Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
மாத்திரை சாப்பிடும்போது வெந்நீரை பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் விஷமாக மாறி விடுமா?
நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருக்க இதற்கான தடுப்புகளும் மற்றொரு புறத்தில் கண்டுபிடித்து கொண்டே வருகின்றனர். நோய்கள் அதிகரிப்பதால் மருந்து- மாத்திரைகளின் அளவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. காலையில் எழுந்ததும் தனது வாழ்வை மாத்திரைகளுடன் தான் பலர் தொடங்குகின்றனர். இது உண்மையிலே மோசமான நிலை தான்.

ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்க பயன்படும் மாத்திரைகளும் அடங்கும். மாத்திரைகளை நாம் நீண்ட நாட்களாக தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம்.
இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

மாத்திரையும் நாமும்!
எப்படி மொபைல் போனும் நாமும் ஒன்றாக உள்ளோமோ அதே போன்று மாத்திரைகளும் நாமும் இன்றைய கால நிலையில் ஒன்றாகி விட்டோம். இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சில காரணிகள் உண்டு. சுற்றுப்புற சூழல், அன்றாட பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை கூறலாம். பிறந்த குழந்தை கூட இதில் இருந்து தப்பவில்லை என்பதே நிதர்சனம்.

நீர் அவசியம்!
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மருந்துகளை சாப்பிட்ட பின்னர் அவற்றை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் வாகனமாக நீர் தான் விளங்குகிறது.

வேறு விதம்
மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

அறையின் தட்பவெப்பம்
பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் மாத்திரைகான நீரை, நமது அறையின் தட்பவெப்பத்தை பொருத்தே நாம் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.

வெந்நீரை தவிர்க்கவும்!
சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும். கேப்சியூல் மாத்திரைகளை அறையின் தட்பவெப்பத்தில் உள்ள நீரை கொண்டு சாப்பிடலாம்.

இரும்பல், காய்ச்சல்
பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.

எவ்வளவு நீர்?
பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும்.
இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

எப்போது?
சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

முடிவு
ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம். மேலும் மாத்திரைகளை சாப்பிடும் போது 1 கிளாஸ் நீரை பருகுவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











