Just In
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது? ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்?
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதற்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் விஞஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யா தனது முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யவுள்ளது.
இந்தியாவிலும் கொரோனவிற்கான தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம்தான் கொரோனா தடுப்பூசி ரேஸில் முன்னணியில் உள்ளது. இதன் நிறுவனரான ஆடர் பூனவல்லா கூறுகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இந்த பதிவில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி பற்றி விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி
தனியார் தொலைக்காட்சிக்கு பூனவல்ல அளித்த பேட்டியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியான AZD-1222 ஐ பரிசோதிக்கவும், பெருமளவில் உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், விரைவில் தடுப்பூசியின் சோதனைகளுக்கு தலைமை தாங்குவதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் மில்லியன் கணக்கான மருந்துகள் தயாராக இருக்கும் என்றும் நம்புவதாகவும் கூறினார்.
எப்போது உற்பத்தி தொடங்கும்?
மேலும் அவர் தனது பேட்டியில், " நாங்கள் இரண்டு வாரங்களுக்குள் சோதனைகளைத் தொடங்கப் போகிறோம். இந்த சோதனை ஐசிஎம்ஆருடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தொடங்குவோம்." வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான அளவுகளை தயார் செய்ய ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் SII கூறியுள்ளது."
MOST READ: இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...!
நாடு முழுவதும் சோதனை மையங்கள்
ஐ.சி.எம்.ஆர் மற்றும் டி.சி.ஜி.ஐ உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகெங்கிலும் பல சோதனை மையங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளன, இதில் 3000-4000 தன்னார்வலர்களுக்க ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையில் சோதனை தடுப்பூசி மூலம் மருந்துகள் வழங்கப்படும். செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக கட்டம் II மற்றும் III என இரண்டு கட்டங்களாக சோதனை செய்யப்படவுள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தற்போது அதன் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது, இது பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தடுப்பூசி எதிர்பார்த்தபடி நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது. சீரம் நிறுவனம் சமீபத்தில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் GAVI அமைப்புடன் இணைந்ததற்கான செய்திகள் வெளிவந்தது, இது தேவைப்படும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் அளவுகளில் தடுப்பூசிகளை விரைவுபடுத்தவும் உற்பத்தி செய்யவும் அனுமதிக்கும்.
தடுப்பூசியின் விலை
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு சோதனைகள் மற்றும் தடுப்பூசி கிடைக்கும் செய்திகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தடுப்பூசியின் விலையைச் சுற்றி நிறைய சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான தடுப்பூசி தயாரிப்பாளர்கள் 'தொற்றுநோய் விலை' படி செலவுகளை ஈடுசெய்வதாக சான்றளித்துள்ள நிலையில், இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என தடுப்பூசியை விற்பனை செய்யவுள்ள சீரம் நிறுவனம், விலை மிகவும் மலிவு விலையில் வைக்கப்படும் என்றும், ஒரு டோஸ் 250 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிக்கான இறுதி விலை இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOST READ: இந்த காய்கறிகளை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் உங்கள் உயிரே போக வாய்ப்புள்ளதாம் தெரியுமா?
அமெரிக்க ஒப்பந்தம்
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவைத் தவிர, சீரம் நிறுவனம் அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பாளரான நோவாவாக்ஸுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. நம் நாட்டில் மில்லியன் கணக்கான COVID- சோதனை கருவிகளை வழங்குவதற்காக மைலாப் என்ற மருத்துவ நிறுவனத்துடனும இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.