Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கா? அப்ப இந்த மாதிரி பூண்டு சாப்பிடுங்க.. வயாகரா மாதிரி வேலை செய்யும்..
அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் பூண்டு வயாகராவைப் போன்று பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுறவில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவும்.
ஆண்கள் பெரும்பாலும் தாங்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏன் மருத்துவர்களிடம் கூட அதைப் பற்றி சொல்ல தயக்கம் கொள்வார்கள். தற்போது ஏராளமான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனையாக விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளது. இந்த பிரச்சனை உள்ள ஆண்களால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட முடியாது. எனவே இப்பிரச்சனை உள்ள ஆண்கள் அதற்கு வயாகராவை எடுப்பார்கள். வயாகராவை எடுக்கும் ஆண்களால் நீண்ட நேரம் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையிலேயே ஒரு நேச்சுரல் வயாகரா உள்ளது என்பது தெரியுமா? ஆம், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் பூண்டு வயாகராவைப் போன்று பாலுணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுறவில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவும். பாலுணர்ச்சியை அதிகரிக்க பூண்டு பற்களை எப்படி உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். கீழே பூண்டு கொண்டு எப்படி வயாகராவை தயாரிப்பது என்றும், பூண்டு எப்படி ஒரு ஆணின் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்க உதவுகிறது என்பதையும் சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனையின் அறிகுறிகள்
ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும். அவை:
* விறைப்புத்தன்மை ஏற்படுவதில் சிரமம்
* நீண்ட நேரம் விறைப்புத்தன்மை பராமரிப்பதில் சிரமம்
* பாலியல் ஆசை குறைவது
* குற்ற உணர்வு
* சுய மரியாதை பிரச்சனைகள்

பூண்டு எப்படி ஆண்களின் கருவளத்திற்கு நல்லது?
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இது ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை போக்க உதவுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், பூண்டில் உள்ள குறிப்பிட்ட கூறுகள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ஆணுறுப்பில் அதிகம் பாயச் செய்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது
எலிகளைக் கொண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியில் பூண்டில் உள்ள வேதிப்பொருள், எலிகளின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் பூண்டுகளை எடுக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆண்களின் ஆண்மையையும் அதிகரிக்க உதவும்.

விந்தணு சேதத்தைத் தடுக்கும்
பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் அதிகமாக உள்ளது. அதில் அல்லிசின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் விந்தணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. செலினியம் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

பூண்டுகளைக் கொண்டு வயாகரா தயாரிப்பது எப்படி?
பூண்டுகளை இரண்டு வழிகளில் உட்கொள்வதன் மூலம் வயாகராவாக செயல்படும். அந்த வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
#1 பூண்டு பானம்
இந்த பானம் தயாரிப்பதற்கு 3 பூண்டு பற்களை தட்டி, பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் குளிர வைத்து, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். ஒருவேளை இப்படி சாப்பிட பிடிக்காவிட்டால், 3 பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் தேன் கலந்த பாலை குடிக்கலாம்.

#2 பச்சை பூண்டு
பூண்டின் அதிகபட்ச நன்மைகளைப் பெற சிறந்த வழி, அவற்றை பச்சையாக சாப்பிடுவது தான் என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அதுவும் பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டதும் ஒரு டம்ளர் நீரை குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications











