Just In
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 5 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 6 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 6 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏன் ஒருமுறை சூடு செய்த நீரை, மறுமுறை சூடு செய்து குடிக்க கூடாது என தெரியுமா?
பொதுவாக ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பார்கள். அதே போல தான் சிலவகை உணவுகளை மீண்டும் சூடு செய்து உண்ணக் கூடாது.
அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம், சிக்கன் போன்ற உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதால் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு விளையும். ஆனால், நாம் குக்டிக்கும் தண்ணீரை கூட மறுமுறை சூடு செய்துக் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?
குழாய் நீரும், கெமிக்கலும்!
குழாயில் நீங்கள் பிடித்து குடிக்கும் தண்ணீர் அவ்வளவு நல்லது அல்ல. அதில் 316 வகையிலான கெமிக்கல் கலப்பு இருக்கலாம்.
ஆர்சனிக்
குளோரின்
எரிபொருள் ஓட்டு
கன உலோகங்கள்
தொழிற்துறை கரைப்பான்கள்
கதிரியக்க ஓரிடத்தான்கள்
ஃபுளோரைடு, மற்றும் பல கலப்புகள் சேர்ந்து தான் குழாய் நீரில் வருகின்றன.
சூடு செய்தல்!
நீங்கள் நீரை சூடு செய்யும் போது இந்த கெமிக்கல்கள் நீக்கப்படுவதில்லை. நுண்ணுயிர்கள் தான் அழிகின்றன.
உண்மையில் நீரை சூடு செய்யும் போது இந்த கெமிக்கல்கள் செறிவடைகின்றன. தண்ணீர் ஆவியாகிறது, இந்த கெமிக்கல்கள் அப்படியே படிந்து தங்கிவிடுகின்றன.
மோசம்!
இப்படி தண்ணீரில் தங்கும் கெமிக்கல்கள், தண்ணீரை மிகவும் மோசமாக செய்கிறது. எனவே, மீண்டும், மீண்டும் தண்ணீரை சூடு செய்வதால் இது அதிக அபாயமாகிறது.
அபாயங்கள்!
ஆர்சனிக் குமட்டல், வானது, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உண்டாக காரணியாக இருக்கிறது. நாள்ப்பட இது புற்றுநோய் செல்களை கூட உண்டாக்கலாம்.
குளோரின்!
அதிக சொறிவுற்ற குளோரின் புற்று நோய் கட்டிகள் உண்டாவதற்கு 93% காரணியாக இருக்கிறது.
எனவே, குழாய் நீரை மறுபடியும், மறுபடியும் சூடு செய்து குடிக்க வேண்டாம்.
மைக்ரோவேவ்!
சிலர் மைக்ரோவேவில் டீயை சூடு செய்து குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகப்பெரிய அபாயகரமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூப்பர்ஹீட்!
மைர்க்ரோவேவ் தண்ணீர் மூலக்கூறுகளை வேகமாக சூடு செய்யும் தன்மை கொண்டது. இதனால், மூலக்கூறுகள் ஆவியாகும் முன்னரே அதிக சூடு ஆகிறது. இந்நிலையில் தண்ணீரை "சூப்பர்ஹீட்" நிலையை அடைந்ததாக கூறுகின்றனர்.
கொதிநிலை அடையாமல், நீர் கொதிக்காமலேயே மைக்ரோவேவ் நீரை அதிக சூடாக்குகிறது. இதனால் மைக்ரோவேவில் தண்ணீரை சூடு செய்து குடிப்பது, டீ போன்றவற்றை சூடு செய்வது சரியான முறையல்ல என கூறப்படுகிறது.