Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
போதைப்பொருள் பயன்படுத்தறவங்க சோசியல் மீடியாவ நெறய யூஸ் பண்றங்களாம்... எப்படி கண்டுபிடிக்கறது?
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் சோஷியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது, வாங்க பார்க்கலாம்.
தற்போதைய இளைஞர்களிடையே சோஷியல் மீடியா மோகம் பெருகி வருகிறது. அதுவே ஒரு அடிக்ஷனான ஒரு விஷயம். இதில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் கூடுதல் அடிக்ஷனை சோஷியல் மீடியாவில் காட்டி வருகின்றனர் என்கிறது ஆய்வுத் தகவல்கள்.

இந்த மாதிரி போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் இஷ்டத்துக்கு கருத்துகளை போடுவதோடு அது குறித்து வருத்தப்படவும் செய்கிறார்கள். இதைப் பற்றிய தகவல்கள் "அப்யூஸ்" என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக அபாயங்கள்
இந்த நாளிதழில் சமூக துஷ்பிரயோகத்தை யும் அபாயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஜோசப் பால்மர், கூறுகையில் "போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் சோஷியல் மீடியா இடுகைகள் அனைத்தும் மற்ற பயனர்களுக்கு சங்கடத்தையும், மன அழுத்தத்தையும், மோதலையும் ஏற்படுத்துகிறது". என்று அவர் கூறுகிறார்.
வாழ்க்கையை சீர்குலைக்கும்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்" இப்படி சமூக வலைத்தளங்களில் சுய நினைவின்றி பச்சை பச்சையாக பேசுவது மற்றவரின் மனசுக்கு மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கையையே சீர்குலைக்கவும் செய்கிறது "என்கிறார்.

போதை அடிமைகள்
நியூயார்க் நகரில் நைட் பார்ட்டி, கிளப் என்று ஆட்டம் போடும் 872 இளைஞர்களிக்கிடையே ஆய்வு நடத்திய போது அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சோஷியல் மீடியா தாக்கம்
அவர்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது 34.3% இளைஞர்கள் அதிகளவு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதும் 21.4% இளைஞர்கள் அதில் ஈடுபடுவதில் வருத்தப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 55.9% பேர்கள் மெசேஜ், ஷோட், கால் செய்வதிலும், 30.5% பேர்கள் ஷேட், கால் செய்ய வருத்தப்படுவதும், 47.6% பேர்கள் தங்களுடைய போட்டோக்களை ஷேர் செய்வதிலும், 32.7% பேர்கள் ஷேர் பண்ண பிறகு அதை நினைத்து வருத்தமும் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆபத்து
இப்படி 18-24 வயதில் உள்ள இளைய பெண்கள், ஆண்கள் சோஷியல் மீடியாவில் மெசேஜ் போடுவது, கால் செய்வது மற்றும் போட்டோக்களை ஷேர் செய்வது போன்றவற்றால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், இருபாலினம் அல்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் இவர்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அளவு அதிகமாக உள்ளது.

போதைப் பொருள் வீரியம்
மரிஜுவானா போன்ற போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்ற போதை அடிமைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தில் உள்ளனர். அதே மாதிரி கொக்கைன் பயனர்களும் இதற்கு விதி விலக்கல்ல.



Click it and Unblock the Notifications