Just In
- 7 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 1 hr ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 2 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 4 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தினமும் தேன் கலந்த சீரகத் தண்ணீரை ஒரு கப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
சமையலறையில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அங்குள்ள ஒவ்வொரு பொருட்களிலும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!
சொல்லப்போனால், மருத்துவருக்கும் மருந்துகளுக்கும் செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறைப் பொருட்களுக்கு பணத்தை செலவு செய்தால், நோய்கள் ஆரோக்கியமான முறையில் குணமாவதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
தொடர்ந்து
120
நாட்கள்
கறிவேப்பிலையை
பச்சையாக
சாப்பிட்டு
வந்தால்
உடலில்
நடைபெறும்
மாற்றங்கள்!!!
அப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் சீரகம். இந்த சீரகத்தைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து குடித்து வந்தால், நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சரி, இப்போது அந்த சீரக பானத்தின் செய்முறை மற்றும் அதனைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நன்மை #1
சீரக பானத்தை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, உடல் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் இருக்கும்.
நன்மை #2
தேன் கலந்த சீரகத் தண்ணீர் செரிமான அமிலத்தின் சுரப்பை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.
நன்மை #3
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு, சீரக பானம் மிகவும் அற்புதமான ஓர் மருந்து. இதனைக் குடித்து வந்தால், மலம் இளகி குடலியக்கம் சீராக்கப்பட்டு, உடனே மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
நன்மை #4
சீரகத்தில் உள்ள கியூமினல்டிஹைடு என்னும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவை உடல் முழுவதும் பரவுவதை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
நன்மை #5
தேன் கலந்த சீரகத் தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவை சீராகப் பராமரிக்கும். இதனால் உடலில் இரத்த அழுத்தமானது சீரான அளவில் இருக்கும்.
நன்மை #6
சீரக பானத்தில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளதால், சுவாச அமைப்பில் உள்ள சளி சுரப்பிகளில் உள்ள உட்காயங்களை சரிசெய்து, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைக் குறைக்கும்.
நன்மை #7
தேன் கலந்த சீரகத் தண்ணீரில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே இது உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 2 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் நீரை கொதிக்க வைக்கவும். பின் சீரகத்தைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால், மருத்துவ குணம் நிறைந்த சீரக பானம் தயார்!