Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
தூக்கம் குறைந்தால் பிபி எகிறும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

இத்தாலியைச் சேர்ந்த பிஸா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. 58 வயதுடைய உயர்ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் சோதனை செய்தபோது அனைவரும் 5 மணிநேரத்திற்கு குறைவாக உறங்குவது கண்டறியப்பட்டது.
இதேபோல் மற்றொரு ஆய்வில் 75 வயதிற்கு மேற்பட்ட தூக்க குறைபாடினால் பாதிக்கப்பட்ட 784 பேர் பங்கேற்றனர். 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் சராசரியாக இருந்தது. அதே சமயம் தூக்கக்குறைபாடினால் பாதிக்கப்பட்ட பின்னர் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் 243 பேர் உயர்ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சீக்கிரம் உறங்கப் போங்க
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்டுவேர்டு மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களை வழக்கமா உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தனர். 6 வாரம் தொடர்ந்து அவர்கள் நன்றாக உறங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்து சராசரி அளவாக இருந்தது. எனவே வழக்கத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தூங்கினால் ரத்த அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











