Latest Updates
-
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...! -
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்..
4 வருட சிறை வாழ்க்கையில் சசிகலா சந்திக்க வாய்ப்புள்ள சில பிரச்சனைகள்!
இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சூழலே மிகவும் மோசமாக இருந்தது. ஜெயலலிதா இறந்த பின்பு, முதல்வர் பதவிக்கு சசிகலாவிற்கும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இறுதியாக இன்று சசிகலா மீதிருந்த சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சசிகலா குற்றவாளி என கூறி 4 வருட சிறை தண்டனை கிடைத்துவிட்டது.

இவ்வளவு நாட்கள் நடத்திய நாடகம் அனைத்தும் வீணாகிவிட்டது. இனிமேல் சிறை வாழ்க்கையைத் தான் வாழப் போகிறோம் என்பது முடிவாகிவிட்டது. மேலும் சசிகலாவிற்கு உடல்நல பிரச்சனை இருப்பதாக எந்த ஒரு ரிப்போர்ட்டும் இல்லை.
இருப்பினும், சிறை வாழ்க்கை கொடுமையாக இருக்கும் என்பதால், 3.6 வருட வாழ்க்கையை ஒருசில வசதிகளுடன் கழிக்க சிறை அதிகாரிகளுக்கு தனது விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

சசிகலாவின் விருப்பப் பட்டியல்
வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் செல்வதற்கு இடம், 24 மணிநேர தண்ணீர் வசதி, குடிப்பதற்கு மினரல் வாட்டர் போன்றவையே சிறை செல்லும் சசிகலாவின் வேண்டுகோள்.
முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சென்றதால், சகல வசதிகளுடன் கூடிய அறையில் இருந்தார். ஆனால் இந்த முறை விஐபி அறைகளைத் தான் கொடுக்க உள்ளார்கள். இருந்தாலும், ஜெயில் என்றாலே சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது தானே. இங்கு சிறையில் இருந்தால் சந்திக்க நேரிடும் சில உடல் நல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சளி, இருமல்
சிறையில் சுகாதாரம் சற்று குறைவாக இருப்பதால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சரும அரிப்புகள்
யாராலும் சிறையில் மிகவும் சுத்தமாக இருக்க முடியாது. எனவே சரும அரிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சுவாச பிரச்சனைகள்
சிறை அறையில் அலர்ஜியை உண்டாக்கும் தூசிகள் மற்றும் பூச்சிகளால், சுவாச பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

சிறுநீரக பாதை தொற்று
சிறையில் கழிவறைகள் அசுத்தமாகவும், அழுக்காகவும் இருப்பதால், பெண்களுக்கு சிறுநீரக பாதை தொற்றுகள் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மன அழுத்தம்
சிறையில் நான்கு சுவற்றிற்கு உள்ளேயே இருப்பதால், கண்டதை நினைத்து மனதில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி மன அழுத்தம் அதிகமானால், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications











