Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
உங்களுக்கு ஏற்கனவே கொரோனா இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
சமீபத்திய ஆய்வின் படி, ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தால், அது உணர்த்தும் 5 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன், மில்லியன் கணக்கான இந்த தொற்றுநோயுடன் மக்கள் பல்வேறு சிக்கல்களையும் அனுபவித்து வருகிறார்கள். காய்ச்சல் முதல் தொண்டைப்புண், சோர்வு வரை, கொரோனாவின் மிதமானது முதல் அபாயகரமான அறிகுறிகளாக உள்ளன. மேலும் SARS-CoV-2 என்னும் கோவிட்-19 ஒரு சுவாச நோயாக இருந்தப்போதிலும், இவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் காய்ச்சல் அல்லது ஜலதோஷம் போன்ற பிற சுவாச தொற்றுக்களின் அறிகுறிகளையும் கொண்டுள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் சிலர் கொரோனாவின் அறிகுறிகளைப் புறக்கணித்தாலும், காலப்போக்கில் சிலர் அதிலிருந்து எளிதில் குணமடைந்தும் விடுகின்றனர்.

சிலர் கொரோனாவின் மிதமான அறிகுறிகளை கொண்டிருக்கையில், மற்றவர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள். அதற்காக அனைவருமே தங்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்திய ஆய்வின் படி, ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தால், அது உணர்த்தும் 5 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆய்வு
அன்னல்ஸ் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டிரான்ஸ்லேஷனல் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 412 நோயாளிகளை மருத்துவ வல்லுநர்கள் கவனித்ததில், 82 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் நரம்பியல் பிரச்சனைகளின் அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுதவிர, ஏற்கனவே கொரோனாவுடன் தொடர்பு கொண்ட தனிநபர்களுக்கு குறிப்பிட்ட 5 அறிகுறிகள் வெளிப்பட்டதாகவும் கூறுகின்றனர். கீழே அந்த அறிகுறிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளன.

தலைவலி
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) படி, கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளின் பட்டியலில் தலைவலியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி கொரோனாவால் ஏற்படும் தலைவலியானது லேசானது முதல் கடுமையானது வரை தாங்க முடியாத அளவில் இருக்கலாம்.

தசை வலி
அன்னல்ஸ் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டிரான்ஸ்லேஷனல் நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களில் 44.8 சதவீதம் பேர் கோவிட் -19 இன் விளைவாக தசை வலியை அனுபவித்துள்ளனர். இது தவிர, இத்தகைய தசை வலி நீண்ட கோவிட்-இன் அறிகுறியாகும்.

மனக் குழப்பம்
ஆய்வில் பங்கேற்றவர்களிடையே மனக் குழப்பமும் ஒரு அறிகுறியாக பதிவாகியுள்ளது. இந்த அறிகுறி கோவிட்-19 இன் குறைவாக அறியப்பட்ட மற்றும் மிகவும் அரிதான அறிகுறிகளில் ஒன்று என்றாலும், ஆய்வின் போது தன்னார்வலர்களில் சுமார் 31.8 சதவீதம் பேர் மனக் குழப்பத்தை அனுபவித்துள்ளனர்.

வாசனை மற்றும் சுவை இழப்பு
வாசனை மற்றும் சுவை இழப்பு என்பது ஒரு அசாதாரண அறிகுறியாக இருந்தாலும், பெரும்பாலான கோவிட் நோயாளிகளிடையே அதிகம் இந்த அறிகுறி காணப்படுகிறது. இது ஒரு அசௌகரியமான நிலையாக இருக்கலாம். இருப்பினும், ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று என்பதை மறவாதீர்கள்.

கண் அழற்சி அல்லது கண் வலி
கொரோனா பாசிட்டிவ் காட்டிய பெரும்பாலான மக்கள் கண்களில் வலியை அனுபவித்துள்ளதாக புகாரளிக்கின்றனர். ஆனால் இதற்கு ஊடரங்கின் காரணமாக, டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்ற திரையில் நீண்ட நேரம் செலவழித்ததாலும் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், கொரோனா நோயாளிகள் கண் வலியை அனுபவித்ததால், இதுவும் கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications