Latest Updates
-
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்..
உங்கள் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி அச்சம் கொள்கிறீர்களா? முதல்ல இத படிங்க...
இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலம் குறித்து அதிக அச்சம் கொள்பவர்கள் தான் ஹைப்போகாண்ரியாக் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இது ஒரு வகையான பதற்ற நிலையைக் குறிக்கும். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அச்சம் கொள்வார்கள். அதுவும் ஆரோக்கியமாக இருந்தாலும், உடலில் ஏதோ பிரச்சனை இருக்குமோ என்று அச்சம் கொள்வார்கள்.
இப்பிரச்சனையைக் கொண்டவர்கள், தங்களுக்கு சிறு தலைவலி வந்தாலே அதிகம் பதற்றம் கொள்வார்கள். இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
கண்களில் லேசாக வலி ஏற்பட்டாலும், உடனே கூகுளில் கண் வலி எந்த காரணத்திற்கு எல்லாம் வரும் என்று தேட ஆரம்பித்தால், அத்தகையவர்கள் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அறிகுறி #2
சிறு தலைவலி ஏற்பட்டாலும், அது ஒற்றை தலைவலியாக இருக்குமோ அல்லது மூளையில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து அதிகம் அச்சம் கொண்டாலும், அது ஹைப்போகாண்ட்ரியாக் இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #3
தங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, மருத்துவர் ஒன்றும் இல்லை என்று கூறினால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல், இல்லை ஏதோ பிரச்சனை உடலினுள் உள்ளது என்று தொடர்ந்து நினைத்து அச்சம் கொள்வதும், இப்பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அறிகுறி #4
மருத்துவரின் வாக்கில் நம்பிக்கை இல்லாமல், வேறொரு மருத்துவரை அணுகினாலும், அதுவும் ஹைப்போகாண்ட்ரியாக் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #5
நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவரிடம் தொடர்ந்து தங்களது உடல்நல பிரச்சனையைப் பற்றி பேசி, அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

குறிப்பு
உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றியே கவலை கொண்டால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, கவுன்சிலிங் மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டும்.



Click it and Unblock the Notifications











