Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!
அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது தாகத்தை தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும். ஆனால் மழைக்காலம் என்று வரும் போது, நம் அனைவரது மனதிலும் நீரேற்றம் குறித்து நினைக்கவே மாட்டோம். ஏனெனில் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால், தாகம் அதிகம் எடுக்காது.

ஆனால் அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும். அதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும் மற்றும் மெட்டபாலிசமும் மேம்படும்.
அதற்கு வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஒருசில பானங்களையும் குடிக்கலாம். தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும் அற்புதமான பானம் என்றாலும், மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்த்தொற்றுக்களை அகற்றவும் ஆரோக்கியமான ஒருசில பானங்களைத் தேர்ந்தெடுத்து அருந்த வேண்டும். கீழே அந்த ஆரோக்கிய பானங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்
காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, தேன் கலந்து குடிப்பது சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகவும் எளிய வழிகளுள் ஒன்றாகும். மேலும் இந்த மாதிரி தினமும் குடித்து வந்தால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பெர்ரி ஸ்மூத்தி
பெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதால், பெர்ரி பழங்களைக் கொண்டு ஒரு ஸ்மூத்தி தயாரித்து காலையில் குடிப்பது மிகவும் நல்லது. இந்த ஸ்மூத்தி உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது.

இளநீர்
இளநீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பானங்களுள் ஒன்றாகும். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ம்ற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கிறது. அதோடு இது செரிமானம் சிறப்பாக நடைபெற தூண்டுகிறது.

எலுமிச்சை மற்றும் புதினா நீர்
ஈரப்பதமான காலநிலை மிகவும் தொந்தரவாக இருக்கலாம். மழைக்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் எலுமிச்சை புதினா நீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கொழுப்புக்களைப் பராமரிக்க உதவி புரியும்.

தேன் மற்றும் பட்டை நீர்
வெதுவெதுப்பான நீரில் பட்டையை சேர்த்து ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும். அதோடு, இது நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை வழங்கும் மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

மோர்
மோரில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை மேம்படுத்த உதவும். மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே செரிமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பவர்கள், மழைக்காலத்தில் மோர் குடித்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications