Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
காது கேட்காதவர்களிடம் ஈஸியாகப் பேசுவது எப்படி?... என்ன செய்ய வேண்டும்?
காது கேட்காதவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பது பற்றி மிக விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாதாரணமாக இயல்பான மனிதர்களிடம் தகவல்களைப் பரிமாறுவது, ஒரு விஷயத்தைப் புரிய வைப்பது நமக்குத் தெரியும். அதிலும் காது கேளாதவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிப் புரிய வைப்பது எவ்வளவு கஷ்டம்.

அப்படி காது கேட்காதவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பது பற்றி மிக விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். குறிப்பாக, ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் நாள் உலக காது கேளாதோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துப் பரிமாற்றம்
ஒரு விஷயத்தை காது கேட்காதவர்களிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்றால், அதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களுடைய வேலை மிக எளிதாக இருக்கும்.

நேருக்கு நேராக
யாரிடம் பேசுகிறீர்களோ அவருக்கு நேருக்கு நேராக நில்லுங்கள். அவர்களுடைய கண்களை எதிர்நோக்கிப் பாருங்கள். வேறு எந்த பக்கமும் பார்த்துக் கொண்டு நிற்காமல், குறிப்பாக வாயை நன்கு திறந்து பேசுங்கள். வாயை மறைத்துப் பேசக்கூடாது.

சத்தமும் வெளிச்சமும்
காது கேளாதோர் பெரும்பாலும் நாம் என்ன பேசினாலும் நம்முடைய வாயசை வைத்து தான் அதிகமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதனால் அவர்களிடம் பேசும்போது, போதிய அளவில் சத்தத்துடன் பேசுகிறோமா என்பதோடு, போதிய வெளிச்சம் இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ள வேண்டும்.

இடைவெளி முக்கியம்
காது கேட்காதவர்களிடம் பேசுகின்ற பொழுது, குறிபிட்ட இடைவெளி விட்டு நிற்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஒரு அடி அல்லது அதற்கும் மேல் இடைவெளி விட்டால் தான், உங்களுடைய உதட்டு அசைவு, உடல் அசைவுகளை வைத்து நீங்கள் சொல்வதை அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

தெளிவும் நிதானமும்
காது கேளாதவர்களிடம் பேசுகின்ற பொழுது, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை நிதானமாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள். அவசர அவசரமாகப் பேசாதீர்கள்.

ஒன்றுக்கு மேல்
ஒருவேளை நீங்கள் ஒருவரிடம் மட்டும் பேசாமல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் பேசுகிறீர்கள் என்றால், அப்போது உங்களுடைய கருத்துப் பரிமாற்ற முறையை மாற்றியே ஆக வேண்டும்.

திரும்பத் திரும்ப
ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் பேசுகின்ற பொழுது, சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்லுங்கள். ஏனென்றால் ஒருமுறை சொல்லும்போது, எல்லோருக்குமே புரிந்து கொள்ள முடியாது. அதனால் சில முறை திரும்பச் சொல்வது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

எழுதிக் காட்டுங்கள்
கூட்டமாக இருக்கின்றவர்களுக்கு சொல்லி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்றால், பேப்பரிலோ அல்லது போர்டிலோ எழுதிக் காட்டுங்கள். அது அவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications