Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
முட்டைகோஸ் இலைகளை மார்பு மற்றும் கால்களில் வைத்து கட்டுவதால் உண்டாகும் நன்மைகள்!
முட்டைகோஸை இதுவரை நீங்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்ற சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், முட்டைகோஸ் இலைகளுக்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மையும் இருக்கிறதாம். இது குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமியின் நியூ மதர்ஸ் பிரெஸ்ட் கைடு எனும் புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது.
இரவில் படுக்கும் போது காலில் ஈரமான சாக்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!
குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது. சிலருக்கு பாலூட்டும் போது வலி ஏற்படும் அதை குறைக்க இந்த முட்டைகோஸ் இலைகள் உதவுகின்றன. மேலும், தைராய்டு சுரப்பி, கை, கால் வீக்கம், தலைவலி போன்றவற்றுக்கும் கூட இவை நல்ல பயனளிக்கின்றன.

பாலூட்டும் போதிலான வலி
சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது கடினமாக அல்லது மிகுந்த வலியை உணர்வார்கள். அந்த வலியை போக்க முட்டைகோஸ் இலைகள் பயன்படுகின்றன.

முறை
முதல் அடுக்கை தவிர்த்து அதற்கு அடுத்த இரண்டாம் அடுக்கான முட்டைகோஸ் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிப்பிளில் படாமால் மார்பில் மட்டும் வைத்து மேலாடை அணிந்துக் கொள்ளவும்.

முறை
முட்டைகோஸ் புதியதாக இருக்க வேண்டும். அந்த முட்டைகோஸை பயன்படுத்தும் முன்னர் நீரில் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் தோல் பகுதியில் நச்சு அல்லது பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இது முட்டைகோஸை குளிர்சியாக்குகிறது.

முறை
இலையின் நடு பகுதியில் தண்டு போன்று இருக்கும், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

முறை
15 - 20 நிமிடம் வரை வைத்திருக்கவும். அதன் குளிர்ச்சி நீங்கி சூடாவது போன்ற உணர்வு வரும் போது அதை நீக்கிவிடவும்.

முறை
தொடர்ச்சியான முறையில் இதை செய்து வர, மார்பக பகுதியில் இரத்த நாளவீக்கம் ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய இது பயனளிக்கும். மேலும், பாலூட்டும் போது உண்டாகும் வலியையும் குறைக்க இது உதவும்.

தைராய்டு சுரப்பி
வளர்ச்சிதை மாற்றம், ஹார்மோன் வளர்ச்சி, உடல் பாகங்களின் செயலாற்றல், செரிமான மண்டலம் போன்றவற்றுக்கு தைராய்டு சுரப்பி மிக முக்கியமானது ஆகும்.

தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பி பிரச்சனை எற்பட்டுள்ளவர்கள் முட்டைகோஸ் இலைகளை தொண்டை பகுதியில் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டுள்ள இடத்தில் வைத்து கட்டுங்கள் (வெளிப்புறத்தில்).

தைராய்டு சுரப்பி
இரவு முழுக்க இதை பேண்டேஜ் வைத்து கட்டி, காலையில் அகற்றி விடவும். இது தைராய்டு சுரப்பியை பழைய இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறதாம்.

வீக்கம்
கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அவர்களும் கூட இந்த முட்டைகோஸ் இலைகளை நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்து வீக்கம் உள்ள இடங்களில் பேண்டேஜ் உதவியுடன் இந்த இலைகளை கட்டி வீக்கத்தை குறைக்கலாம். முக்கியமாக இதை உறங்கும் போது இரவில் செய்வது நல்ல பயனளிக்கும்.

தலைவலி
தலைவலி உள்ளவர்கள், முட்டைகோஸ் இலைகளை நெற்றியில் வைத்து பயன்படுத்தலாம். தொப்பி அல்லது வேறு ஏதேனும் உதவியுடன் தலையில் நிற்கும் வண்ணம் செய்யவும்.

குறிப்பு
சிலருக்கு சரும பிரச்சனைகள் போன்று ஏதேனும் இருந்தாலோ அல்லது அவரவர் உடல் நிலை சார்ந்து ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு இம்முறையை முயற்சி செய்யவும்.



Click it and Unblock the Notifications