Latest Updates
-
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்!
முட்டைகோஸ் இலைகளை மார்பு மற்றும் கால்களில் வைத்து கட்டுவதால் உண்டாகும் நன்மைகள்!
முட்டைகோஸை இதுவரை நீங்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்ற சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், முட்டைகோஸ் இலைகளுக்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மையும் இருக்கிறதாம். இது குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமியின் நியூ மதர்ஸ் பிரெஸ்ட் கைடு எனும் புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது.
இரவில் படுக்கும் போது காலில் ஈரமான சாக்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!
குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது. சிலருக்கு பாலூட்டும் போது வலி ஏற்படும் அதை குறைக்க இந்த முட்டைகோஸ் இலைகள் உதவுகின்றன. மேலும், தைராய்டு சுரப்பி, கை, கால் வீக்கம், தலைவலி போன்றவற்றுக்கும் கூட இவை நல்ல பயனளிக்கின்றன.

பாலூட்டும் போதிலான வலி
சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது கடினமாக அல்லது மிகுந்த வலியை உணர்வார்கள். அந்த வலியை போக்க முட்டைகோஸ் இலைகள் பயன்படுகின்றன.

முறை
முதல் அடுக்கை தவிர்த்து அதற்கு அடுத்த இரண்டாம் அடுக்கான முட்டைகோஸ் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிப்பிளில் படாமால் மார்பில் மட்டும் வைத்து மேலாடை அணிந்துக் கொள்ளவும்.

முறை
முட்டைகோஸ் புதியதாக இருக்க வேண்டும். அந்த முட்டைகோஸை பயன்படுத்தும் முன்னர் நீரில் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் தோல் பகுதியில் நச்சு அல்லது பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இது முட்டைகோஸை குளிர்சியாக்குகிறது.

முறை
இலையின் நடு பகுதியில் தண்டு போன்று இருக்கும், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

முறை
15 - 20 நிமிடம் வரை வைத்திருக்கவும். அதன் குளிர்ச்சி நீங்கி சூடாவது போன்ற உணர்வு வரும் போது அதை நீக்கிவிடவும்.

முறை
தொடர்ச்சியான முறையில் இதை செய்து வர, மார்பக பகுதியில் இரத்த நாளவீக்கம் ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய இது பயனளிக்கும். மேலும், பாலூட்டும் போது உண்டாகும் வலியையும் குறைக்க இது உதவும்.

தைராய்டு சுரப்பி
வளர்ச்சிதை மாற்றம், ஹார்மோன் வளர்ச்சி, உடல் பாகங்களின் செயலாற்றல், செரிமான மண்டலம் போன்றவற்றுக்கு தைராய்டு சுரப்பி மிக முக்கியமானது ஆகும்.

தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பி பிரச்சனை எற்பட்டுள்ளவர்கள் முட்டைகோஸ் இலைகளை தொண்டை பகுதியில் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டுள்ள இடத்தில் வைத்து கட்டுங்கள் (வெளிப்புறத்தில்).

தைராய்டு சுரப்பி
இரவு முழுக்க இதை பேண்டேஜ் வைத்து கட்டி, காலையில் அகற்றி விடவும். இது தைராய்டு சுரப்பியை பழைய இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறதாம்.

வீக்கம்
கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அவர்களும் கூட இந்த முட்டைகோஸ் இலைகளை நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்து வீக்கம் உள்ள இடங்களில் பேண்டேஜ் உதவியுடன் இந்த இலைகளை கட்டி வீக்கத்தை குறைக்கலாம். முக்கியமாக இதை உறங்கும் போது இரவில் செய்வது நல்ல பயனளிக்கும்.

தலைவலி
தலைவலி உள்ளவர்கள், முட்டைகோஸ் இலைகளை நெற்றியில் வைத்து பயன்படுத்தலாம். தொப்பி அல்லது வேறு ஏதேனும் உதவியுடன் தலையில் நிற்கும் வண்ணம் செய்யவும்.

குறிப்பு
சிலருக்கு சரும பிரச்சனைகள் போன்று ஏதேனும் இருந்தாலோ அல்லது அவரவர் உடல் நிலை சார்ந்து ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு இம்முறையை முயற்சி செய்யவும்.



Click it and Unblock the Notifications