கு அதிகாலையில் விழிப்பு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுப்பது எப்படி?
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவை:
* தாவர வகை உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
* ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயற்சி செய்வதோடு, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
* உடல் பருமனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











