Latest Updates
-
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்..
நீங்கள் தூக்கி எறியும் திராட்சையின் விதை உயிரைப் பறிக்கும் பயங்கர நோயையும் அழிக்கும் எனத் தெரியுமா?
சமீபத்திய புதிய ஆய்வில், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது புற்றுநோய் அமைதியாக பலரையும் தாக்குவதாலும், புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவதாலும், முற்றிய நிலையில் நிறைய பேர் புற்றுநோயால் உயிரை இழக்கின்றனர். புற்றுநோய் செல்கள் அழிக்க கீமோ தெரபி சிகிச்சைகள் இருந்தாலும், ஓர் இயற்கை மருந்தும் உள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் திராட்சை. பொதுவாக இந்த திராட்சையில் உள்ள விதையை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் மற்ற அனைத்து பழங்களை விடவும், திராட்சையின் விதைகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் உள்ளது.

ஆய்வு
சமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பக்கவிளைவு அற்ற பொருள்
பொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும். ஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
இப்போது அந்த திராட்சை விதையைக் கொண்டு எப்படி மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
திராட்சை விதை - 1 கப்
கண்ணாடி ஜார் - 1
சுத்தமான காட்டன் துணி - 1

தயாரிக்கும் முறை:
* முதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து, நன்கு கழுவி, துணி கொண்டு கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி, 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும்.
* 3 நாட்கள் கழித்து, அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியை சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால், உடலினுள் ஓர் அற்புத மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications











