Latest Updates
-
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம்
நுரையீரல் எப்பவும் வலிமையா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..
நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவித்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
மனித உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், நாம் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனை சரியாக சுவாசிக்க முடியாமல் உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நுரையீரலின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கனவே புகைப்பிடித்து பலரது நுரையீரல் மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தொற்று நுரையீரலை அதிகம் சேதப்படுத்தக்கூடியது என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த கொரோனா பருவகால நோயாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எதுவாயினும், நுரையீரலை ஒருவர் வலுவாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஆனால் இன்று நம்மை அறியாமலேயே நுரையீரலின் வலிமையைக் கெடுக்கும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அந்த உணவுகள் உண்பதைத் தவிர்த்தால், நுரையீரலை வலுவாக வைத்துக் கொள்ளலாம். இப்போது நுரையீரலின் வலிமையை கெடுக்கும் அந்த உணவுகளைக் காண்போம்.

ஆல்கஹால்
தற்போதைய நவீன உலகில் ஆல்கஹால் அருந்துவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஆல்கஹாலை அருந்தினால், அது கல்லீரல் மற்றும் நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். அதுவும் ஆல்கஹாலில் சல்பைட் இருந்தால், அது ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அதோடு நுரையீரல் செல்களை சேதப்படுத்தும். நீங்கள் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

குளிர்பானங்கள்
இன்று பலவகையான குளிர்பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த பானங்களை நீங்கள் அதிகம் வாங்கி குடிப்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இவற்றில் சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளது. அதே நேரத்தில், ஒருவர் வாரத்திற்கு 5 பானங்களுக்கும் அதிகமாக குடித்தால், அவர் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

அதிகப்படியான உப்பு
உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்பவராயின், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு என்பது சோடியம். அதிகப்படியான சோடியம் ஆஸ்துமாவின் அறிகுறிகளைத் தூண்டும். ஆகவே உணவில் குறைவான அளவில் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி
முட்டைக்கோஸ் மற்றும் ப்ராக்கோலி ஆகிய இரண்டும் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் தான். ஆனால் நீங்கள் அசிடிட்டி மற்றும் உப்புசத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்து, சுவாசிப்பதில் சிக்கலை சந்தித்தால், இந்த காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது நுரையீரலை மோசமாக பாதிக்கும்.

எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகள்
அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளை உட்கொள்வதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதே வேளையில் இம்மாதிரியான உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்தால், அது நுரையீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதை உடனே தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications