Latest Updates
-
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது?
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணத்தைக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வது என்பது திருமணமான புது மாப்பிள்ளை ஆடி மாதத்தில் சாக்குப்போக்கு சொல்லி மனைவியை பார்க்க செல்வதோடு அதிகமாக இருக்கிறது. ஏனெனில், டார்கெட் என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்திவிடுகிறது.
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!!
மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைக்கு மருந்து மாத்திரை சாப்பிடும் அவலத்தை விட பெரியதை வேறு எங்கு காண முடியும். "இதுக்கு ஏன் மருந்து மாத்திரை? பச்ச தண்ணியில கொஞ்ச நேரம் குளிச்சா போதுமே வெடுக்குன்னு இருக்கும்" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!
ஆம், உடல் சுறுசுறுப்படைய, தசை வலி, மன அழுத்தம் போன்றவற்றுக்கு பச்சை தண்ணி குளியல் நல்ல பயனளிக்கிறது...

சுறுசுறுப்பான மனநிலை
பச்சை தண்ணீரில் குளிப்பதால் இரத்தத்தில் பீட்டா - என்டோர்ஃபின் மற்றும் நோராட்றேனலைன் (Beta-Endorphin and Noradrenaline) போன்றவற்றின் அளவு அதிகரிக்கிறது. இவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மெடிக்கல் ஹைப்போதிசஸ் என்ற மருத்துவ நாளிதழில் வெளிவந்த ஆய்வறிக்கையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பச்சை தண்ணீரில் நீராடினாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

தசை இலகுவாக உணர
தசை பகுதியை நீங்கள் கடுமையாக உணரும் பட்சத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவதால் அதை சரி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகோ அல்லது நீண்ட நேரம் வேலை செய்ததால் ஏற்படும் சோர்வு போன்றவற்றில் இருந்து தீர்வுக் காண ஐந்து நிமிடங்கள் பச்சை தண்ணீரில் நீராடினாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை உடல் முழுக்க சீராக்க உதவி, தசையை இலகுவாக உணர வைக்கிறது.

சருமம் வலுபெற
சருமத்தின் வலுவை அதிகரிக்கவும் இது வெகுவாக பயனளிக்கிறது. முதலில் இதமான நீரில் குளித்த பிறகு, பச்சை தண்ணீரில் சில நிமிடங்கள் நீராடுவதால் சருமம் இறுக்கமாகவும், சரும நுண்துளைகள் குறைக்கவும் இது உதவுகிறதாம்.

தலைமுடி நலன்
தலை முடி வறட்சி காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் குளிர்ந்த நீரில் நீராடுவதால் நல்ல தீர்வுக் காண முடியும் என்று கூறப்படுகிறது. இது, தலை முடி வறட்சியை போக்கி, மிருதுவான, மினுமினுப்பான கூந்தல் பெற உதவுகிறது.

மன அழுத்தத்தை போக்க
பச்சை தண்ணீர் முகத்தில் படும்படி நீராடுவதால் இதயத் துடிப்பு சீராகி மன அழுத்தத்தை குறைக்க வைக்க முடியுமாம். அதிகப்படியாக நீங்கள் மன அழுத்தத்தை உணரும் போது ஐந்து நிமிடம் குளிர்ந்த நீரில் நீராடினாலே போதும் நல்ல தீர்வினைக் காண முடியும்.



Click it and Unblock the Notifications











