Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
உங்கள் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி அச்சம் கொள்கிறீர்களா? முதல்ல இத படிங்க...
இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலம் குறித்து அதிக அச்சம் கொள்பவர்கள் தான் ஹைப்போகாண்ரியாக் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இது ஒரு வகையான பதற்ற நிலையைக் குறிக்கும். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அச்சம் கொள்வார்கள். அதுவும் ஆரோக்கியமாக இருந்தாலும், உடலில் ஏதோ பிரச்சனை இருக்குமோ என்று அச்சம் கொள்வார்கள்.
இப்பிரச்சனையைக் கொண்டவர்கள், தங்களுக்கு சிறு தலைவலி வந்தாலே அதிகம் பதற்றம் கொள்வார்கள். இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
கண்களில் லேசாக வலி ஏற்பட்டாலும், உடனே கூகுளில் கண் வலி எந்த காரணத்திற்கு எல்லாம் வரும் என்று தேட ஆரம்பித்தால், அத்தகையவர்கள் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அறிகுறி #2
சிறு தலைவலி ஏற்பட்டாலும், அது ஒற்றை தலைவலியாக இருக்குமோ அல்லது மூளையில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து அதிகம் அச்சம் கொண்டாலும், அது ஹைப்போகாண்ட்ரியாக் இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #3
தங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, மருத்துவர் ஒன்றும் இல்லை என்று கூறினால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல், இல்லை ஏதோ பிரச்சனை உடலினுள் உள்ளது என்று தொடர்ந்து நினைத்து அச்சம் கொள்வதும், இப்பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அறிகுறி #4
மருத்துவரின் வாக்கில் நம்பிக்கை இல்லாமல், வேறொரு மருத்துவரை அணுகினாலும், அதுவும் ஹைப்போகாண்ட்ரியாக் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #5
நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவரிடம் தொடர்ந்து தங்களது உடல்நல பிரச்சனையைப் பற்றி பேசி, அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

குறிப்பு
உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றியே கவலை கொண்டால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, கவுன்சிலிங் மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டும்.



Click it and Unblock the Notifications