Just In
- 12 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 45 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 48 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!
பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து பெறப்படுகிறது கசகசா. பாப்பி மலர்களை பெரும்பாலும் வெளிநாடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த பாப்பி மலர்களின் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே இருக்கும் விதை தான் கசகசா.
அசைவ உணவுகளில் ருசியை அதிகரிக்க கசகசா சேர்க்கப்படுவதுண்டு. சில இனிப்பு மற்றும் கேக் உணவு வகைகளில் கூட கசகசா சேர்க்கப்படுகிறது. கசகசா உணவில் சுவையை மட்டுமின்றி, உடலில் நலனையும் அதிகரிக்க உதவுகிறது.
கசகசா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இதுவொரு சிறந்த மூலகை பொருளும் கூட, இனி இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து காணலாம்...
உடலுக்கு குளிர்ச்சி
கசகசா தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டள்ளது. இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும் என எச்சரிக்கப்படுகிறது.
குழந்தைகளின் அழுகை குறையும்
ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். இது சூட்டை குறைக்கும் தன்மை உடையது ஆதலால், சூட்டின் தன்மையால் அழும் குழந்தைகள் இவ்வாறு செய்வதால், உடனே அழுகையை நிறுத்தும்.
அம்மை தழும்புகள் மறையும்
பத்து கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்பு ஏற்பட இடம் மெல்ல, மெல்ல மறையும்.
வயிற்றுப் போக்கை நிறுத்தும்
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும் என்று கூறுகிறார்கள், இது பாட்டிக் காலத்து வைத்திய முறையாகும்.
பொடுகு தொல்லைக்கு தீர்வு
பொடுகு தொல்லை இருப்பவர்கள், தலைக்கு குளிக்கும் முன்னர், சிறிதளவு கசகசாவை ஊறவைத்து அறைஹ்து தலையில் தடவி, சிறிது நேரம் நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால், நாள்ப்பட பொடுகு மறையும்.