Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
போதைப்பொருள் பயன்படுத்தறவங்க சோசியல் மீடியாவ நெறய யூஸ் பண்றங்களாம்... எப்படி கண்டுபிடிக்கறது?
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் சோஷியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது, வாங்க பார்க்கலாம்.
தற்போதைய இளைஞர்களிடையே சோஷியல் மீடியா மோகம் பெருகி வருகிறது. அதுவே ஒரு அடிக்ஷனான ஒரு விஷயம். இதில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் கூடுதல் அடிக்ஷனை சோஷியல் மீடியாவில் காட்டி வருகின்றனர் என்கிறது ஆய்வுத் தகவல்கள்.

இந்த மாதிரி போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் இஷ்டத்துக்கு கருத்துகளை போடுவதோடு அது குறித்து வருத்தப்படவும் செய்கிறார்கள். இதைப் பற்றிய தகவல்கள் "அப்யூஸ்" என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக அபாயங்கள்
இந்த நாளிதழில் சமூக துஷ்பிரயோகத்தை யும் அபாயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஜோசப் பால்மர், கூறுகையில் "போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் சோஷியல் மீடியா இடுகைகள் அனைத்தும் மற்ற பயனர்களுக்கு சங்கடத்தையும், மன அழுத்தத்தையும், மோதலையும் ஏற்படுத்துகிறது". என்று அவர் கூறுகிறார்.
வாழ்க்கையை சீர்குலைக்கும்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்" இப்படி சமூக வலைத்தளங்களில் சுய நினைவின்றி பச்சை பச்சையாக பேசுவது மற்றவரின் மனசுக்கு மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கையையே சீர்குலைக்கவும் செய்கிறது "என்கிறார்.

போதை அடிமைகள்
நியூயார்க் நகரில் நைட் பார்ட்டி, கிளப் என்று ஆட்டம் போடும் 872 இளைஞர்களிக்கிடையே ஆய்வு நடத்திய போது அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சோஷியல் மீடியா தாக்கம்
அவர்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது 34.3% இளைஞர்கள் அதிகளவு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதும் 21.4% இளைஞர்கள் அதில் ஈடுபடுவதில் வருத்தப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 55.9% பேர்கள் மெசேஜ், ஷோட், கால் செய்வதிலும், 30.5% பேர்கள் ஷேட், கால் செய்ய வருத்தப்படுவதும், 47.6% பேர்கள் தங்களுடைய போட்டோக்களை ஷேர் செய்வதிலும், 32.7% பேர்கள் ஷேர் பண்ண பிறகு அதை நினைத்து வருத்தமும் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆபத்து
இப்படி 18-24 வயதில் உள்ள இளைய பெண்கள், ஆண்கள் சோஷியல் மீடியாவில் மெசேஜ் போடுவது, கால் செய்வது மற்றும் போட்டோக்களை ஷேர் செய்வது போன்றவற்றால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், இருபாலினம் அல்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் இவர்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அளவு அதிகமாக உள்ளது.

போதைப் பொருள் வீரியம்
மரிஜுவானா போன்ற போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்ற போதை அடிமைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தில் உள்ளனர். அதே மாதிரி கொக்கைன் பயனர்களும் இதற்கு விதி விலக்கல்ல.



Click it and Unblock the Notifications











