Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 8 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!
பொதுவாகவே நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், கண், வாய், சருமத்தில் தோன்றும் அறிகுறிகளை வைத்தும் நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியும்.
எச்சில் துப்புவது என்பது நமது ஊர்களில் ஒருவரை அவமதிப்பது போலவும், ஓர் அநாகரீக செயலாகவும் காணப்படுகிறது. ஆனால், லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சிலை வைத்து மரணத்தை முன்னரே அறிய முடியும் என ஓர் ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
ஆன்டி-பாடீஸ் குறைவு
உங்கள் எச்சிலில் ஆன்டி- பாடி எண்ணிக்கை குறைவதை வைத்தே நீங்கள் மரணமடையும் அபாயத்தில் உள்ளீர்கள் என கண்டறியலாம்.
இம்யூனோக்ளோபுலின் சுரப்பி
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தான், எச்சிலில் இருக்கும் பொதுவான ஆன்டி- பாடி எண்ணிக்கை மரண விகித்தத்தோடு ஒத்துப்போவது தெரிய வந்தது.
தொற்று நோய் அபாயம்
வெள்ளை இரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள் ஆகிய இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது ஆகும். இந்த ஆய்வில் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) -ல் ஏற்படும் / அதிகரிக்கும் எதிர்மறை சதவீதத்தை வைத்து மரணத்தை கணக்கிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் மரணங்கள்
நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவதை கூட இதை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தாக்கங்கள்
வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாட்டுடன் சேர்த்து மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்றவை இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் சதவீதம் குறைய காரணிகளாக இருக்கின்றன.
ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள்
இந்த ஆய்வில் மொத்தம் 639 நபர்கள் கலந்துக் கொண்டனர். 1995-ம் ஆண்டு இவர்கள் 63 வயதில் இருந்த போது எச்சில் சேமிக்கப்பட்டது. ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்களை பின்தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாசிரியர்
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிலிப்ஸ் எனும் ஆய்வாசிரியர் தான் இந்த ஆய்வை நடத்தினார். உடல்நல பரிசோதனை செய்யும் போது எச்சிலை வைத்தும் பரிசோதிக்க வேண்டும். இதை வைத்து நமது உடலில் பாதுகாப்பு அளவு எந்தளவு இருக்கிறது என கண்டறிய முடியும் என பிலிப்ஸ் கூறியுள்ளார்.