வயாகரா யூஸ் பண்ணலாம்னு யோசிக்குறீங்களா? இந்த பிரச்சினை இருந்தா தெரியாம கூட பண்ணிராதீங்க...!

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து ஆயுர்வேதமாக இருந்தாலும், அலோபதியாக இருந்தாலும், ஹோமியோபதியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அலட்சியம் செய்யக்கூடாது.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து ஆயுர்வேதமாக இருந்தாலும், அலோபதியாக இருந்தாலும், ஹோமியோபதியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அலட்சியம் செய்யக்கூடாது. வயாகரா என்பது சில்டெனாஃபில் என்ற நீல நிற மாத்திரையின் பிராண்ட் பெயர், இதை எடுத்துக்கொள்வது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்கும், இது விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். வயக்ராவின் விளைவு அதன் நுகர்வுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே நீடிக்கும்.

Common to Severe Side Effects of the Viagra in Tamil

ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான பாலியல் ஆரோக்கியப் பிரச்சனையான விறைப்புச் செயலிழப்பைக் குணப்படுத்த ஆண்கள் பெரும்பாலும் வயாகரா மாத்திரையின் உதவிகளை நாடுகிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவைப் புரிந்து கொள்ளாமல் இந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு ஆபத்தாக முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவான பக்க விளைவுகள்

பொதுவான பக்க விளைவுகள்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயாகரா காரணமாக தசைகளுக்குள் உள்ள இரத்த நாளங்கள் தூண்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வயாகராவின் பக்க விளைவுகள் குறுகிய காலத்திற்கு இருக்கும். பொதுவான பக்க விளைவுகள் கடுமையான தலைவலி, சருமத்தில் சிவப்பு நிற மாற்றம், வயிறு தொடர்பான பிரச்சனைகள், அமிலத்தன்மை பிரச்சனைகள், தசை வலி போன்றவை.

வயாகராவின் தீவிர பக்க விளைவுகள்

வயாகராவின் தீவிர பக்க விளைவுகள்

வயாகரா எடுத்துக் கொள்ளும் பலருக்கு திடீரென ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்வை இழப்பு ஏற்படலாம். இது தமனி அல்லாத இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி (NAION) எனப்படும் தீவிர கண் பிரச்சனையாகும். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆராய்ச்சியாளர்கள், வயாகராவின் அதிகப்படியான நுகர்வு ஒரு நபரின் நிற பார்வைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர். 31 வயதான நோயாளி ஒருவரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, அவர் இரண்டு நாட்களாக சிவப்பு நிறத்தை சரியாகப் பார்க்க முடியாததால் சிகிச்சைக்காக வந்திருந்தார். வயாகரா மாத்திரையை உட்கொண்ட பிறகே இந்த அறிகுறிகள் தோன்றியதாக நோயாளி கூறினார். இந்த நோயாளி, சாதாரண டோஸ் 50mg அளவை விட அதிகமாக எடுத்துக் கொண்டதாகவும், இதனால் அவர் கண்பார்வை இழந்ததாகவும் கூறினார். அவரது விழித்திரையில் நச்சுகள் காணப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இரத்த அழுத்தம் குறையலாம்

இரத்த அழுத்தம் குறையலாம்

குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், வயாகராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்ட ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் இரத்த அழுத்தம் அசாதாரணமாகக் குறையும். சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாகலாம்.

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது

இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வயாக்ராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது ஆஞ்சினா வலி இருந்தால், வயாகராவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது உங்கள் இதயத்தை சேதப்படுத்தும். வயாகராவை மற்ற நைட்ரேட் மருந்துகளுடன் தவறுதலாக கூட எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion