Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
ஒருவருக்கு எந்த காரணங்களுக்கெல்லாம் நெஞ்சு வலி வர வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?
நெஞ்சு வலி ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவிக்க வேண்டும். இதனால் சரியான காரணத்தை கண்டறிவதற்கு மருத்துவர் எம்மாதிரியான சோதனைகள் தேவை என்பதை தீர்மானிக்க முடியும்.
இன்று மாரடைப்பால் ஏராளமான மக்கள் இறக்கிறார்கள். இதனாலேயே பலருக்கும் நெஞ்சு வலி வந்தால் பயமாக உள்ளது. ஒருவருக்கு நெஞ்சு வலி மாரடைப்பினால் மட்டும் வருவதில்லை, சில பாதிப்பில்லாத வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். ஆகவே ஒருவருக்கு வந்துள்ள நெஞ்சு வலி அபாயகரமானதா அல்லது பாதிப்பில்லாததா என்பதை அறிய, நெஞ்சு வலியுடன் வேறு சில அறிகுறிகளையும் கவனிக்க வேண்டியது முக்கியம்.

முக்கியமாக நெஞ்சு வலி ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவிக்க வேண்டும். இதனால் அதற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்கு மருத்துவர் எந்த மாதிரியான சோதனைகள் தேவை என்பதை தீர்மானிக்க முடியும். இப்போது ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் நெஞ்சு வலி வரலாம் என்பதைக் காண்போம்.

சாப்பிட்ட பின் நெஞ்சு வலி
உங்களுக்கு நெஞ்சு எரிச்சலின் போது வலியை அனுபவிக்கக்கூடும். இந்த நெஞ்சு எரிச்சல் அதிகரிக்கும் போது, இந்த வலி முதுகு வரை பரவும். இம்மாதிரியான வலி பொதுவாக உணவு உண்ட பின்னர் ஏற்படும். நீங்கள் சாப்பிட்ட பின்னர் இம்மாதிரியான வலியை சந்தித்தால், அதாவது நெஞ்சு எரிச்சலுடன் வலியை சந்தித்தால், அதற்கு காரணம் உணவுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாதிரியான சூழ்நிலையில், இந்த வலிக்கு ஆன்டாசிட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் சற்று உயரமாக தலையை வைத்து படுக்க வேண்டும். இதற்கு 2 தலையணைகளை வைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.

சுவாசிக்கும் போது வலி
சிலருக்கு சுவாசிக்கும் போது நெஞ்சு வலி ஏற்படும். அப்படி இருந்தால், அவர்கள் சற்றும் யோசிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அதே வேளையில் நெஞ்சு பகுதியில் இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், முதலில் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை கவனியுங்கள். இந்த மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதை தவிர்த்து, மனதை ரிலாக்ஸ் செய்து, அமைதியான இடத்தில் சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நெஞ்சில் குத்துவது போன்ற வலி
நீங்கள் மார்பு பகுதியில் குத்துவது போன்ற வலியை அனுபவித்தால், இதற்கு காரணம் உங்கள் விலா எலும்பு மற்றும் தசைகளில் ஏற்படும் எரிச்சலாக இருக்கலாம். இந்த நிலை டைட்ஸே நோய்க்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உங்கள் விலா எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் நிச்சயம் வலி ஏற்படும். ஆனால் இந்த நிலை ஆபத்தானது அல்ல. ஆனால் சில நேரம் கழித்து தானாகவே சரியாகிவிடும்.
இம்மாதிரியான வலியானது பொதுவாக ஒரே இடத்தில் தவறான தோரணையில் அமர்வது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படுகிறது. இந்த வலி சிறிது நேரம் கழித்து சரியாகாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நுரையீரல்களால் ஏற்படும் வலி
சுவாசிக்கும் போது நெஞ்சு வலிகிறதா? அப்போது உங்களால் சுவாசிப்பது கடினமாக இருப்பதை உணர்கிறீர்களா? அதாவது உங்களால் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது கடுமையான வலியை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் இந்த வலி நுரையீரல் காரணமாக ஏற்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் மருத்துவரை சந்திப்பது நல்லது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் வலி
உங்களுக்கு கடுமையான நெஞ்சு வலி இருந்தால், அதுவும் போதுமான ஓய்வு எடுத்தும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை தான் காரணம். இந்த நெஞ்சு வலி வழக்கமாக அதிகமாக சாப்பிட்ட பிறகு அல்லது அதிக மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படலாம். இந்த நெஞ்சு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, படுத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். ஒருவேளை நிவாரணம் கிடைக்காவிட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications