Just In
- 5 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தினமும் கக்கா போக கஷ்டப்படுறீங்களா? அப்ப சுடுதண்ணில இத ஒரு ஸ்பூன் சேர்த்து குடிங்க...
ஆயுர்வேதத்தின் படி, வெதுவெதுப்பான அல்லது சூடுநீரில் நெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மனித உடலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டால் தான், உடலுறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்படும். குறிப்பாக செரிமான மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகளால் தான் இன்று ஏராளமான மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த மலச்சிக்கல் பெரியவர்களிடம் மட்டுமின்றி குழந்தைகளிடமும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை.
உடலில் போதுமான நீர் இல்லாத போது, இம்மாதிரியான பிரச்சனை ஆரம்பமாகிறது. மலச்சிக்கலின் போது ஒருவருக்கு உடலில் இருந்து மலம் வெளியேறுவதில் சிரமமாக இருக்கும். அதே வேளையில் இப்பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டால், செரிமான மண்டலம் சரியாக இயங்காது. இது தவிர பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கும்.
ஆயுர்வேதத்தின் படி, வெதுவெதுப்பான அல்லது சூடுநீரில் நெய் சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த பானத்தை குடிப்பதன் மூலம், குடலில் தேங்கியிருக்கும் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. இதனால் வயிறு முற்றிலும் சுத்தமாகிறது. இப்போது இந்த பானத்தைக் குறித்து விரிவாக காண்போம்.
- மலச்சிக்கலுக்கு எப்போது நெய் சாப்பிட வேண்டும்?
மலச்சிக்கல் இருக்கும் போது நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் நிலைமையை மேம்படுத்த ஒருவர் யோகா மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகளையும் முயற்சிக்கலாம்.
- சுடுநீர் மலச்சிக்கலுக்கு உதவுமா?
ஆம், சுடுநீர் மலச்சிக்கலைப் போக்க உதவும். பொதுவாக உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மலத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் அதை எளிதாக வெளியேற்றவும் உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், தினமும் சுடுநீரைக் குடிப்பது குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவும்.
- நெய்யின் பக்கவிளைவுகள் என்ன?
நெய்யின் சாத்தியமான பாதகமான விளைவுகளில் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவு அதிகரிப்பு மற்றும் அதன் உற்பத்தியின் போது ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்பின் உருவாக்கம் ஆகியவை அடங்கும்.