Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சோம்பேறியா இருக்கிறதுல கூட நன்மைகள் இருக்கு!! எப்படி தெரியுமா?
சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் தான் திறமையானவர்களாக இருப்பார்கள்
உங்களின் ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சொன்னால் பெரும்பாலானோர் சட்டென சொல்வது சோம்பேறித்தனம். சோம்பேறித்தனத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் இதில் சில நல்ல விஷயங்களும் இருக்கிறது. சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் தான் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்களாம்! புதுப்புது யுக்திகளை எளிதாக கையாள்வதில் திறம்பட செயல்படுவார்கள்.

திறமை :
சோம்பேறிகள் கண்டுபிடிப்புகளை பெரிதும் விரும்புவர். அன்றாட வேலைகளைச் செய்யவே சோம்பேறித்தனப்படுகிறார்கள், தன் சோம்பேறித்தனத்தை ஜெயிக்க அதனை சமாளிக்க என்ன செய்யலாம் என்று புதிய யுக்தியை கையாள்வர்.

குட்டித்தூக்கம் :
சோம்பேறிகள் நீண்ட நேரம் தூங்குவதை விட குட்டித்தூக்கம் போடுவதை பெரும்பாலும் விரும்புவர். செய்யும் வேலைகளுக்கு இடையியே இப்படியான ஓய்வு கொடுப்பதால் மூளை செயல்படுகின்ற சிறிது நேரத்திலும் ஆக்கப்பூர்வமாகவும் புத்திக்கூர்மையாகவும் இருக்கும்.

நிதானத்துடன் கூடிய வெற்றி :
எப்போதும் பரபரப்பாக சுழன்று வேலை செய்வதை விரும்பாது. அடிக்கடி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வை கொடுத்துவிடுவதால் ஒவ்வொரு முடிவுகளையும் நிதானத்துடன் எடுக்க முடியும். வேலைகளில் மன அழுத்தம், எதுவும் இருப்பதில்லை.

தியானம் :
சோம்பேறிகள் பெரும்பாலும் உடலுழைப்பில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள். இதுவும் ஒரு வகை தியானம் தான். உடல் வேலை செய்யாது மனம் அலைபாயும் . அலை பாயும் மனதை ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதில் அவர்களின் திறமை அடங்கியிருக்கிறது.

கவனம் :
சோம்பேறிகள் பல வேலைகளை ஒன்றாக செய்யமாட்டார்கள். சோம்பேறிகள் ஒரு வேலையை மட்டுமே செய்யவர் அதிலும் முழு கவனத்துடன் செயல்படுவர். பரபரப்பாக அடுத்து என்ன என்று ஓடுகிறவர்களுக்கு தான் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த யோசனைகள் இருக்கும் இவர்களுக்கு அதைப்பற்றிய கவலையெல்லாம் கிடையாது. செய்கின்ற ஓரு வேலையை உருப்பாடியாக செய்வதில் முனைப்பைக் காட்டுவர்.



Click it and Unblock the Notifications











