Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
உங்க வீட்ல ஏசி இருக்கா? ஆஸ்துமா வருமாம்!

கெம் மருத்துவமனையில் மார்பக சிகிச்சை பிரிவு சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பிரிவு தலைவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மும்பையில் அந்தேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து 486 வீடுகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்களின் வீடுகளில் ஏசி பொருத்தப்பட்டிருக்கும் சூழல், வீடுகளின் நிலை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் சுவர்களில் படிந்து அங்கிருந்து பூஞ்சைகள் உற்பத்தியாகியிருப்பது கண்டறியப்பட்டது. ஏசி போடுவதன் மூலம் ஜன்னல்கள் எதையும் திறக்காமல் மூடியே வைத்திருப்பதால் சூரிய வெளிச்சம் எதுவும் வீட்டுக்குள் வராமல் சிறு பூச்சிகள், கிருமிகள் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு அந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜியை தோற்றுவிக்கிறது என்று நெஞ்சகப்பிரிவு மருத்துவர் ரோகினி தெரிவித்துள்ளார். சுவர்களில் உள்ள பூஞ்சைகள் நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு வெளியே சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படுகிறது எனில் நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு உள்ளேயே ஏசி காரணமாக மாசு ஏற்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். எனவே எப்பொழுது பார்த்தாலும் ஏசி அறையில் அமர்ந்திருப்பதை விட சிறிதுநேரம் ஜன்னலை திறந்து சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருமாறு செய்யவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











