4 வருட சிறை வாழ்க்கையில் சசிகலா சந்திக்க வாய்ப்புள்ள சில பிரச்சனைகள்!

இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சூழலே மிகவும் மோசமாக இருந்தது. ஜெயலலிதா இறந்த பின்பு, முதல்வர் பதவிக்கு சசிகலாவிற்கும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இறுதியாக இன்று சசிகலா மீதிருந்த சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சசிகலா குற்றவாளி என கூறி 4 வருட சிறை தண்டனை கிடைத்துவிட்டது.

Health Problems Sasikala Needs To Be Careful About While In Jail

இவ்வளவு நாட்கள் நடத்திய நாடகம் அனைத்தும் வீணாகிவிட்டது. இனிமேல் சிறை வாழ்க்கையைத் தான் வாழப் போகிறோம் என்பது முடிவாகிவிட்டது. மேலும் சசிகலாவிற்கு உடல்நல பிரச்சனை இருப்பதாக எந்த ஒரு ரிப்போர்ட்டும் இல்லை.

இருப்பினும், சிறை வாழ்க்கை கொடுமையாக இருக்கும் என்பதால், 3.6 வருட வாழ்க்கையை ஒருசில வசதிகளுடன் கழிக்க சிறை அதிகாரிகளுக்கு தனது விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சசிகலாவின் விருப்பப் பட்டியல்

சசிகலாவின் விருப்பப் பட்டியல்

வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் செல்வதற்கு இடம், 24 மணிநேர தண்ணீர் வசதி, குடிப்பதற்கு மினரல் வாட்டர் போன்றவையே சிறை செல்லும் சசிகலாவின் வேண்டுகோள்.

முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சென்றதால், சகல வசதிகளுடன் கூடிய அறையில் இருந்தார். ஆனால் இந்த முறை விஐபி அறைகளைத் தான் கொடுக்க உள்ளார்கள். இருந்தாலும், ஜெயில் என்றாலே சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது தானே. இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சளி, இருமல்

சளி, இருமல்

சிறையில் சுகாதாரம் சற்று குறைவாக இருப்பதால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சரும அரிப்புகள்

சரும அரிப்புகள்

யாராலும் சிறையில் மிகவும் சுத்தமாக இருக்க முடியாது. எனவே சரும அரிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

சிறை அறையில் அலர்ஜியை உண்டாக்கும் தூசிகள் மற்றும் பூச்சிகளால், சுவாச பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

சிறுநீரக பாதை தொற்று

சிறுநீரக பாதை தொற்று

சிறையில் கழிவறைகள் அசுத்தமாகவும், அழுக்காகவும் இருப்பதால், பெண்களுக்கு சிறுநீரக பாதை தொற்றுகள் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

சிறையில் நான்கு சுவற்றிற்கு உள்ளேயே இருப்பதால், கண்டதை நினைத்து மனதில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி மன அழுத்தம் அதிகமானால், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, February 15, 2017, 18:24 [IST]
Desktop Bottom Promotion