Just In
- 29 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 3 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- Movies Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆரோக்கியம் சம்பந்தமான பொய்கள்!!!
இன்றைய நாகரீக உலகத்தில் அன்றாட பணியில் பலரும் அல்லல் படுவதால், அவர்களது வாழ்க்கையில் மன அழுத்தம் என்ற பேராபத்து உருவாகிறது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்படி அன்றாட வாழ்க்கையில் நல்லது என எண்ணி நாம் ஈடுபடும் சில கெட்ட பழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
நம்மில் 90 சதவீதமானவர்களுக்கு காலையில் அலாரத்தை ஆஃப் செய்து விட்டு, மீண்டும் தூங்கும் பழக்கம் இருக்கும். காலையில் இப்படியான இடையூறான தூக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லதல்ல. காலையில் ஒரு நேரத்திற்கு அலாரம் வைத்திருந்தீர்கள் என்றால், அந்த நேரத்தில் எழுத்து கிளம்பும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
அலாரத்தை இடைவெளி விட்டு அடிக்க செய்து, மீண்டும் தூங்க சென்றால், அது உங்கள் உடலை அதிக மந்தமாகவே மாற்றும். அதே போல், வார இறுதியில் மது அருந்துவது என்பது நாம் பின்பற்றும் மற்றொரு ஆரோக்கியமற்ற பழக்கமும், ஆரோக்கியம் சம்பந்தமான பொய்யும் ஆகும். மது பானத்தோடு அதிக கலோரிகளை அடங்கிய உணவுகளை வார இறுதியில் உள்ளே தள்ளுவதால், உங்கள் உடல் எடை அதிகரிக்கவே போகிறது. நீங்கள் பின்பற்றக் கூடிய ஆரோக்கியமற்ற பழக்கத்தில் இதுவும் ஒன்றே.
கண்டிப்பான உணவு பழக்கமும் சமநிலையான உணவுகளும் தான் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். நீங்க எதற்காக இப்போ காத்திருக்கீங்க? ஒவ்வொரு நாளும், நாம் சொல்லக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தான பொய்களைப் பற்றி பார்க்கலாமா? இத்தகைய பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான நேரம் இது.
தூங்கும் நேரம்
வெறும் 6 மணிநேரம் போதும் என இல்லாமல், ஒவ்வொரு நாள் இரவும் 7-8 மணிநேர தூக்கம் தேவை. உங்கள் உடலுக்கு அதிக நேரத்திற்கு ஓய்வு தேவை. அப்போது தான் உங்களால் ஆற்றல் திறனுடனும், ஆரோக்கியத்துடனும் காலையில் கண் விழிக்க முடியும்.
வார இறுதி குடிப்பழக்கம்
வார இறுதியில் மட்டும் தானே என எண்ணி, மதுபானம் குடிப்பது ஆரோக்கியமற்றது. வார இறுதியில் வயிறு முட்ட குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இது உங்களின் ஒட்டுமொத்த நரம்பியல் அமைப்பையும் பாதித்துவிடும். நீங்கள் ஒன்றோ அல்லது இரண்டு பெக் மட்டும் குடிக்க விரும்புபவர் என்றால், குறைந்த அளவில் குடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதேப்போல் அவற்றுடன் சோடா பானங்களை கலக்கும் பழக்கத்தையும் கைவிடுங்கள். அது உறுப்புகளுக்கு நல்லதல்ல.
உணவுகளைத் தவிர்ப்பது
உணவுகளைத் தவிர்ப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல எடை குறைய போவதில்லை. அது உடல் எடையை அதிகரிக்க தான் போகிறது. இதனால் நீங்கள் சோம்பேறியாகவும், வலுவிழந்தும் போவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக எதிர்ப்பார்க்கும்.
புகைப்பிடித்தல்
எப்போதாவாது புகைப்பிடிப்பதோ அல்லது புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதோ உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடாது என எண்ணி விடாதீர்கள். இரண்டு வழிகளிலும், நீங்கள் கார்பனை நுரையீரலுக்குள் சுவாசிக்கிறீர்கள். இதனால் நீங்கள் நீண்ட நாள் வாழ முடியாமல் போகும். அதனால் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்தால் வாயை மூடிக்கொள்ளவும். அப்பழக்கம் இருந்தால் அதனை கைவிடவும்.
காபி vs கோக்
காபியை கோக் பானத்திற்கு மாற்றாக எண்ணக்கூடாது என கூறுகிறார்கள். ஏனென்றால் இவை இரண்டிலுமே காப்ஃபைன் போன்ற சமமான அளவிலான எதிர்மறை குணங்கள் அடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக காபி குடிக்கலாம். அதேப்போல் தான் கோக் பானமும். ஆனால் பெரும்பாலும் அவைகளை பருக அறிவுறுத்தப்படுவதில்லை.