Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கா? எப்படி கண்டறியலாம்?
இரத்தசோகையை கண்டறிவது எப்படி
இரத்தசோகை இந்திய பெண்களுக்கு அதிகளவில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடு தான் இரத்தசோகை என அழைக்கப்படுகிறது. இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன.
நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே இரத்தசோகை என்கிறோம்.
பெண்களுக்கு பாதிப்பு அதிகம்
பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு அதிகம், அதிலும் 18-45 வயதிற்குள் இருக்கும் பெண்கள் இரத்தசோகையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இரும்புசத்து குறைபாடு
இந்தியாவில் பெரும்பாலும் இந்த இரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் இரத்தசோகை தாக்கும் என்றாலும், பெண்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை இருந்தால், குழந்தைக்கும் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்காமல் போய்விடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
இதனை எப்படி கண்டறிவது?
எப்போதும் சோர்வாக உணர்வது, பசி எடுக்காமல் இருப்பது, எந்த செயல்களிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, தூக்கம் வருவது போல இருப்பது, கண்களின் கீழ்ப்பகுதி, நாக்கு, மேல்லண்ணம், விரல் நகங்கள் ஆகியவை சிவப்பு நிறத்தில் இல்லாமல் வெளுத்த நிறத்தில் இருப்பது போன்றவை இரத்தசோகையின் அறிகுறிகள் ஆகும்.
பரிசோதனை
இரத்தசோகையை சாதரணமாக நினைத்து விடக் கூடாது. தகுந்த பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானலும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
என்ன சாப்பிடலாம்
இரத்தசோகை வரமால் இருக்க சரிவிகித உணவு, அதாவது நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக உணவில் முட்டை, பேரிச்சை, பால், இறைச்சி, கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.