Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!
பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து பெறப்படுகிறது கசகசா. பாப்பி மலர்களை பெரும்பாலும் வெளிநாடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த பாப்பி மலர்களின் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே இருக்கும் விதை தான் கசகசா.
அசைவ உணவுகளில் ருசியை அதிகரிக்க கசகசா சேர்க்கப்படுவதுண்டு. சில இனிப்பு மற்றும் கேக் உணவு வகைகளில் கூட கசகசா சேர்க்கப்படுகிறது. கசகசா உணவில் சுவையை மட்டுமின்றி, உடலில் நலனையும் அதிகரிக்க உதவுகிறது.
கசகசா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இதுவொரு சிறந்த மூலகை பொருளும் கூட, இனி இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து காணலாம்...

உடலுக்கு குளிர்ச்சி
கசகசா தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டள்ளது. இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும் என எச்சரிக்கப்படுகிறது.

குழந்தைகளின் அழுகை குறையும்
ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். இது சூட்டை குறைக்கும் தன்மை உடையது ஆதலால், சூட்டின் தன்மையால் அழும் குழந்தைகள் இவ்வாறு செய்வதால், உடனே அழுகையை நிறுத்தும்.

அம்மை தழும்புகள் மறையும்
பத்து கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்பு ஏற்பட இடம் மெல்ல, மெல்ல மறையும்.

வயிற்றுப் போக்கை நிறுத்தும்
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும் என்று கூறுகிறார்கள், இது பாட்டிக் காலத்து வைத்திய முறையாகும்.

பொடுகு தொல்லைக்கு தீர்வு
பொடுகு தொல்லை இருப்பவர்கள், தலைக்கு குளிக்கும் முன்னர், சிறிதளவு கசகசாவை ஊறவைத்து அறைஹ்து தலையில் தடவி, சிறிது நேரம் நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால், நாள்ப்பட பொடுகு மறையும்.



Click it and Unblock the Notifications