Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
உங்க அம்மா நீண்ட நாள் ஆரோக்கியமா உங்க கூட இருக்கணுமா? அப்ப அன்னையர் தினத்தன்று இத செய்யுங்க போதும்.!
Mother's Day 2023: அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தன்னை உலகிற்கு கொண்டு வந்த தங்களின் அம்மாவிற்கு விலைமதிப்பற்ற பரிசை வழங்க வேண்டுமென நினைப்பார்கள். அதில் சிலர் விலையுயர்ந்த புடவையை தங்கள் அம்மாவிற்கு வாங்கி கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் தங்கள் அம்மாவிற்கு விலையுயர்ந்த போனை வாங்கித் தருவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை உண்மையிலேயே விரும்புகிறீர்கள் என்றால் இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்கள் அம்மா நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், அவர்களுக்கு மற்ற பரிசுகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, அவர்களை மருத்துவமனைக்கு அழைததுச் சென்றால் அவர்களின் உடல்நிலையை கவனித்து, அவருக்கு தேவையான அனைத்து மருத்து பரிசோதனைகளையும் செய்யுங்கள்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையால், தாய்மார்கள் தங்களின் பிரச்சனைகளை வெளியே சொல்லமாட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவுடன் நேரத்தை செலவிட்டு, அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்து அவரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை விட சிறந்த அன்னையர் தின பரிசாக வேறு எதுவும் இருக்க முடியாது.

இதய பரிசோதனை
50 வயது ஆகிவிட்டாலே ஒவ்வொருவருமே ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ECG, Echo, EKG (எலக்ட்ரோ கார்டியோகிராம்) BP மற்றும் TMT போன்ற சோதனைகளை தவறாமல் செய்து பார்க்க வேண்டும். இதனால் இதய நோயின் அபாயத்தை முன்னரே அறிந்து, அதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம்.

இரத்த அழுத்த பரிசோதனை
உயர் இரத்த அழுத்தம் என்னும் பிரச்சனையானது எவ்வித அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், இது அமைதியாக ஆளை கொல்லக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. ஆகவே தான் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு அடர்த்தி பரிசோதனை
60 வயதாகிவிட்டால், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரையும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தொடங்கி பெரும் கஷ்டப்படுத்தும். மேலும் இந்த வயதில் தான் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே ஆண்டிற்கு ஒருமுறை எலும்பு அடர்த்தி பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உளவியல் பரிசோதனை
40-45 வயதில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கிறது. இதனால் இந்த வயதில் பெண்கள் மனநிலை மாற்றங்கள், மன இறுக்கம், தூக்கமின்மை, எரிச்சலுணர்வு போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக இந்த வயதில் 75% பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கொலஸ்ட்ரால் பரிசோதனை
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் கொலஸ்ட்ரால் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும். சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையில் பேரில் விரைவில் பரிசோதனைகளை செய்யுங்கள்.

கண் பரிசோதனை
வயதிற்கு ஏற்ப கண்களில் கண்புரை அல்லது க்ளுக்கோமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே வயது அதிகரிக்கும் போது 6 மாதத்திற்கு ஒருமுறை கண்களை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications











