Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Oil Pulling Benefits In Tamil: பழங்காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பல்வேறு பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அதில் ஒன்று தான் ஆயில் புல்லிங். இது 3,000 ஆண்டுகளுக்கும் பழமையான ஒரு முறையாகும்.
பழங்காலத்தில் பல் சொத்தை, ஈறுகளில் இரத்த கசிவு, தொண்டை வறட்சி, உதடு வெடிப்பு மற்றும் பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுர்வேதத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆயில் புல்லிங் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயில் புல்லிங் செய்வதற்கு எந்த எண்ணெய் நல்லதாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆயில் புல்லிங் செய்ய எந்த எண்ணெய்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் அனைவரது வீட்டிலும் இருக்கும் தேங்காய் எண்ணெய் கொண்டே ஆயில் புல்லிங் செய்யலாம்.
ஏனெனில் தேங்காய் எண்ணெய் எளிதில் உடலால் உறிஞ்சக்கூடியது. இதில் நல்லெண்ணெயை விட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளது. மேலும் இது மற்ற எண்ணெய்களை விட சுவையானது. முக்கியமாக இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளை கொண்டுள்ளது.
இது தவிர தேங்காய் எண்ணெயில் உள்ள கேப்ரிலிக் அமிலம் ஒரு சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். இப்போது தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

பற்குழியை சுத்தம் செய்கிறது
தேங்காய் எண்ணெயால் ஆயில் புல்லிங் செய்யும் போது, அது பற்குழியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் இது உடலில் இருந்து பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளை வெளியேற்றி, பாக்டீரியாக்களின் சுமையைக் குறைக்கிறது.

பல் சொத்தையைக் குறைக்கிறது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தையால் பாதிக்கப்படுகின்றனர். சொத்தை பல் கடுமையான பல் வலி மற்றும் பல் இழப்பை ஏற்படுத்தும். பற்கள் சொத்தையாவதற்கு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியா ஆகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் இந்த பாக்டீரியாவை திறம்பட அகற்ற உதவுகிறது. இதன் விளைவாக பற்கள் சொத்தையாவது குறைகிறது.

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்
வாய் துர்நாற்றமானது சொத்தை பற்களில் உள்ள கெமிக்கல்கள் மற்றும் வாயுக்களால் ஏற்படுகிறது. தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது சொத்தை பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றி, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

ஈறு நோய்களை சரிசெய்கிறது
பற்களில் பாக்டீரியாக்கள் குவியும் போது, அது ஈறு நோய்களை உண்டாக்குகிறது. ஆனால் ஆயில் புல்லிங் தினமும் செய்யும் போது, அது பற்கள் மற்றும் ஈறுகளுக்குள் ஆழமாக சென்று, பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவி புரிகிறது. இதன் விளைவாக ஈறு நோய்களின் அபாயம் குறைகிறது.

பற்களை வெண்மையாக்கும்
தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் ஆயில் புல்லிங் செய்யும் போது, அது பற்களில் படிந்துள்ள கிருமிகள் மற்றும் மஞ்சள் படலத்தை நீக்கி, இயற்கையாக பற்களை வெண்மையாக்குகிறது. மேலும் இது பற்களை பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. எனவே உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருந்தால், ஆயில் புல்லிங்கை முயற்சி செய்யுங்கள்.

ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
* காலையில் எழுந்ததும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, நன்கு 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.
* பின் கொப்பளித்த எண்ணெயை துப்ப வேண்டும். அப்போது எண்ணெயானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
* பின்பு குளிர்ந்த நீரால் ஒருமுறை வாயைக் கழுவ வேண்டும்.
* பிறகு ஃப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications