Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க!
உங்கள் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி அச்சம் கொள்கிறீர்களா? முதல்ல இத படிங்க...
இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலம் குறித்து அதிக அச்சம் கொள்பவர்கள் தான் ஹைப்போகாண்ரியாக் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இது ஒரு வகையான பதற்ற நிலையைக் குறிக்கும். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அச்சம் கொள்வார்கள். அதுவும் ஆரோக்கியமாக இருந்தாலும், உடலில் ஏதோ பிரச்சனை இருக்குமோ என்று அச்சம் கொள்வார்கள்.
இப்பிரச்சனையைக் கொண்டவர்கள், தங்களுக்கு சிறு தலைவலி வந்தாலே அதிகம் பதற்றம் கொள்வார்கள். இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
கண்களில் லேசாக வலி ஏற்பட்டாலும், உடனே கூகுளில் கண் வலி எந்த காரணத்திற்கு எல்லாம் வரும் என்று தேட ஆரம்பித்தால், அத்தகையவர்கள் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அறிகுறி #2
சிறு தலைவலி ஏற்பட்டாலும், அது ஒற்றை தலைவலியாக இருக்குமோ அல்லது மூளையில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து அதிகம் அச்சம் கொண்டாலும், அது ஹைப்போகாண்ட்ரியாக் இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #3
தங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, மருத்துவர் ஒன்றும் இல்லை என்று கூறினால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல், இல்லை ஏதோ பிரச்சனை உடலினுள் உள்ளது என்று தொடர்ந்து நினைத்து அச்சம் கொள்வதும், இப்பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அறிகுறி #4
மருத்துவரின் வாக்கில் நம்பிக்கை இல்லாமல், வேறொரு மருத்துவரை அணுகினாலும், அதுவும் ஹைப்போகாண்ட்ரியாக் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #5
நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவரிடம் தொடர்ந்து தங்களது உடல்நல பிரச்சனையைப் பற்றி பேசி, அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

குறிப்பு
உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றியே கவலை கொண்டால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, கவுன்சிலிங் மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டும்.



Click it and Unblock the Notifications