Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்கள் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி அச்சம் கொள்கிறீர்களா? முதல்ல இத படிங்க...
இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல்நலம் குறித்து அதிக அச்சம் கொள்பவர்கள் தான் ஹைப்போகாண்ரியாக் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். இது ஒரு வகையான பதற்ற நிலையைக் குறிக்கும். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அச்சம் கொள்வார்கள். அதுவும் ஆரோக்கியமாக இருந்தாலும், உடலில் ஏதோ பிரச்சனை இருக்குமோ என்று அச்சம் கொள்வார்கள்.
இப்பிரச்சனையைக் கொண்டவர்கள், தங்களுக்கு சிறு தலைவலி வந்தாலே அதிகம் பதற்றம் கொள்வார்கள். இங்கு ஒருவர் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறி #1
கண்களில் லேசாக வலி ஏற்பட்டாலும், உடனே கூகுளில் கண் வலி எந்த காரணத்திற்கு எல்லாம் வரும் என்று தேட ஆரம்பித்தால், அத்தகையவர்கள் ஹைப்போகாண்ட்ரியாக் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

அறிகுறி #2
சிறு தலைவலி ஏற்பட்டாலும், அது ஒற்றை தலைவலியாக இருக்குமோ அல்லது மூளையில் கட்டி ஏதேனும் இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து அதிகம் அச்சம் கொண்டாலும், அது ஹைப்போகாண்ட்ரியாக் இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #3
தங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, மருத்துவர் ஒன்றும் இல்லை என்று கூறினால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல், இல்லை ஏதோ பிரச்சனை உடலினுள் உள்ளது என்று தொடர்ந்து நினைத்து அச்சம் கொள்வதும், இப்பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அறிகுறி #4
மருத்துவரின் வாக்கில் நம்பிக்கை இல்லாமல், வேறொரு மருத்துவரை அணுகினாலும், அதுவும் ஹைப்போகாண்ட்ரியாக் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியே.

அறிகுறி #5
நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவரிடம் தொடர்ந்து தங்களது உடல்நல பிரச்சனையைப் பற்றி பேசி, அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

குறிப்பு
உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றியே கவலை கொண்டால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, கவுன்சிலிங் மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு தெளிவு கிட்டும்.



Click it and Unblock the Notifications