Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்!
அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
ஒருவர் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசும்போது, உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் காற்றை விழுங்குவது குறைவாக
நாம் அடிக்கடி டர்..புர்ன்னு வாயுவை வெளியேற்றுகிறோம். அலுவலகத்திலோ அல்லது வெளியில் இருக்கும்போதோ வாயுவை வெளியேற்றுவது நமக்கு பெரும் அசெளகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். யாருக்கும் தெரியாமல் வாயுவை வெளியேற்ற முயற்சிப்போம். ஆனால், நாம் ஏன் இவ்வளவு வாயுவை வெளியிடுகிறோம் என்று யாராவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஏனென்றால், வாயுவை உண்டாக்கும் உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது, அவை நம் உடலில் வாயுவை உருவாக்குகின்றன. இது பொதுவாக ஃபார்டிங் என்று அழைக்கப்படுகிறது. காஸ்ட்ரோஇன்டெஸ்டினல் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 0.6-1.8 லிட்டர் வாயுவை உருவாக்குகிறார். இது செரிமான செயல்முறையின் ஒரு பகுதியாக பெருங்குடல் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

அதே ஆய்வின்படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 12-25 முறை குடல் வாயுவை வெளியிடுகிறார். பெரும்பாலான மக்கள் வாயுவைக் கடந்து செல்வதில் சங்கடப்படுகிறார்கள். இக்கட்டுரையில் நீங்கள் ஏன் வாயுவை அதிகமாக வெளியிடுகிறீர்கள் என்பதற்கான காரணங்களையும் அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்.

உடலில் வாயு ஏற்பட என்ன காரணம்?
வாயு உருவாவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை உள்ளடக்கிய செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவை மட்டுமல்ல, கந்தகம் நிறைந்த உணவுகள், சிக்கலான சர்க்கரை, ராஃபினோஸ் மற்றும் சர்க்கரை ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் நம் உடலில் வாயுவை ஏற்படுத்தும். எனவே, உடைக்க கடினமாக இருக்கும் அந்த உணவுகள் தான் அதிகமாக வாயுவை வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணம்.

என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
வாயு வெளியேறும் அசெளகரியத்தை நீங்கள் உணர விரும்பவில்லை என்றால், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், வேர் காய்கறிகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், சிலுவை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஒயின் மற்றும் பீர் போன்றவற்றில் கூட கந்தகச் சத்து அதிகம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

வாயுவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
இது மிகவும் எளிமையானது. ஒருவர் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசும்போது, உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் காற்றை விழுங்குவது குறைவாக இருக்கும். அது நம் உடலில் வாயுவை உண்டாக்கும்.

எதை தவிர்க்க வேண்டும்?
மேலும், நீங்கள் சாப்பிட விரும்பும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் முன்கூட்டியே ஊறவைக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வாயுவை உண்டாக்கும் பண்புகளை வெளியிடுகிறது. அதிக காற்று விழுங்குவதற்கு காரணமான ஃபிஸி பானங்கள், சூயிங்கம் மற்றும் கடின மிட்டாய்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வாயுவை குறைக்க உதவும் உணவுகள்
உடலில் உற்பத்தியாகும் வாயுவைக் குறைக்க, நம் வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய பல உணவுகள் உள்ளன. உடலால் ஏற்படும் குடல் வாயுவை முற்றிலுமாக நிறுத்த முடியாது. ஆனால் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் வாயு வெளியேறுவதைக் குறைக்கலாம். முட்டை, மீன், கீரை, சீமை சுரைக்காய், தக்காளி, திராட்சை, முலாம்பழம், ஒல்லியான இறைச்சிகள் மற்றும் புரதங்கள் போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், உடலில் இத்தகைய வாய்வு ஏற்படுவதைத் தவிர்க்க நீங்கள் கெமோமில் மற்றும் புதினா டீயை பருக ஆரம்பிக்கலாம்.



Click it and Unblock the Notifications