Latest Updates
-
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உங்க வீட்ல ஏசி இருக்கா? ஆஸ்துமா வருமாம்!

கெம் மருத்துவமனையில் மார்பக சிகிச்சை பிரிவு சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பிரிவு தலைவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மும்பையில் அந்தேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து 486 வீடுகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்களின் வீடுகளில் ஏசி பொருத்தப்பட்டிருக்கும் சூழல், வீடுகளின் நிலை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் சுவர்களில் படிந்து அங்கிருந்து பூஞ்சைகள் உற்பத்தியாகியிருப்பது கண்டறியப்பட்டது. ஏசி போடுவதன் மூலம் ஜன்னல்கள் எதையும் திறக்காமல் மூடியே வைத்திருப்பதால் சூரிய வெளிச்சம் எதுவும் வீட்டுக்குள் வராமல் சிறு பூச்சிகள், கிருமிகள் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு அந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜியை தோற்றுவிக்கிறது என்று நெஞ்சகப்பிரிவு மருத்துவர் ரோகினி தெரிவித்துள்ளார். சுவர்களில் உள்ள பூஞ்சைகள் நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு வெளியே சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படுகிறது எனில் நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்கு உள்ளேயே ஏசி காரணமாக மாசு ஏற்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். எனவே எப்பொழுது பார்த்தாலும் ஏசி அறையில் அமர்ந்திருப்பதை விட சிறிதுநேரம் ஜன்னலை திறந்து சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருமாறு செய்யவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











