Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
ஆண்களே, இவற்றையெல்லாம் செய்தால் உங்களின் அந்தரங்க உறுப்பில் நிச்சயம் புற்றுநோய் வரக்கூடும்...!
நாம் செய்ய கூடிய பல செயல்களின் அர்த்தமும் அதற்கான பின் விளைவுகளையும் நாம் கொஞ்சம் கூட எண்ணி பார்ப்பது கிடையாது. இந்த நிலை இன்று நேற்று வந்தது இல்லை. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒவ்வொரு விளைவுகள் ஏற்பட கூடும். சில நமக்கு மகிழ்ச்சியை தரலாம். சில நமக்கு கஷ்டத்தை தரலாம்.

சில நமது உடல் நலத்தையே பாதிக்க செய்யலாம். அந்த வகையில் ஆண்கள் செய்கின்ற சில செயல்களும்,பழக்க வழக்கங்களும் அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இந்த வகை புற்றுநோய் மிக கொடுமையானதாக கருதப்படுகிறது. யவற்றையெல்லாம் செய்வதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படும் என்பதை இனி பார்ப்போம்.

எப்படிப்பட்ட நோய்..?
பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களை குறைத்து விடும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி, புற்றுநோய் செல்களின் ஆதிக்கம் அதிகமாகி விடும்.

கொடிய நோயா..?
பல வகையான நோய்கள் இந்த பூமியில் வந்து கொண்டே இருக்கிறது. அதில் புற்றுநோயை சற்றே மோசமான நோயாக கருதுவதற்கு காரணமும் உள்ளது. இந்த நோய் ஆரம்ப நிலையில் நமது உடலில் உருவாகி, பல நாட்கள் கழித்தே நமக்கு தென்பட கூடும். கிட்டத்தட்ட இவை நம் உடலில் ஒளிந்து இருந்து தாக்குவதால் கொடிய நோயாக கருதுகின்றனர்.

அந்தர பகுதியில் வருமா..?
இந்த வகை புற்றுநோயிற்கு ப்ரோஸ்டேட் கேன்சர் என்ற ஆங்கில பெயர் உண்டு. இவை பிறப்புறுப்புகளில் புற்றுநோய் செல்களாக உருவாகி இதன் தாக்குதலை தருகிறது. இப்போதெல்லாம் இந்த ப்ரோஸ்டேட் புற்றுநோய் எல்லா வகையான வயதுடையவர்களுக்கும் வருகிறதாம்.

மொபைல் என்னும் எமன்..!
உங்களின் மொபைல் போனை அருகில் வைத்து கொண்டு உறங்கினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த செயல் தான் ஆண்களின் விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்றவற்றிற்கு முதன்மையான காரணமாக உள்ளது.

கண்ட உணவுகள்...கண்ட நேரத்தில்..!
அதிக கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை நமக்கு தெரியாமலே நாம் அதிகம் உண்ணுகின்றோம். இந்த நிலை ஆண்களை உடல் பருமனாக மாற்றுகிறது. பிறகு, இவை பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பையும் தருகிறதாம்.

இரவு நேர பழக்கங்கள்...
அதிக நேரம் இரவில் ஆண்கள் கண் விழித்து இருந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, இரவு நேரத்தில் லேப்டாப் அல்லது தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்து கொண்டு நடுராத்திரியில் உறங்க சென்றால் மெலடோனின் என்கிற சுரப்பதை தடை செய்ய கூடும். எனவே, இந்த நிலைதான் ப்ரோஸ்டேட் புற்றுநோயை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

மரபணு கடத்தலா..?
பல நோய்கள் மரபணு ரீதியாக அப்படியே பரம்பரையாக வர தொடங்கும். இதே நிலைதான் பிறப்புறுப்பு புற்றுநோயிலும் தொடர்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இந்த வகை புற்றுநோய் இருந்தால் இது உங்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. இவை உங்களுக்கு 40 அல்லது 50 வயதுக்கு மேல் ஏற்பட கூடும்.

சீஸ் நல்லதா..?
பெரும்பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற அதிக படியான உணவுகள் உங்களின் உடலுக்கு ஆபத்தை தருகிறதாம். ஏனெனில், இவற்றை பதப்படுத்தியே தயார் செய்கின்றனர். குறிப்பாக சீஸ் போன்ற பொருட்களில் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுத்தற்கான காரணிகள் அதிகம் உள்ளது.

பொறித்த, சர்க்கரை உணவுகள்...
இப்போதெல்லாம் நாம் பிட்சா, பர்கர், பிரெஞ்சு பிரிஸ் போன்ற்வற்றையே அதிகம் விரும்பி உண்ணுகின்றோம். இது மிக மோசமான நிலையை நமது உடலுக்கு தருகிறது. இவற்றில் சேர்க்கப்டுகின்ற செயற்கை வகையான இனிப்பூட்டிகளும், செயற்கை நிறமூட்டிகளும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புகை உடலுக்கு பகை..!
பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான காரணம் நிச்சயம் புகையிலையில் உள்ளது தான். ஆனால், இது பிறப்புறுப்பு புற்றுநோயையும் ஏற்படுத்த கூடிய வல்லமை பெற்றது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. எனவே, புகை பழக்கத்தை முதலில் நிறுத்தி கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள்
நாம் அதிக அளவில் இன்று பயன்படுத்த கூடிய பொருட்களில் முதன்மையானவை பிளாஸ்டிக் தான். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இவற்றின் மூலமாக கூட நமக்கு புற்றுநோய்கள் ஏற்படம் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஆதலால் எதை செய்வதாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications