Latest Updates
-
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு ஏன் 234 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க! -
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம் -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது!
யாரும் அருகில் வர முடியாத அளவு உங்க வாய் நாற்றம் அடிக்கிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...
ஒவ்வொருவரும் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இதை பிரச்சனை என்பதை விட சங்கடம் எனலாம். வாய் துர்நாற்றம் இருந்தால், அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரிடம் எதையும் கலந்தாலோசிக்க முடியாமல், எங்கு நம் வாய் துர்நாற்றம் அவர்களின் முகத்தை சுளிக்க செய்யுமோ என்ற எண்ணத்துடனேயே, சரியாக யாருடனும் பேச முடியாமல் தவிப்போம்.
ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான கை வைத்தியங்கள்!!!
இப்படி ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க ஒருசில வழிகள் உள்ளன. அவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
இயற்கையான முறையில் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெற சில வழிகள்!!!

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
வாய் உலர்ந்து போனால் தான் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

உணவைத் தவிர்க்க வேண்டாம்
எப்படி வாய் உலர்ந்தால் துர்நாற்றம் வீசுகிறதோ, அதேப் போல் உணவைத் தவிர்த்து வந்தாலும் துர்நாற்றம் வீசும். ஆகவே எப்போதும் உணவைத் தவிர்க்கக்கூடாது. முக்கியமாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

கீரைகளை அதிகம் சாப்பிடவும்
உணவில் குளோரோபில் நிறைந்த உணவுப் பொருட்களான கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

நாக்கை சுத்தம் செய்யவும்
பற்களை துலக்கும் போது, நாக்கை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நாக்கின் மேல் உள்ள வெள்ளை படலம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க அன்றாடம் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

மசாலாப் பொருட்கள்
ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்றவற்றை வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும். குறிப்பாக கிராம்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், வாய் துர்நாற்றத்தை மட்டுமின்றி, ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

காபிக்கு பின் தண்ணீர்
காபி அல்லது டீ குடித்த பின்னர், தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் வாயில் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும்.

சூயிங் கம்
எந்நேரமும் கையில் பிரஷ் அல்லது மௌத் வாய் வைத்துக் கொண்டு சுற்ற முடியாது. எனவே தவறாமல் சுகர்-ப்ரீ கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். குறிப்பாக புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications











