Latest Updates
-
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்... -
புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம் -
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
செல்லப்பிராணிகளாலும் உடல் ஆரோக்கியம் அடையும்!!!

அத்தகைய செல்லப் பிராணிகளிடம் இருக்கும் ஒரு சிலவற்றை நாமும் கடைபிடித்தால் ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழலாம். நண்பனாக நினைக்கும் செல்லப் பிராணியிடம் இருந்து ஒரு சில பாடங்களை கற்றுக் கொள்வதில் யாரும் வெட்கப்பட வேண்டாம். சரி, என்ன பழக்கங்களை நாம் கற்றுக்கொண்டு, கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போமா!!!
1. பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு வெளியே 'வாக்கிங்' அல்லது 'ஜாக்கிங்' அழைத்துச் சென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நாய்களுக்கு வெளியே அழைத்துச் செல்கிறோம் என்று தெரிந்தால் அது துள்ளிக் குதித்து ஓடி வரும். இதற்காக "ஹாவார்டு யூனிவர்சிட்டி"யில் நீண்ட நேரம் நடந்தால் என்ன நன்மை என்று ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் எவ்வளவு தூரம் நடக்கிறோமோ அவ்வளவு நாள் உயிருடன் வாழலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீண்ட நாட்கள் உயிரோடு வாழ, வீட்டில் வளர்க்கும் நாயுடன் தினமும் 'வாக்கிங்' செல்லுங்கள். இவ்வாறு செல்வதால் சுத்தமான காற்றை சுவாசித்து, உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
2. உடலானது ஆரோக்கியமாக இருக்க நன்கு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் ஒரு ஆய்வில் பகல் நேரத்தில் 15 நிமிடம் தூங்குவது, பல மணிநேரம் தூங்குவதற்கு சமம் என்று கண்டுகிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பழக்கம் அனைத்து பிராணிகளிடமும் இருக்கும். வேண்டுமென்றால் கவனித்துப் பாருங்கள், எந்த ஒரு பிராணியும் நீண்ட நேரம் தூங்காது. இதனால் தான் அனைத்து பிராணிகளும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட் ஆகவும் இருக்கிறது.
அதே போல் மனிதர்களாகிய நாமும் அதிக வேலையின் காரணமாக 8-9 மணிநேரம் தூங்க முடியாது. ஆகவே அப்படி இருப்பவர்கள் எப்போதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூங்கி ஓய்வு எடுக்கலாம். இதுவும் உடலுக்கு ஒரு சிறந்த பலனை கொடுக்கும்.
3. அனைத்து பிராணிகளும் உணவு உண்பதில் ஒரு டையட் மேற்கொள்ளும். மேலும் அது உண்ணும் போது உணவை நன்கு மென்று அரைத்து பின்னரே விழுங்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் உணவை எப்போதும் சரியான நேரத்திற்கு உண்ணும். ஆகவே இத்தகைய பழக்கத்தையும் நமது செல்லப் பிராணிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் பல நோய்களில் இருந்து உடலைக் காக்கலாம்.
4. நாம் சில சமயம் நமது செல்லப்பிராணிகளை அழைக்கும் போது அவை கேட்காத மாதிரி இருக்கும். ஏனெனில் நமக்கு ஞாபகம் இருக்காது, நாம் அதனைத் திட்டியிருப்பது. ஆனால் அது சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு நம்மிடம் கோபமாக இருக்கும். இருப்பினும் அந்த கோபம் நம் மீது இருக்கும் அன்பினில், அதற்கு விரைவில் போய்விடும். அது போல் நம்மை எவரேனும் திட்டினாலோ அல்லது கெடுதல் செய்தாலோ, நாம் மிகுந்த டென்சன் ஆகாமல், பொறுமையாக இருந்து நம் மனதை அமைதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தேவையில்லாததை நினைவில் கொள்ளாமல் மறந்துவிடவும்.
5. செல்லங்களை நன்கு கவனித்தால், அவை நன்கு மூச்சை உள்வாங்கி வெளிவிடுவதை நன்கு உணரலாம். இது ஒரு நல்ல பழக்கம். ஏனெனில் காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட்டால், உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது. இதனால் மனஅழுத்தம் குறைவதோடு, மனதில் இருக்கும் கஷ்டமும் குறைந்து ஒரு நிம்மதியை உணர முடியும்.
ஆகவே இவற்றையெல்லாம் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து கற்றுக் கொண்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











