Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க
ரத்தக் கொதிப்பை குறைக்கும் விபரீத காரணி யோகா- தினம் ஒரு யோகா
ரத்த அழுத்தம் என்பது ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் அளவு வழக்கத்தை விட அதிக அளவு இருந்தால் ஏற்படுவது ஆகும். இது உங்கள் உடலின் செயல்பாடுகளை பாதிக்கும். மிக அதிக அளவு ரத்த அழுத்தம் இருந்தால், இதயம், மூளை ஆகிய முக்கிய உறுப்புகளை பாதிக்கும்.
இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் 120/80 என கணக்கிடப்படுகிறது. ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு 150/100 அல்லது அதற்கு மேல் கடந்து போகும்.

இந்த கோளாறு அபாயகரமானது. ரத்தக் கொதிப்பால், இதய நோய்கள், மூளை பாதிப்பு ஏற்படும். ரத்தக் கொதிப்பினை இரண்டாக பிரிக்கலாம்.
முதல்வகை ரத்தக் கொதிப்பு :
இது உணவுபழக்கம், குடிப்பழக்கம், மரபு ரீதியாக, மற்றும் வேலை அழுத்தம் காரணமாக சிலருக்கு வரும்.
இரண்டாம் நிலை ரத்தக் கொதிப்பு :
இது சிறுநீரகங்களை பாதிக்கும் போது, அல்லது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் இந்த வகையான ரத்தக் கொதிப்பு ஏற்படும்.
ரத்தக் கொதிப்பினை சைலன்ட் கில்லர் என்று கூறுவார்கள். ஏனெனில் அது எப்போது வரும் என்றே சில சமயங்களில் கண்டுபிடிக்க இயலாது. பிரச்சனைகள் வந்தபின்தான் சிலருக்கு ரத்தக் கொதிப்பில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும்
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், மனதை மிகவும் அமைதியாக சூழ்நிலையில் வைத்திருப்பது மிக அவசியம். யோகா மிக அற்புதமான பலனைத் தரும். மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தும் தியானமும் நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு தரும்.
யோகா நிறைய நோய்களுக்கு தீர்வு தருகிறது. இதில் ரத்தக் கொதிப்பும் உள்ளடங்கும்.
விபரீத காரணி யோகா :
முதலில் சுவருக்கு எதிராக படுத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சினை நன்றாக இழுத்து, விட வேண்டும். பின் இரு கால்களையும் தூக்கி, சுவற்றில் மேல் ஒட்டியபடி வையுங்கள்.
நேராக நெட்டுக் குத்தலாக உங்கள் கால்கள் சுவற்றில் இருக்கும்படி, உங்கள் பொஸிஷன் இருக்க வேண்டும். தலையையும் உடலையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள்.
10 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பிறகு மெதுவாக கால்களை தாழ்த்தி பழைய நிலைக்கு வாருங்கள்.
உங்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலி இருந்தால், இடுப்பிற்கு, மிருதுவான தலையணை அல்லது துணியினை முட்டுக் கொடுக்கலாம்.
பலன்கள் :
கால்களை மேலே தூக்கி செய்யப்படும் இந்த யோகாவில், வயிற்றுப் பகுதிகளில் உள்ள உறுப்புகள் நன்றாக செயல்படும். பசியினை தூண்டும்.ரத்தத்தின் அடர்த்தி குறையும். ரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும். மன அமைதியை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


