Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
போதைப்பொருள் பயன்படுத்தறவங்க சோசியல் மீடியாவ நெறய யூஸ் பண்றங்களாம்... எப்படி கண்டுபிடிக்கறது?
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் சோஷியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது, வாங்க பார்க்கலாம்.
தற்போதைய இளைஞர்களிடையே சோஷியல் மீடியா மோகம் பெருகி வருகிறது. அதுவே ஒரு அடிக்ஷனான ஒரு விஷயம். இதில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் கூடுதல் அடிக்ஷனை சோஷியல் மீடியாவில் காட்டி வருகின்றனர் என்கிறது ஆய்வுத் தகவல்கள்.

இந்த மாதிரி போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் இஷ்டத்துக்கு கருத்துகளை போடுவதோடு அது குறித்து வருத்தப்படவும் செய்கிறார்கள். இதைப் பற்றிய தகவல்கள் "அப்யூஸ்" என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக அபாயங்கள்
இந்த நாளிதழில் சமூக துஷ்பிரயோகத்தை யும் அபாயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் ஜோசப் பால்மர், கூறுகையில் "போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் சோஷியல் மீடியா இடுகைகள் அனைத்தும் மற்ற பயனர்களுக்கு சங்கடத்தையும், மன அழுத்தத்தையும், மோதலையும் ஏற்படுத்துகிறது". என்று அவர் கூறுகிறார்.
வாழ்க்கையை சீர்குலைக்கும்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்" இப்படி சமூக வலைத்தளங்களில் சுய நினைவின்றி பச்சை பச்சையாக பேசுவது மற்றவரின் மனசுக்கு மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கையையே சீர்குலைக்கவும் செய்கிறது "என்கிறார்.

போதை அடிமைகள்
நியூயார்க் நகரில் நைட் பார்ட்டி, கிளப் என்று ஆட்டம் போடும் 872 இளைஞர்களிக்கிடையே ஆய்வு நடத்திய போது அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சோஷியல் மீடியா தாக்கம்
அவர்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது 34.3% இளைஞர்கள் அதிகளவு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதும் 21.4% இளைஞர்கள் அதில் ஈடுபடுவதில் வருத்தப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 55.9% பேர்கள் மெசேஜ், ஷோட், கால் செய்வதிலும், 30.5% பேர்கள் ஷேட், கால் செய்ய வருத்தப்படுவதும், 47.6% பேர்கள் தங்களுடைய போட்டோக்களை ஷேர் செய்வதிலும், 32.7% பேர்கள் ஷேர் பண்ண பிறகு அதை நினைத்து வருத்தமும் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆபத்து
இப்படி 18-24 வயதில் உள்ள இளைய பெண்கள், ஆண்கள் சோஷியல் மீடியாவில் மெசேஜ் போடுவது, கால் செய்வது மற்றும் போட்டோக்களை ஷேர் செய்வது போன்றவற்றால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், இருபாலினம் அல்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் இவர்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் அளவு அதிகமாக உள்ளது.

போதைப் பொருள் வீரியம்
மரிஜுவானா போன்ற போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்ற போதை அடிமைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தில் உள்ளனர். அதே மாதிரி கொக்கைன் பயனர்களும் இதற்கு விதி விலக்கல்ல.



Click it and Unblock the Notifications