Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!
பொதுவாகவே நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், கண், வாய், சருமத்தில் தோன்றும் அறிகுறிகளை வைத்தும் நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியும்.
எச்சில் துப்புவது என்பது நமது ஊர்களில் ஒருவரை அவமதிப்பது போலவும், ஓர் அநாகரீக செயலாகவும் காணப்படுகிறது. ஆனால், லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சிலை வைத்து மரணத்தை முன்னரே அறிய முடியும் என ஓர் ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.

ஆன்டி-பாடீஸ் குறைவு
உங்கள் எச்சிலில் ஆன்டி- பாடி எண்ணிக்கை குறைவதை வைத்தே நீங்கள் மரணமடையும் அபாயத்தில் உள்ளீர்கள் என கண்டறியலாம்.

இம்யூனோக்ளோபுலின் சுரப்பி
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தான், எச்சிலில் இருக்கும் பொதுவான ஆன்டி- பாடி எண்ணிக்கை மரண விகித்தத்தோடு ஒத்துப்போவது தெரிய வந்தது.

தொற்று நோய் அபாயம்
வெள்ளை இரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள் ஆகிய இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது ஆகும். இந்த ஆய்வில் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) -ல் ஏற்படும் / அதிகரிக்கும் எதிர்மறை சதவீதத்தை வைத்து மரணத்தை கணக்கிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் மரணங்கள்
நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவதை கூட இதை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தாக்கங்கள்
வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாட்டுடன் சேர்த்து மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்றவை இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் சதவீதம் குறைய காரணிகளாக இருக்கின்றன.

ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள்
இந்த ஆய்வில் மொத்தம் 639 நபர்கள் கலந்துக் கொண்டனர். 1995-ம் ஆண்டு இவர்கள் 63 வயதில் இருந்த போது எச்சில் சேமிக்கப்பட்டது. ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்களை பின்தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாசிரியர்
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிலிப்ஸ் எனும் ஆய்வாசிரியர் தான் இந்த ஆய்வை நடத்தினார். உடல்நல பரிசோதனை செய்யும் போது எச்சிலை வைத்தும் பரிசோதிக்க வேண்டும். இதை வைத்து நமது உடலில் பாதுகாப்பு அளவு எந்தளவு இருக்கிறது என கண்டறிய முடியும் என பிலிப்ஸ் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications