Just In
- 2 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 5 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 6 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 7 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
Don't Miss
- News "சிங்கப்பூர், ஹாங்காங் எங்களுக்கு தடை விதிக்கவில்லை!" எவரெஸ்ட் பரபர விளக்கம்.. அப்போ என்ன பிரச்சினை?
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
கையில் காப்பு அணிவது என்பது இன்று ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் பழக்கமாகும். கையில் காப்பு அணிவது நல்ல பழக்கம்தான் ஆனால் அதை சரியான உலோகத்தில் அணிவது உங்களுக்கு பல நல்ல பலன்களையும் தரும். அந்த வகையில் செம்பு காப்பு அணிவது உங்களுக்கு ஆரோக்கியரீதியாக பல அற்புத பலன்களை அளிக்கும்.
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் செம்பு காப்பு அணிவது நீங்கள் எதிர்பார்க்காத பல பலன்களை வழங்கக்கூடும். இந்த பதிவில் செம்பு காப்பால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
காப்பர்
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது உடலின் அத்தியாவசியமாக உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆர்திரிடிஸ்
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செம்பு காப்பு அணிவது எலும்புகள் தேய்மானம் அடைவதை தாமதப்படுத்துகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு
செம்புக்கென்று ஒரு தனிவரலாறு உள்ளது. நமது முன்னோர்கள் காலத்திலே காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆன்டி பாக்டீரியாவாக செய்லபடும் இது உடலில் இருக்கும் 99 சதவீத பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கிறது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. அதற்கு செம்பு காப்பு சிறந்த தேர்வாக இருக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலம்
இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும், இதனால் நமது உடல் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு ஆகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்டிஆக்ஸிடண்ட்
நமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் நமது இணைப்பு திசுக்களுக்கு மட்டுமின்றி நமது எலும்புகள் மற்றும் தோலின் கட்டமைப்பிற்கும் உதவுகிறது. வயதாவதை தாமதப்படுத்துவதற்கும்சருமத்தில் சுருக்கங்களை குறைப்பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.
கார்டியோவஸ்குலர் ஆரோக்கியம்
உடலில் தாமிர குறைபாடு என்பது உயர் இரத்த அழுத்தத்திற்கும், கொழுப்பிற்கும் காரணமாக அமைகிறது . ஆய்வுகளின் படி தாமிர குறைபாடு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிகளவு தாமிரமும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே மிதமான அளவில் தாமிரம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நரம்பு மற்றும் மூளை செயல்பாடு
சமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அல்சைமர் நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.