மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!

By Maha

இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது. அதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை சாப்பிட்டால் நிச்சயம் உடல்நலம் சரியாகிவிடும், பின் எதற்கு மருத்துவரை அணுக வேண்டும் என்று அலட்சியத்தோடு ஒரு எண்ணம் இருப்பதால் தான். அவ்வாறு அலட்சியத்தோடு, எந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் போடுவதால், உடல் நலத்திற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எப்போதும் அந்த மாதிரியான மருந்துகளை வாங்கிப் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் என்ன பிரச்சனை உடலுக்கு ஏற்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

பொதுவாகவே தூக்க மாத்திரைகள் ஒரு வகையான அடிமைத் தன்மையை ஏற்படுத்தும் பொருள் தான். ஏனெனில் அது முதலில் மூளை செயல்களைத் தான் பாதிக்கும். அதிலும் இதனை தினமும் போட்டு தூங்குபவர்களுக்கு, ஒரு நாள் போடாமல் இருந்தாலும், தூக்கம் வராமல் இருக்கும். சொல்லப்போனால் அதற்கு அடிமை ஆகிவிட்டது போல் இருப்பார்கள். மேலும் சில ஆய்வுகளில் தூக்க மாத்திரைகள் மன அழுத்தத்தை அதிகம் ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆன்டாசிட்

ஆன்டாசிட்

அசிடிட்டிக்கு விற்கப்படும் மாத்திரைகளால் நல்லது ஏற்படுவதை விட, பாதிப்பு தான் அதிகம் ஏற்படும். அதிலும் எப்போதெல்லாம் வயிற்று சரியாக இல்லை, சற்று எரிச்சலோடு இருக்கிறதோ, அப்போது இந்த மாத்திரைகளை சாக்லேட் போல் சாப்பிடுவார்கள். இதனால் உண்மையில் உடலில் செரிமானக் கோளாறு ஏற்படுவதோடு, பின்னர் அல்சர், பைல்ஸ், சிறுநீரகக் கல் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.

தலைவலி மாத்திரைகள்

தலைவலி மாத்திரைகள்

அனைவருக்குமே ஏற்படும் உடல் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. அந்த நேரத்தில் அனைவரின் மனதில் தோன்றும் ஒரு விஷயம், எந்த மாத்திரையை போட்டால், தலைவலி குறையும் என்பது தான். அவ்வாறு அந்த மாத்திரைகளைப் போடுவதால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் வலியை குறைக்க ஏதாவது மசாஜ் செய்யலாம்.

சளி மற்றும் இருமல் மருந்துகள்

சளி மற்றும் இருமல் மருந்துகள்

பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்பட்டால் தரும் மருந்துகள் அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான். அதிலும் அந்த மருந்துகள் நுரையீரலைத் தான் பாதிக்கும். ஆகவே அப்போது எப்போதும் மருத்துவரிடம் ஆரோசனையின்றி எந்த மருந்துகளையும் சாப்பிடக்கூடாது. மேலும் அளவு தெரியாமல் அதிக அளவில் கொடுத்துவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்

மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்

அதிக வேலைச்சுமையின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க மாத்திரைகளை சிலர் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால், இந்த மருந்துகள் மூளையை நன்கு செயல்படுத்தக்கூடிய செரோட்டீன் மற்றும் குளுக்கோஸின் அளவை மாற்றிவிடும். அதனால் தான், இந்த மருந்துகளை சாப்பிட்டால், உடல் பருமனடைகிறார்கள். ஆகவே மனஅழுத்தத்திற்கான மருந்துகள் உடல் நலத்தை பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆகவே எந்த ஒரு உடல் பிரச்சனைக்கும் செயற்கை மருந்துகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை விட, இயற்கை மருந்துகளை சாப்பிடுவது நல்லது. மேலும் அவ்வாறு சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடலில் உள்ள பிரச்சனையும் எந்த ஒரு பக்கவிளைவுமின்றி நீங்கிவிடும்.

Desktop Bottom Promotion