உங்கள் வயதுப்படி கொரோனா தடுப்பூசியால் உங்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படலாம் தெரியுமா?

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி நம்மை காக்கும் கவசமாக மாறியுள்ளது. ஆனாலும் தடுப்பூசியால் சிறிய அளவிலான பக்க விளைவுகள் பரவலாக ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி நம்மை காக்கும் கவசமாக மாறியுள்ளது. ஆனாலும் தடுப்பூசியால் சிறிய அளவிலான பக்க விளைவுகள் பரவலாக ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் இந்த பக்க விளைவுகள் இரண்டு நாட்களில் மறைந்துவிடும்.

How Side Effects Differ in Younger People and Older People?

கொரோனா வைரஸ் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டிய ஒன்றுமில்லை என்றாலும், உங்களுக்கு தடுப்பூசி போட்டவுடன் ஏற்படும் ரியாக்டோஜெனிக் விளைவுகள் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு வேறுபடுகின்றன என்பதைக் காணலாம், ஏனென்றால் ஒரு நபர் கடுமையான சோர்வு மற்றும் காய்ச்சலுக்கு ஆளாகலாம் சிலருக்கு எந்த பக்க விளைவுகளும் இருப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்க விளைவுகள் ஏன் நபருக்கு நபர் வேறுபடுகின்றன?

பக்க விளைவுகள் ஏன் நபருக்கு நபர் வேறுபடுகின்றன?

தடுப்பூசியின் பக்க விளைவுகள், பொதுவாக அழற்சி எதிர்விளைவுகள் என்று கூறப்படுகின்றன, பாலினம், ஒருவரின் வயது மற்றும் ஒருவர் பெறும் தடுப்பூசி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, வயதானவர்களுடன் ஒப்பிடுகையில், இளையவர்கள் அதிக தீவிரம் கொண்ட பக்க விளைவுகளை அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களிடையேயும் ஆண்களுக்கும், பெண்களுக்குமான பக்க விளைவுகள் வேறுபடுகிறது. தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகள் வயதுக்குட்பட்டவையாகும், 45 வயதிற்குட்பட்ட பெண்களால் புகாரளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிகளவில் கண்டறிந்துள்ளனர்.

வயதானவர்களுக்கு ஏன் பக்க விளைவுகள் ஏற்படுகிறது?

வயதானவர்களுக்கு ஏன் பக்க விளைவுகள் ஏற்படுகிறது?

நம் வயதுக்கு ஏற்ப நமது நோயெதிர்ப்பு அமைப்புகள் மோசமடைகின்றன என்றும், ஆகவே ஒருவருக்கு வயதாகும்போது அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக செயல்படாது என்றும் கூறப்படுகிறது. ஒரு தடுப்பூசி செலுத்தப்படும்போது, நோயெதிர்ப்பு செல்கள் செயல்பாட்டை தொடங்குகின்றன, இதனால் வயதானவர்களுக்கு குறைவான செயல்பாட்டை கொண்டிருக்கின்றனர் அல்லது இளையவர்களுடன் ஒப்பிடும்போது லேசான ரியாகோஜெனிக் பக்க விளைவுகளைக் காட்டுகிறது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முழுவதும் சோதனைகளில் காணப்பட்ட மருத்துவ தகவல்கள் அதற்கான சான்றாகும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

வயதானவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

வயதானவர்களிடம் காணப்படும் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் ஊசி போட்ட வலி, சிவத்தல், வீக்கம், உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. காய்ச்சல் தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவாக அரிதாகவே காணப்படுகிறது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெறத் தேர்ந்தெடுத்த வயதான நபர்களில் பெரும்பாலும் காணப்படும் பக்க விளைவுகளும் இவைதான், அதாவது ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள்.

இளைஞர்களிடம் காணப்படும் பக்க விளைவுகள்

இளைஞர்களிடம் காணப்படும் பக்க விளைவுகள்

இளமைக்காலத்தில் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி உச்சத்தில் இருக்கும். அதாவது 50 வயதிற்குட்பட்டவர்கள் நோய்கள் மற்றும் பலவீனமான ஆரோக்கியத்திற்கு பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், ஒரு தடுப்பூசியைப் போலவே, ஒரு 'ஆரோக்கியமான' மற்றும் பிரதானமாக செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு அவர்களை மிகவும் தீவிரமான பக்க விளைவுகளுக்கு ஆளாக்கக்கூடும். தடுப்பூசி பெறும் இளைஞர்கள் சோர்வு, குறைந்த முதல் மிதமான காய்ச்சல், சளி, மூட்டு வலி, முதுகுவலி போன்ற கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் காணப்படுகிறது.

இளைய பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

இளைய பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

குமட்டல், வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தற்காலிக மாற்றங்கள் உள்ளிட்ட தடுப்பூசிக்குப் பிந்தைய பக்க விளைவுகள் பொதுவாக பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறிகள், விரைவான இதயத் துடிப்பு, பலவீனம், புண் போன்றவை பக்கவிளைவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள், அவை இளைஞர்களிடம் பொதுவாகக் காணப்படலாம். அதேசமயம் இளைஞர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

அலர்ஜி உள்ளவர்கள் என்ன எதிர்வினைகளை உருவாக்குகிறார்கள்?

அலர்ஜி உள்ளவர்கள் என்ன எதிர்வினைகளை உருவாக்குகிறார்கள்?

ஒவ்வாமை எதிர்வினைகள், அல்லது அனாபிலாக்ஸிஸ் தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகளில் அரிதான நிகழ்வு. ஆயினும்கூட, எதிர்வினைகளின் வரலாற்றைக் கொண்ட ஒரு நபர், அல்லது COVID-19 தடுப்பூசியில் உள்ள எந்தவொரு பொருட்களுக்கும் உணர்திறன் உள்ளவர் பாதகமான எதிர்விளைவுகளுக்கு ஆளாக நேரிடும், எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, தேவைப்படும்போது உதவி பெற வேண்டும். ஆய்வை வழிநடத்தும் நிபுணர்களின் கூற்றுப்படி, எதிர்மறையான எதிர்விளைவால் பாதிக்கப்பட்ட அல்லது ஒவ்வாமை பிரச்சினை உள்ளபெரும்பாலான மக்கள் மயக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அதிக வியர்வை, படை நோய், தோல் எதிர்வினைகள் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. தடுப்பூசி தொடர்பான பாதகமான எதிர்வினைகள் கடுமையாக இருந்தபோதிலும், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் அவை மருத்துவரீதியாக நன்கு சிகிச்சையளிக்கப்படலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion