Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா?
பூண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், இது அனைவருக்கும் நன்மையை மட்டுமே தரும் என்று கூற முடியாது. குறிப்பாக இது அனைவருக்குமே பொருந்தாதாம். ஒருசில பிரச்சனைகள் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக்கூடா
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது தான் பூண்டு. இத்தகைய பூண்டு மனித உடலில் பல மாயங்களை செய்யக்கூடிய உணவுப் பொருள். பல மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயுர்வேதத்தில் பூண்டு நோய்களை குணப்படுத்தும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, சளியை அகற்றுவது, புற்றுநோய் செல்களை அழிப்பது, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை வழங்கக்கூடியது.
பூண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும், இது அனைவருக்கும் நன்மையை மட்டுமே தரும் என்று கூற முடியாது. குறிப்பாக இது அனைவருக்குமே பொருந்தாதாம். ஒருசில பிரச்சனைகள் இருப்பவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாதாம். இக்கட்டுரையில் யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்போமா...!

கல்லீரல் நோய்கள்
ஹெபடைடிஸைத் தடுப்பதற்கு பலரும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இருப்பினும், ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு பூண்டு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் பூண்டு ஹெபடைடிஸ் வைரஸில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, பூண்டில் உள்ள சில கூறுகள் வயிறு மற்றும் குடல்களைத் தூண்டிவிடும், செரிமான பாதையில் அமிலம் சுரப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக ஹெபடைடிஸ் நோயாளிகளிடம் குமட்டல் அறிகுறி அதிகரிக்கும். அதோடு, பூண்டில் உள்ள நிலையற்ற கூறுகள் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபினைக் குறைத்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு நல்லதல்ல.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், பூண்டு கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஒருவேளை அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பூண்டு சாப்பிட்டால், பூண்டில் உள்ள காரப் பண்புகள், குடலைத் தூண்டிவிடும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு இன்னும் தீவிரமாகி, நிலைமை மேலும் மோசமாகும்.

கண் நோய்கள்
க்ளுக்கோமா, கண் புரை, வெண்படல அழற்சி மற்றும் பிற கண் நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் குறைவான அளவிலேயே பூண்டு சாப்பிட வேண்டும். பல நாட்களாக பூண்டுகளை அதிக அளவில் உட்கொண்டால் கல்லீரல் சேதமடைவதோடு, கண்களும் பாதிக்கப்படுவதாக சீன மருத்துவத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. பூண்டுகளை அதிகமாக அன்றாடம் எடுத்தால், அதனால் மோசமான கண் பார்வை, நினைவிழப்பு போன்ற மோசமான அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அன்றாடம் அளவாக பூண்டு எடுப்பதோடு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளான இறைச்சி கல்லீரல், தோல் நீக்கப்பட்ட இறைச்சி, முட்டை, பால், கேரட், தக்காளி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

நெஞ்செரிச்சல்
அமெரிக்கா சர்வதேச புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, நற்பதமான பூண்டு பற்களை வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடுமாம். ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்ட அறிக்கையின் படி, பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரைப்பை உணவுக்குழாய் அழற்சி நோயை உண்டாக்குமாம்.

வாய் துர்நாற்றம்
உங்களுக்கு ஏற்கனவே வாய் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறதா? அப்படியானால் அதற்கு நீங்கள் சாப்பிடும் பூண்டு கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள சல்பர் என்னும் பொருள் தான்.

இரத்தக்கசிவு
பூண்டு இயற்கையாகவே இரத்தத்தை மெலிதாக்கும். ஆகவே பூண்டுகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அத்துடன் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளான ஆஸ்பிரின் போன்றவற்றை எடுப்பவராயின், உடல் நிலைமை மோசமாகும். ஏனெனில் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் பூண்டு சேரும் போது, உடலினுள் இரத்த கசிவின் அபாயம் அதிகரிக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால், அது விரைவில் பிரசவ வலியை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகம் உட்கொண்டால், தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்க மறுக்க வாய்ப்புள்ளது.

தலைச்சுற்றல்
நிபுணர்களின் படி, பூண்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த அழுத்தம் ஒருவருக்கு மிகவும் குறைவாக இருந்தால், அவர்கள் அடிக்கடி தலைச்சுற்றி மயக்கம் போடக்கூடும்.

அதிக வியர்வை
பல்வேறு ஆய்வுகளில், பூண்டுகளை ஒருவர் பல வருடங்களாக அதிகம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கக்கூடும். எனவே உங்களுக்கு வியர்வை அதிகமாக இருப்பதற்கு, நீங்கள் சாப்பிடும் பூண்டு கூட காரணமாக இருக்கலாம்.

யோனி தொற்றுகள்
யோனியில் ஏற்பட்ட ஈஸ்ட் தொற்றுக்களை சரிசெய்ய பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் பூண்டு அதிகம் சாப்பிட்டால், யோனியில் உள்ள மென்மையான திசுக்களை எரிச்சலூட்டப்பட்டு, ஈஸ்ட் தொற்று நோயை தீவிரமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள்.

ஹைஃபெமா (Hyphema)
பூண்டு பற்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது ஹைஃபெமாவிற்கு வழிவகுக்கும். அதாவது இது கண்ணின் முன்புற அறைக்குள் இரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஒரு நிலை (கருவிழி மற்றும் கார்னியாவிற்கு இடைப்பட்ட இடைவெளி). இந்த நிலை தீவிரமானால் பார்வையையே இழக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications











