Latest Updates
-
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா?
டீ-யோட இந்த ஸ்நாக்ஸ்களை சேர்த்து நீங்க சாப்பிடவே கூடாதாம்...ஏன்? என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
பெரும்பாலும் மக்கள் பக்கோடா, மிக்சர், புஜியா போன்றவற்றை தேநீருடன் சாப்பிட விரும்புகிறார்கள், அவை பருப்பு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாக தேநீர் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தேநீர் குடிக்காமல் அன்றைய நாளே செல்லாது. அந்தளவிற்கு இந்திய கலாச்சாரத்தின் உள்ளார்ந்த பகுதியாக தேநீர் உள்ளது. காலையோ மாலையோ, தேநீர் இல்லாமல் நாள் முழுமையடையாது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான சூடான பானமாகும். இது மக்களின் மகிழ்ச்சியோடும், மனநிலையோடும் சம்பந்தப்பட்டதாக உள்ளது. மேலும் பக்கோடா, பிஸ்கட், நம்கீன் போன்ற பல தின்பண்டங்களை நாம் அடிக்கடி ருசிக்கிறோம். சூடான பக்கோடாவை தேநீருடன் உட்கொள்ளும்போது, முழு அனுபவமும் அற்புதமாக இருக்கும். இருப்பினும், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல தின்பண்டங்கள் உள்ளன என்பதை நாம் உணரவில்லை.

நீங்கள் டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில், தேநீருடன் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி காணலாம்.

கடலை மாவில் செய்யப்பட்ட சிற்றுண்டி
பெரும்பாலும் மக்கள் பக்கோடா, மிக்சர், புஜியா போன்றவற்றை தேநீருடன் சாப்பிட விரும்புகிறார்கள், அவை பருப்பு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் உணராதது என்னவென்றால், உளுத்தம்பருப்பு மாவுகளால் செய்யப்பட்ட தின்பண்டங்கள் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் உடலின் திறனை குறைக்கிறது. ஆதலால், தேநீர் சாப்பிடும்போது, இந்த சிற்றுண்டி சாப்பிடுவதை தவிருங்கள்.

குளிர் உணவு
ஒவ்வொரு வீட்டிலும், வழக்கமான காலை உணவு தயிர், ஊறுகாய் மற்றும் சூடான தேநீருடன் ஏதாவது குளிர்ச்சி உணவுகள் இருக்கலாம். ஆனால், இந்த கலவையானது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். உங்களுக்கு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். அதனால்தான் தேநீர் போன்ற சூடான பானத்தை அருந்திய பிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்கு குளிர்ந்த உணவை உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மஞ்சளால் செய்யப்பட்ட உணவுகள்
மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இது தினமும் உட்கொள்ள வேண்டிய முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தேநீருடன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மூலப்பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மஞ்சள் கொண்ட உணவுகள் வயிற்றில் வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால், டீ குடித்தவுடன் மஞ்சள் கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தேநீரில் எலுமிச்சை
லெமன் டீ சாப்பிடும்போது அமிலத்தன்மை ஏற்படும் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? எலுமிச்சையில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால், இது உங்களுக்கு குமட்டல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எலுமிச்சை சாறு தேநீரை அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாற்றும் மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். காலையில் லெமன் டீ குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைப்பதற்கான உண்மையான காரணம் இதுதான்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சலேட் உள்ளது. இது இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது மற்றும் அவற்றுடன் பிணைக்கிறது. எனவே, ஒரு கப் சூடான தேநீருடன் நட்ஸ்கள், தானியங்கள் மற்றும் இலை காய்கறிகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications