Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
வயாகரா யூஸ் பண்ணலாம்னு யோசிக்குறீங்களா? இந்த பிரச்சினை இருந்தா தெரியாம கூட பண்ணிராதீங்க...!
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து ஆயுர்வேதமாக இருந்தாலும், அலோபதியாக இருந்தாலும், ஹோமியோபதியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அலட்சியம் செய்யக்கூடாது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து ஆயுர்வேதமாக இருந்தாலும், அலோபதியாக இருந்தாலும், ஹோமியோபதியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அலட்சியம் செய்யக்கூடாது. வயாகரா என்பது சில்டெனாஃபில் என்ற நீல நிற மாத்திரையின் பிராண்ட் பெயர், இதை எடுத்துக்கொள்வது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்கும், இது விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். வயக்ராவின் விளைவு அதன் நுகர்வுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே நீடிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான பாலியல் ஆரோக்கியப் பிரச்சனையான விறைப்புச் செயலிழப்பைக் குணப்படுத்த ஆண்கள் பெரும்பாலும் வயாகரா மாத்திரையின் உதவிகளை நாடுகிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவைப் புரிந்து கொள்ளாமல் இந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு ஆபத்தாக முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பொதுவான பக்க விளைவுகள்
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயாகரா காரணமாக தசைகளுக்குள் உள்ள இரத்த நாளங்கள் தூண்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வயாகராவின் பக்க விளைவுகள் குறுகிய காலத்திற்கு இருக்கும். பொதுவான பக்க விளைவுகள் கடுமையான தலைவலி, சருமத்தில் சிவப்பு நிற மாற்றம், வயிறு தொடர்பான பிரச்சனைகள், அமிலத்தன்மை பிரச்சனைகள், தசை வலி போன்றவை.

வயாகராவின் தீவிர பக்க விளைவுகள்
வயாகரா எடுத்துக் கொள்ளும் பலருக்கு திடீரென ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்வை இழப்பு ஏற்படலாம். இது தமனி அல்லாத இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி (NAION) எனப்படும் தீவிர கண் பிரச்சனையாகும். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆராய்ச்சியாளர்கள், வயாகராவின் அதிகப்படியான நுகர்வு ஒரு நபரின் நிற பார்வைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர். 31 வயதான நோயாளி ஒருவரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, அவர் இரண்டு நாட்களாக சிவப்பு நிறத்தை சரியாகப் பார்க்க முடியாததால் சிகிச்சைக்காக வந்திருந்தார். வயாகரா மாத்திரையை உட்கொண்ட பிறகே இந்த அறிகுறிகள் தோன்றியதாக நோயாளி கூறினார். இந்த நோயாளி, சாதாரண டோஸ் 50mg அளவை விட அதிகமாக எடுத்துக் கொண்டதாகவும், இதனால் அவர் கண்பார்வை இழந்ததாகவும் கூறினார். அவரது விழித்திரையில் நச்சுகள் காணப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இரத்த அழுத்தம் குறையலாம்
குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், வயாகராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்ட ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் இரத்த அழுத்தம் அசாதாரணமாகக் குறையும். சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாகலாம்.

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது
இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வயாக்ராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது ஆஞ்சினா வலி இருந்தால், வயாகராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது உங்கள் இதயத்தை சேதப்படுத்தும். வயாகராவை மற்ற நைட்ரேட் மருந்துகளுடன் தவறுதலாக கூட எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.



Click it and Unblock the Notifications