Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
தொடர்ந்து 47 மணி நேரம் மலம் கழிக்காமல் இருந்தால் என்ன ஆகும்னு தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கோங்க...
47 நாட்கள் வரையிலும் ஒரு ஆள் மலம் கழிக்காமல் இருந்தால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றி இங்கே விளக்கமாகக் காணலாம்.
குற்றத்தில் இருந்து தப்புவதற்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரியாக முயற்சிக்கிறான். இந்திய அரசியல்வாதிகளிடம் எப்படி தப்ப வேண்டும் என்பதற்கு ஏகப்பட்ட ஐடியாக்கள் கைவசம் இருக்கின்றன.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நெஞ்சுவலி நாடகங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால் ஒருவர்கூட உயிரிழக்காத சம்பவங்கள்தான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உள்ள ஆச்சரியமான விஷயங்கள்

மலச்சிக்கல்
இப்படியெல்லாம் நெளிவு சுழிவுகள் இருக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த லாமென் சாம்பர்ஸ் பயன்படுத்திய உத்தி வேடிக்கையாக இருக்கிறது. விசாரணையில் இருந்து தப்புவதற்காக, மருந்துகளை சாப்பிட்டு மலச்சிக்கலை உருவாக்கியிருக்கிறார் அவர். அந்நாட்டு அரசு அவர்மீதான வழக்கை கைவிட்டது. ஆனால் அவர் சந்தித்த விளைவுகள் எப்படிப்பட்டது.

அபத்தமான ஐடியா
இது ஒரு அபத்தமான ஐடியா என்கிறது மருத்துவ உலகம். ஜான்ஸ் ஹாப்ஹின்ஸ் பல்கலைகழகத்தின் டாக்டர் எலென் ஸ்டீன், குடல் இயக்கம் குறித்தும், செரிமானப்பாதை குறித்து விரிவாக விளக்குகிறார். ஒரு குறிப்பிட்ட மலச்சிக்கலை தொழில்நுட்ப ரீதியாக நீக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர், திடமானதும், அபரிமிதமானத மலங்களை கொண்ட குடலை சீர்செய்வதற்கு பெரும் பிரயத்தனம் தேவை என்கிறார். இதே கோளாறுதான் மேலே குறிப்பிட்ட நபருக்கும் என்கிறார்.

திசுக்கள் காயப்படும்
ஒரு சிவியரான மலச்சிக்கல் குடல் பகுதியில் ஒரு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உடலுக்கு தேவையான திசுக்களை காயப்படுத்துவதோடு, புண்ணை உருவாக்கி விடும் என்கிறார் அவர்.குடல் பகுதியில் அசம்பாவிதங்களை தோற்றுவிக்கும் இந்த காயங்கள், குணமடையாமல் காலப்போக்கில் மோசமடையும்.

வயிற்றுச் சுவர் பாதிப்பு
குடல் பகுதியில் குறுகிய காலத்தில் சேரும் கழிவுகள் கூட பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது. நெகிழக்கூடிய சுழல் தசைகள் செயலற்று போவதற்கும், உறுப்புகளில் வீக்கத்தை உருவாக்கவும இது காரணமாகிவிடுகிறது. இதனால் வலி ஏற்பட்டு உணர்வுகளில் ஒரு அசாதாரண நிலை தென்படும். மலச்சிக்கல் காரணமாக குடலின் குறிப்பிட்ட வடிவம் மாறிவிடக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கும் ஸ்டெயின், இதனால் வயிற்றுச் சுவர் விலகும் என்கிறார்.

சிகிச்சை
மலச்சிக்கலில் இருந்து எளிதான இயல்பு நிலைக்கு திரும்புவது கடினமான ஒன்றாகும். தசைகள் உடலுடன் ஒத்துப் போவதற்கு வேலைகளை செய்ய வேண்டியது அவசியமானதாகும். அசாதாரண சூழலில் இருந்து ஒரு வடிவத்தைப் பெறுவதற்கு தகுந்த சிகிச்சை வேண்டும் என்று ஸ்டெயின் கூறினார்.

பராமரிப்பு
இடுப்புச் தசைகளை நிதானமாகவும் இறுக்கமாகவும் பராமரிக்க வேண்டும். குடல் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாட்டை அதிகரித்து நோயாளிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.. நீண்ட காலத்திற்குப் பிறகு மலச்சிக்கலுக்கு தீர்வு காணும்போது நிம்மதி கிடைக்கிறது. அதேநேரம் கடுமையான மலச்சிக்கலை கொண்டவர்கள், மலம் கழித்தபிறகு மோசமாக உணரக்கூடும்



Click it and Unblock the Notifications











