Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!
பொதுவாகவே நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், கண், வாய், சருமத்தில் தோன்றும் அறிகுறிகளை வைத்தும் நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியும்.
எச்சில் துப்புவது என்பது நமது ஊர்களில் ஒருவரை அவமதிப்பது போலவும், ஓர் அநாகரீக செயலாகவும் காணப்படுகிறது. ஆனால், லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சிலை வைத்து மரணத்தை முன்னரே அறிய முடியும் என ஓர் ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.

ஆன்டி-பாடீஸ் குறைவு
உங்கள் எச்சிலில் ஆன்டி- பாடி எண்ணிக்கை குறைவதை வைத்தே நீங்கள் மரணமடையும் அபாயத்தில் உள்ளீர்கள் என கண்டறியலாம்.

இம்யூனோக்ளோபுலின் சுரப்பி
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தான், எச்சிலில் இருக்கும் பொதுவான ஆன்டி- பாடி எண்ணிக்கை மரண விகித்தத்தோடு ஒத்துப்போவது தெரிய வந்தது.

தொற்று நோய் அபாயம்
வெள்ளை இரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள் ஆகிய இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது ஆகும். இந்த ஆய்வில் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) -ல் ஏற்படும் / அதிகரிக்கும் எதிர்மறை சதவீதத்தை வைத்து மரணத்தை கணக்கிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் மரணங்கள்
நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவதை கூட இதை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தாக்கங்கள்
வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாட்டுடன் சேர்த்து மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்றவை இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் சதவீதம் குறைய காரணிகளாக இருக்கின்றன.

ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள்
இந்த ஆய்வில் மொத்தம் 639 நபர்கள் கலந்துக் கொண்டனர். 1995-ம் ஆண்டு இவர்கள் 63 வயதில் இருந்த போது எச்சில் சேமிக்கப்பட்டது. ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்களை பின்தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாசிரியர்
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிலிப்ஸ் எனும் ஆய்வாசிரியர் தான் இந்த ஆய்வை நடத்தினார். உடல்நல பரிசோதனை செய்யும் போது எச்சிலை வைத்தும் பரிசோதிக்க வேண்டும். இதை வைத்து நமது உடலில் பாதுகாப்பு அளவு எந்தளவு இருக்கிறது என கண்டறிய முடியும் என பிலிப்ஸ் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications