Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா..?
சிலருக்கு உடலில் சில விசித்திரமான மாற்றங்கள் எப்போதுமே இருக்கும். சிலரின் உடலில் காந்த தன்மை அதிக அளவில் இருக்கும்; சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் பசித்து கொண்டே இருக்கும்; இன்னும் சிலருக்கு எதை செய்தாலும் மறந்து விடுவர். இப்படி பலவித மனிதர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இதில் இப்போதைய ட்ரெண்டாக உள்ள வகையினர் "எவ்வளவு சரக்கு அடிச்சாலும் போதையே ஏறாமலும், கொஞ்சம் கூட ஹேங்ஓவரே இல்லாமால் அசால்ட்டாக இருப்பவர்கள் தான். என்னது இப்படி கூடமா நடக்கும் என கேட்டால்... அதற்கு பதில் ஆம்" என்பதே.
இது போன்ற கேரக்டர்கள் உங்களுடனே எப்போதும் சுற்றுவதுண்டு. இதற்கு உண்மையான காரணமும் உள்ளது. ஏன் எவ்வளவு சரக்கடிச்சாலும் சாதாரணமாக இவர்கள் இருக்கின்றனர் என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சரக்கு!
இன்று எதற்கெடுத்தாலும் பார்ட்டி பண்ணுகிற கலாச்சாரம் வந்து விட்டது. காதல் வெற்றியா..? வா, பார்ட்டி பண்ணலாம். காதல் முறிவா? வா, பார்ட்டி பண்ணலாம். தாத்தா செத்துட்டாரா? அட வாப்பா, பார்ட்டி பண்ணலாம்..! இப்படி பார்ட்டி பண்றதுக்காகவே பலர் இங்குள்ளனர். இதில் முக்கிய பங்கு சரக்குக்கு தான் உள்ளது. எல்லாம் முடிந்ததும் போதை ஏறவில்லையே என வருந்தும் பலரும் இங்குண்டு.

போதை!
பொதுவாக போதை மற்றும் ஹாங்ஓவேர் என்பது கல்லீரலில் உள்ள நொதிகளை உடைத்து acetaldehyde என்கிற நச்சு பொருளாக மாறும் போது ஏற்பட கூடிய நிலையே. இந்த நிகழ்வு தான் போதைக்கு முக்கிய காரணம். ஆனால் இது பலருக்கு ஏற்படுவதில்லை.

தாக்கம்!
இப்படி கல்லீரலில் உள்ள நொதிகள் acetaldehyde என்கிற நச்சாக மாறும்போது உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். குறிப்பிட்டு சொல்ல போனால், தலைவலி, மயக்கம், வாந்தி, நாக்கு வறட்சி போன்ற பாதிப்புகள் சரக்கு அடிச்சவர்களுக்கு உண்டாகும்.

ஆய்வுகள்!
குடி பழக்கம் கொண்ட பலரை வைத்து எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது.
அதாவது, சிலருக்கு எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையோ அல்லது ஹாங்ஓவரோ ஏற்படுவது இல்லையாம். இதில் பெண்களை விட ஆண்களே முன்னிலையில் உள்ளனர் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

காரணம்?
மேலும், இது போன்ற நிலை ஏற்படுவதற்கு மரபணு ரீதியான காரணங்களும் உள்ளதாம். இது போன்று இவர்களுக்கு அவ்வளவு எளிதாக இந்த மதுவானது கல்லீரலுக்கு சென்று போதை மற்றும் ஹாங்ஓவரை ஏற்படுத்துவதில்லையாம்.

பெண்கள்!
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் மிக விரைவிலே போதையாகி விடுவர். இதற்கு காரணம் ஆண்களின் உடல் அமைப்பும் பெண்களின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருப்பதே. இதனால் தான் பெண்கள் மிக சீக்கிரத்தில் மட்டையாகி விடுகின்றனர்.

எப்படி?
இது போல ஹாங்ஓவர் ஆகும் பலருக்கும் தீர்வை தர சில வழிகள் உள்ளது. அதாவது எப்போதுமே 1 கிளாஸ் சரக்கின் அளவிற்கு 1 கிளாஸ் தண்ணீரை கலந்து குடிக்க வேண்டும். மேலும், சரக்கடிக்கும் போது எண்ணெய் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இதை குடியுங்கள்!
எவ்வளவு சரக்கடிச்சாலும் ஹாங்ஓவர் ஆகாமல் இருக்க, இளநீர் அருந்தி வரலாம். மேலும், பிராண்டட் சரக்குகள் குடித்தால் ஹாங்ஓவரை குறைக்கலாம்.
இல்லையேல் மறுநாள் முழுக்க மோசமான பாதிப்பை இது உண்டாக்கி விடும். எதுவாக இருந்தாலும் "மது உடலுக்கு, இன்றும் என்றும் கெடுதல்" தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications