Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆண்களே, இவற்றையெல்லாம் செய்தால் உங்களின் அந்தரங்க உறுப்பில் நிச்சயம் புற்றுநோய் வரக்கூடும்...!
நாம் செய்ய கூடிய பல செயல்களின் அர்த்தமும் அதற்கான பின் விளைவுகளையும் நாம் கொஞ்சம் கூட எண்ணி பார்ப்பது கிடையாது. இந்த நிலை இன்று நேற்று வந்தது இல்லை. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒவ்வொரு விளைவுகள் ஏற்பட கூடும். சில நமக்கு மகிழ்ச்சியை தரலாம். சில நமக்கு கஷ்டத்தை தரலாம்.

சில நமது உடல் நலத்தையே பாதிக்க செய்யலாம். அந்த வகையில் ஆண்கள் செய்கின்ற சில செயல்களும்,பழக்க வழக்கங்களும் அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இந்த வகை புற்றுநோய் மிக கொடுமையானதாக கருதப்படுகிறது. யவற்றையெல்லாம் செய்வதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படும் என்பதை இனி பார்ப்போம்.

எப்படிப்பட்ட நோய்..?
பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களை குறைத்து விடும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி, புற்றுநோய் செல்களின் ஆதிக்கம் அதிகமாகி விடும்.

கொடிய நோயா..?
பல வகையான நோய்கள் இந்த பூமியில் வந்து கொண்டே இருக்கிறது. அதில் புற்றுநோயை சற்றே மோசமான நோயாக கருதுவதற்கு காரணமும் உள்ளது. இந்த நோய் ஆரம்ப நிலையில் நமது உடலில் உருவாகி, பல நாட்கள் கழித்தே நமக்கு தென்பட கூடும். கிட்டத்தட்ட இவை நம் உடலில் ஒளிந்து இருந்து தாக்குவதால் கொடிய நோயாக கருதுகின்றனர்.

அந்தர பகுதியில் வருமா..?
இந்த வகை புற்றுநோயிற்கு ப்ரோஸ்டேட் கேன்சர் என்ற ஆங்கில பெயர் உண்டு. இவை பிறப்புறுப்புகளில் புற்றுநோய் செல்களாக உருவாகி இதன் தாக்குதலை தருகிறது. இப்போதெல்லாம் இந்த ப்ரோஸ்டேட் புற்றுநோய் எல்லா வகையான வயதுடையவர்களுக்கும் வருகிறதாம்.

மொபைல் என்னும் எமன்..!
உங்களின் மொபைல் போனை அருகில் வைத்து கொண்டு உறங்கினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த செயல் தான் ஆண்களின் விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்றவற்றிற்கு முதன்மையான காரணமாக உள்ளது.

கண்ட உணவுகள்...கண்ட நேரத்தில்..!
அதிக கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை நமக்கு தெரியாமலே நாம் அதிகம் உண்ணுகின்றோம். இந்த நிலை ஆண்களை உடல் பருமனாக மாற்றுகிறது. பிறகு, இவை பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பையும் தருகிறதாம்.

இரவு நேர பழக்கங்கள்...
அதிக நேரம் இரவில் ஆண்கள் கண் விழித்து இருந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, இரவு நேரத்தில் லேப்டாப் அல்லது தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்து கொண்டு நடுராத்திரியில் உறங்க சென்றால் மெலடோனின் என்கிற சுரப்பதை தடை செய்ய கூடும். எனவே, இந்த நிலைதான் ப்ரோஸ்டேட் புற்றுநோயை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

மரபணு கடத்தலா..?
பல நோய்கள் மரபணு ரீதியாக அப்படியே பரம்பரையாக வர தொடங்கும். இதே நிலைதான் பிறப்புறுப்பு புற்றுநோயிலும் தொடர்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இந்த வகை புற்றுநோய் இருந்தால் இது உங்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. இவை உங்களுக்கு 40 அல்லது 50 வயதுக்கு மேல் ஏற்பட கூடும்.

சீஸ் நல்லதா..?
பெரும்பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற அதிக படியான உணவுகள் உங்களின் உடலுக்கு ஆபத்தை தருகிறதாம். ஏனெனில், இவற்றை பதப்படுத்தியே தயார் செய்கின்றனர். குறிப்பாக சீஸ் போன்ற பொருட்களில் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுத்தற்கான காரணிகள் அதிகம் உள்ளது.

பொறித்த, சர்க்கரை உணவுகள்...
இப்போதெல்லாம் நாம் பிட்சா, பர்கர், பிரெஞ்சு பிரிஸ் போன்ற்வற்றையே அதிகம் விரும்பி உண்ணுகின்றோம். இது மிக மோசமான நிலையை நமது உடலுக்கு தருகிறது. இவற்றில் சேர்க்கப்டுகின்ற செயற்கை வகையான இனிப்பூட்டிகளும், செயற்கை நிறமூட்டிகளும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புகை உடலுக்கு பகை..!
பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான காரணம் நிச்சயம் புகையிலையில் உள்ளது தான். ஆனால், இது பிறப்புறுப்பு புற்றுநோயையும் ஏற்படுத்த கூடிய வல்லமை பெற்றது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. எனவே, புகை பழக்கத்தை முதலில் நிறுத்தி கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள்
நாம் அதிக அளவில் இன்று பயன்படுத்த கூடிய பொருட்களில் முதன்மையானவை பிளாஸ்டிக் தான். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இவற்றின் மூலமாக கூட நமக்கு புற்றுநோய்கள் ஏற்படம் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஆதலால் எதை செய்வதாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











