Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ரத்தக் கொதிப்பை குறைக்கும் விபரீத காரணி யோகா- தினம் ஒரு யோகா
ரத்த அழுத்தம் என்பது ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் அளவு வழக்கத்தை விட அதிக அளவு இருந்தால் ஏற்படுவது ஆகும். இது உங்கள் உடலின் செயல்பாடுகளை பாதிக்கும். மிக அதிக அளவு ரத்த அழுத்தம் இருந்தால், இதயம், மூளை ஆகிய முக்கிய உறுப்புகளை பாதிக்கும்.
இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் 120/80 என கணக்கிடப்படுகிறது. ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு 150/100 அல்லது அதற்கு மேல் கடந்து போகும்.

இந்த கோளாறு அபாயகரமானது. ரத்தக் கொதிப்பால், இதய நோய்கள், மூளை பாதிப்பு ஏற்படும். ரத்தக் கொதிப்பினை இரண்டாக பிரிக்கலாம்.
முதல்வகை ரத்தக் கொதிப்பு :
இது உணவுபழக்கம், குடிப்பழக்கம், மரபு ரீதியாக, மற்றும் வேலை அழுத்தம் காரணமாக சிலருக்கு வரும்.
இரண்டாம் நிலை ரத்தக் கொதிப்பு :
இது சிறுநீரகங்களை பாதிக்கும் போது, அல்லது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் இந்த வகையான ரத்தக் கொதிப்பு ஏற்படும்.
ரத்தக் கொதிப்பினை சைலன்ட் கில்லர் என்று கூறுவார்கள். ஏனெனில் அது எப்போது வரும் என்றே சில சமயங்களில் கண்டுபிடிக்க இயலாது. பிரச்சனைகள் வந்தபின்தான் சிலருக்கு ரத்தக் கொதிப்பில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும்
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், மனதை மிகவும் அமைதியாக சூழ்நிலையில் வைத்திருப்பது மிக அவசியம். யோகா மிக அற்புதமான பலனைத் தரும். மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தும் தியானமும் நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு தரும்.
யோகா நிறைய நோய்களுக்கு தீர்வு தருகிறது. இதில் ரத்தக் கொதிப்பும் உள்ளடங்கும்.
விபரீத காரணி யோகா :
முதலில் சுவருக்கு எதிராக படுத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சினை நன்றாக இழுத்து, விட வேண்டும். பின் இரு கால்களையும் தூக்கி, சுவற்றில் மேல் ஒட்டியபடி வையுங்கள்.
நேராக நெட்டுக் குத்தலாக உங்கள் கால்கள் சுவற்றில் இருக்கும்படி, உங்கள் பொஸிஷன் இருக்க வேண்டும். தலையையும் உடலையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள்.
10 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பிறகு மெதுவாக கால்களை தாழ்த்தி பழைய நிலைக்கு வாருங்கள்.
உங்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலி இருந்தால், இடுப்பிற்கு, மிருதுவான தலையணை அல்லது துணியினை முட்டுக் கொடுக்கலாம்.
பலன்கள் :
கால்களை மேலே தூக்கி செய்யப்படும் இந்த யோகாவில், வயிற்றுப் பகுதிகளில் உள்ள உறுப்புகள் நன்றாக செயல்படும். பசியினை தூண்டும்.ரத்தத்தின் அடர்த்தி குறையும். ரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும். மன அமைதியை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














