Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா?
குறட்டைக்கு நிரந்தரமாக குட்பை சொல்வதற்கு தூங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிம்மதியான உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது. தூங்கும்போது குறட்டை விடுவது உங்கள் அருகில் தூங்குபவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிம்மதியான உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது. தூங்கும்போது குறட்டை விடுவது உங்கள் அருகில் தூங்குபவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது. இதன்மூலம் மறைமுகமாக அவர்களின் ஆரோக்கிய கேட்டிற்கு நீங்கள் காரணமாகிறீர்கள். அதிர்ஷ்டவசமாக உங்களது குறட்டை எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வதில்லை, உங்கள் அருகில் இருப்பவர்களே அதற்கு பலியாகிறார்கள்.

முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் குறட்டை விடுவது ஒரு நோயல்ல. குறட்டை ஏற்படுவதற்கு உடல் பருமன், தூக்கக் கோளாறுகள் மற்றும் சுவாசப்பாதை சிக்கல்கள் என பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். சரியான வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினையை நீங்கள் எளிதில் குணப்படுத்தலாம். இந்த பிரச்சினையை போக்க உங்களுக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் பொறுமையும், முயற்சியும்தான். இந்த பதிவில் குறட்டை பிரச்சினைக்கு குட்பை சொல்ல உதவும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தேன்
தேன் ஒரு வலுவான ஆண்டிமைக்ரோபிக் ஆகும், இது அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. தேன் நாசிப் பாதையைத் திறந்து, காற்றை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறது.

புதினா
இந்த மூலிகை இலை கிட்டதட்ட அனைவரின் இல்லத்திலும் இருப்பதாகும். இந்த இலையில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிரம்பியுள்ளது, இது மூக்கு மற்றும் தொண்டைக்குள் வீக்கத்தைக் குறைக்கிறது. புதினா டீயை படுக்கைக்கு முன் குடிப்பது அல்லது கொதிக்கும் நீரில் சில இலைகளை போட்டு ஆவி பிடிப்பது உங்களுக்கும், உங்கள் அருகில் இருபவர்க்ளுக்கும் ஆறுதல் அளிக்கும்.

பூண்டு
பூண்டு பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். இதில் சில அளவிற்கு அதிகமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால்தான், பொதுவான நோய்த்தொற்றுகளிலிருந்து விடுபட, மக்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். சிலர் குறட்டைவிடும் பழக்கத்தை போக்க இரவில் பச்சை பூண்டை சாப்பிடுவார்கள்.

சோயாபால்
குறட்டை விடுபவர்கள் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை உபயோகிக்கலாம். சில அலர்ஜி எதிர்வினைகள் நெரிசலை ஊக்குவிக்கின்றன, இது நாசி பாதைகளின் வீக்கத்திற்கு வழிவகுக்கும், எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்களிடம் குறட்டை விடும் பழக்கம் அதிகரிக்கிறது.

வெங்காயம்
வெங்காயம் ஒரு இன்றியமையாத சமையல் பொருள் என்பதை நாம் நன்கு அறிவோம்.வெங்காயத்தில் அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பது மட்டுமின்றி, அவை உங்கள் நாசிப் பாதைகளை சுத்தம் செய்யக்கூடிய இயற்கையான டிகோங்கஸ்டெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்கள் இரவு உணவில் சிறிது சமைத்த வெங்காயத்தைச் சேர்க்கவும், இது உங்கள் குறட்டையை குறைப்பதை நீங்களே உணரலாம்.

மீன்
மீனில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களின் அதிக உள்ளடக்கம் நாசிப் பாதையைத் தடுக்கும் சளியின் உற்பத்தியை எதிர்த்துப் போராடுகிறது. சிவப்பு இறைச்சிக்கு பதிலாக இதனை உட்கொள்வது சிறந்த மாற்றாக இருக்கும்.

அன்னாசி
இந்த பழம் ஒரு இயற்கையான நெரிசல் நீக்கியாகும் மற்றும் மூக்கு மற்றும் தொண்டை அடைப்பை குணப்படுத்துகிறது. அன்னாசிப்பழம் எளிதில் ஜீரணமாகும், எனவே இரவு உணவுக்குப் பிறகு பயமின்றி சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











