Latest Updates
-
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை நாம சுவாசிச்சா என்ன ஆபத்து உண்டாகும்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!
வருடந்தோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுற்றுசூழல் மாசினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது வழக்கம்.
வருடந்தோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுற்றுசூழல் மாசினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது வழக்கம். உலகம் வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல் போன்றவை முக்கியமான பிரச்சனைகள். இந்த வருடத்தின் கருப் பொருள் 'மக்களை இயற்கையோடு இணைப்பது' ஆகும்.
உலகின் பல நகரங்களில் சுத்தமான காற்று என்பதே இல்லை. மாசடைந்த காற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கூறுகள் கலந்துள்ளன. மாசடைந்த காற்றினால் கடந்த ஒரு ஆண்டில் 2 மில்லியன் பேர் காற்று மாசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இங்கு காற்று மாசுபடுதல் குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1
காற்று மாசுபாடு சிறுநீர்ப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என சில ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன. மாசடைந்த காற்றை சுவாசிப்பது என்பது சிகரெட் புகையை சுவாசிப்பதற்கு சமம். அதோடு மாசுக்கள் நிறைந்த காற்றினை சுவாசிப்போருக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.

உண்மை #2
காற்றினை எது மாசடைய வைக்கிறது? தற்போது போக்குவரத்து, தொழில்துறை உமிழ்வு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடியிருப்பு கேஜெட்டுகள் போன்றவைகள் தான் காற்றினை மாசடைய வைக்கிறது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் சுவாச பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

உண்மை #3
இன்று சில இடங்களில் மாசுபாடுகளானது ஆபத்தான நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இது மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் தொழில்மயமான நகரங்களில் அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

உண்மை #4
எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலிகளை மாசடைந்த காற்றினை சுவாசிக்க வைத்ததில், அந்த எலிகளுக்கு நுரையீரல் கட்டிகளின் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதிலும் மாசடைந்த காற்றில் தான் முதன்மையான மனித கார்சினோஜென்களாக கருதப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் உள்ளன.

உண்மை #5
காற்று மாசுபாடு ஒவ்வொரு இடத்திலும் வேறுபடும். அதில் ஆசியா, வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா போன்றவை மிகவும் மாசுபடுத்தப்பட்ட இடங்களாகும்.



Click it and Unblock the Notifications