நுரையீரல் எப்பவும் வலிமையா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவித்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.

மனித உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், நாம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனை சரியாக சுவாசிக்க முடியாமல் உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நுரையீரலின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கனவே புகைப்பிடித்து பலரது நுரையீரல் மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தொற்று நுரையீரலை அதிகம் சேதப்படுத்தக்கூடியது என்பதை அனைவரும் அறிவோம்.

Things That One Should Not Eat To Strengthen The Lungs In Tamil

தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா பருவகால நோயாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதுவாயினும், நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவிர்த்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம். இப்போது நுரையீரலின் வலிமையை கெடுக்கும் அந்த உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால்

ஆல்கஹால்

தற்போதைய நவீன உலகில் ஆல்கஹால் அருந்துவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஆல்கஹாலை அருந்தினால், அது கல்லீரல் மற்றும் நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். அதுவும் ஆல்கஹாலில் சல்பைட் இருந்தால், அது ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அதோடு நுரையீரல் செல்களை சேதப்படுத்தும். நீங்கள் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

இன்று பலவகையான குளிர்பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த பானங்களை நீங்கள் அதிகம் வாங்கி குடிப்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இவற்றில் சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளது. அதே நேரத்தில், ஒருவர் வாரத்திற்கு 5 பானங்களுக்கும் அதிகமாக குடித்தால், அவர் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

அதிகப்படியான உப்பு

அதிகப்படியான உப்பு

உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு என்பது சோடியம். அதிகப்படியான சோடியம் ஆஸ்துமாவின் அறிகுறிகளைத் தூண்டும். ஆகவே உணவில் குறைவான அளவில் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி

முட்டைக்கோஸ் மற்றும் ப்ராக்கோலி ஆகிய இரண்டும் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் தான். ஆனால் நீங்கள் அசிடிட்டி மற்றும் உப்புசத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்து, சுவாசிப்பதில் சிக்கலை சந்தித்தால், இந்த காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது நுரையீரலை மோசமாக பாதிக்கும்.

எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகள்

அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளை உட்கொள்வதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதே வேளையில் இம்மாதிரியான உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்தால், அது நுரையீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதை உடனே தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 16, 2022, 11:52 [IST]
Desktop Bottom Promotion