Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...!
கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
எச்சரிக்கை! பொலிவியாவில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எச்சரிக்கை! பொலிவியாவில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொடிய சப்பரே வைரஸ் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா மற்றும் 2004 ஆம் ஆண்டு அச்சுறுத்திய எபோலாவை விட கொடியது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பொலிவியாவில் எபோலா போன்ற இரத்தக்கசிவு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரிய வகை வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா அச்சத்துடன் தங்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கும் வேளையில் இம்மாதிரியான ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்த செய்தி வெளிவந்திருப்பது, பலருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றே கூற வேண்டும்.

சப்பரே வைரஸ் என்றால் என்ன?
சப்பரே வைரஸ் காய்ச்சலானது எபோலா காய்ச்சலை உண்டாக்கும் அரேனா வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் எலிகள் மூலமாக பரவக்கூடியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட எலி மற்றும் அதன் சிறுநீர், எச்சில் போன்ற நீர்த்துளிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம், இந்த வைரஸ் மக்களுக்கு பரவுகிறது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது எளிதில் பரவுகிறது. அதுவும் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகளுடன் தொடர்பு கொள்ளும் போது மட்டுமே இந்த வைரஸ் பரவுகிறது.

சப்பரே வைரஸ் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்த கோவிட்-19 போன்ற தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது தான் சப்பரே வைரஸ். சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதார சங்கத்தின் (American Society of Tropical Medicine and Hygiene) வருடாந்திர கூட்டத்தின் போது, 2019 இல் சப்பரே வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்த போது, இது மனிதனுக்கு மனிதன் பரவலாம் என்று கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

சப்பரே வைரஸ் என்ற பெயர் எவ்வாறு வந்தது?
சப்பரே வைரஸ் பொலிவியாவில் உள்ள லா பாஸுக்கு கிழக்கே அமைந்துள்ள சப்பரே பகுதியில் இருந்தது. இந்த பகுதியில் தோன்றியதால், இதற்கு சப்பரே வைரஸ் என்று பெரியரிடப்பட்டது. இந்த வைரஸ் 2004 ஆம் ஆண்டு வெடித்த எபோலா போன்ற ஒரு இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியவை.

CDC தொற்றுநோயியல் நிபுணர் கூற்று...
சப்பரே வைரஸ் லா பாஸில் உள்ள மூன்று சுகாதார பணியாளர்களுக்கு பரவியிருந்தது. அதில் ஒருவர் இறந்துவிட்டார். இதுக்குறித்து விரிவாக ஊடகங்களுடன் பேசிய CDC தொற்றுநோயியல் நிபுணர் கெய்ட்லின் கோசாபூம், ஒரு இளம் மருத்துவ குடியிருப்பாளர், ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் ஒரு இரைப்பை குடலியல் நிபுணர் என மூவரும் வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை சந்தித்த பின்னர், அவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். மேலும் இந்த வைரஸானது பல உடல் திரவங்களில் கொண்டு செல்லக்கூடும் என்று நம்புவதாக கூறினார்.

சப்பரே வைரஸின் அறிகுறிகள் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) படி, வைரஸானது மனித உடலினுள் நுழைந்தும், பாதிக்கப்பட்ட நபர் காய்ச்சல், அடிவயிற்று வலி, தலை வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, ஈறுகளில் இரத்தக்கசிவு, வாந்தி, சரும அரிப்பு மற்றும் கண்களுக்கு பின் நாள்பட்ட வலி போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும்.
சப்பரே வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பதால், எதிர்காலத்தில் இது ஒரு பெருந்தொற்றாக உருவெடுக்கக்கூடும். எனவே இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியது சி.டி.சி-யின் சுகாதார நிபுணர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

சப்பரே வைரஸிற்கான சிகிச்சை
தற்போது சப்பரே வைரஸிற்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சரியான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை பின்பற்றினால், எப்பேற்பட்ட வைரஸும் நம்மை அண்டாது.



Click it and Unblock the Notifications











