Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிட்டால் பார்வை பறிபோகும்
வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் கண்பார்வையை பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி ஒருமுறை அல்லது இரண்டுமுறை ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் கண்பார்வை பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஐரோப்பாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தினசரி இரண்டு வேளை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டவர்கள் கண்பார்வை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
வலிநிவாரணி மாத்திரைகள்
கண் வலி ஏற்படுவது இல்லையென்றாலும்,படிப்பது, டிரைவ் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு நோய்களுக்காக வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
நெதர்லாந்தில் உள்ள நியூரோசயின்ஸ் அக்கடமிக் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் பால்ஸ் டி ஜாங் என்பவர் தனது குழுவினருடன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதயநோய் பாதிப்புகளுக்காக ஏராளமானோர் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகள் மூலம் விழித்திரைகள் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.
கேன்சர் குணமாகும்
இருப்பினும் தினமும் குறைந்த அளவான 75 மில்லி கிராம் அளவு ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்டு வந்தால் கோலான் எனப்படும் குடல் புற்றுநோய் குணமடைவதாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக லான்செட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் கோலோன் கேன்சர் நோயால் 6லட்சத்து 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
ஆஸ்பரின் மாத்திரை புற்று நோயை கட்டுப்படுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலை கழக் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ரோத்வெல் கூறுகிறார். கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேன்சரால் பாதிக் கப்பட்ட 8 ஆயிரத்து 282 பேருக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த அறிவுரை கூறியதில் 119 பேர் மட்டு மே இறப்பை தழுவியுள்ளனர். வரும் காலத்தில் இந்த மாத்திரை மற்ற கேன்சர் நோய்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்று உறுதியாக கூற முடியும் என தெரியவந்துள்ளதாக பேராசிரியர் ரோத்வெல் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications